Support Ads
Main Menu
 ·   · 24 posts
  • R

    3 members
  •  · 4 friends

என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது

சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் வெற்றி பெற்று  தங்கப்பதக்கம் வென்ற கனேஸ் இந்துகாதேவி குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் வெற்றி பெற்று முல்லைத்தீவு மாணவி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கனேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பிரதேசத்தின் புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இவர் பெரும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கனேஸ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.
கடந்த வாரம் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் கொடுத்துள்ளார். இவ்வாறு சர்வதேச போட்டியில் வென்று சாதனை படைத்துள்ள இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இவரது வெற்றிக்கு பின்னால் உள்ள வலிகளும் வேதனைகளும் ஏராளம் பாறையொன்றில் முளைத்த பயிர் போல என அவரோடு உரையாடிய போது உணரமுடிந்தது.

கிளிநொச்சியிலிருந்து ஏ-9 வீதியால் சென்று மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் வீதியில் பயணிக்கும் போது கரிப்பட்டமுறிப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது முன்னைய காலத்தில் பெண் யானை இறந்ததால் கரிப்பட்ட முறிப்பு என்று  பெயர் வந்ததாக அந்த ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது முன்னைய காலத்தில் மிகவும் வலிமை கொண்ட ஓர் ஆண் யானையும் பெண் யானையும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் இதில் ஆண் யானை முதலில் இறந்து விட்டதாகவும் அதன் பின்னர் கவலையடைந்த பெண் யானையும் இறந்ததாகவும் ஆண் யானை இறந்த இடம் மணவாளன் பட்டமுறிப்பு என்றும் பெண் யானை இறந்த இடம் கரிப்பட்ட முறிப்பு என்று பெயர் வந்ததாக இந்த ஊர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழர் வரலாற்றிலும் சாதணை படைத்த இடமென்றே கூறமுடியும் இப்படியான வரலாறு கொண்ட மண்ணில் இருந்து தன் அயராத உழைப்பால் சாதனை படைத்த இந்துகாதேவி இப்படியான கிராமத்தின் பிரதான வீதியிலிருந்து ஏறத்தாள மூன்றரைக் கிலோமீற்றர் தொலைவிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட புதியநகர் கிராமத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் கனேஸ் இந்துகாதேவியும் அவரது தாயாரும் வசித்து வருகின்றனர்.
குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெறும் வரையும் யாரும் அவர்களை கண்டு கொள்ளவில்லை என்றும் இப்போது அவரைத் தேடி எத்தனையோ பேர் செல்வதை காணமுடிகின்றது.

குன்றும் குழியும் செம்மண் புழுதியுமாக காணப்படுகின்ற வீதியூடாக போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத புதிய நகர் கிராமத்தில் கடைசியில் அமைந்துள்ள தன்வீட்டிலிருந்து மூன்றரை கிலோமீட்டர் கால்நடையாக சென்று அதிலிருந்து பேருந்துக்காக காத்திருந்து பேருந்தில் ஏறி பயணம் செய்து பயிற்சி பெற்று இன்று இந்த சாதனை படைத்திருக்கிறார்.
சிறுவயதில் தன்னுடைய தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த இந்துகா தேவி வறுமையிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்த சாதனைகளை இப்போது எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நாட்டில் ஏற்பட்ட வன்செயல் காரணமாகஇடம் பெயர்ந்து வவுனியா சிதம்பரபுரத்தில் தங்கியிருந்தனர்.
இவரது தந்தையார் விபத்தொன்றில் உயிரிழந்த நிலையில் இந்துகாதேவி சிறு குழந்தையாக இருக்கும் போதே அவரது தாயார் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில் தேடிச்சென்ற நிலையில் அவரது பேத்தியாருடன் சிறு பராயத்தை கழித்ததுடன் வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை கற்று கடந்த 2013 ஆம் ஆண்டு 08ம் தரத்தில் கரிப்பட்ட முறிப்பு பாடசாலையில் தன்னுடைய கல்வியை மூன்றரைக் கிலோமீட்டர் கால்நடையாக சென்று கல்வி கற்று பின்னர் தன்னுடைய உயர்கல்வியை ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் கற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது வெற்றி தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், முதன்முதலில் சர்வதேச மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வைத்திருக்கின்றேன் இதற்கு நிறையவே கஸ்ரப்பட்டிருக்கின்றேன்.  நிதி உதவி கிடைக்காமல் அதற்காக நிறைய அரசியல்வாதிகளிடமும்; பெரியவர்களிடமும் கதைத்திருந்தேன். எந்த உதவிகளும் கிடைக்கவில்லை கடைசியாக இந்த போட்டிக்கு போவதில்லை என்ற முடிவு எடுத்திருந்தேன்.  கடைசி நேரத்தில் 13 ம்திகதி பாகிஸ்தான் பயணிக்க வேண்டும் 3 லட்சம் எவ்வளவோ சிரம பட்டு கட்டிய நிலையில் இன்னும் 90000 (தொன்னுராயிரம்) தேவைபடுகிறது. சிறு துளி பெரு வெள்ளம். உதவிடும் உறவுகளின் கவனத்திற்கு என ஜனவரி மாதம் 10ந் திகதி வவுனியாவிலுள்ள தமிழ்விருட்சம் அமைப்பின் நிறுவுனர் செல்வராஜா சந்திரகுமார் கண்ணன், தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்த நிலையில் இதனை ஏற்று வவுனியா 93. 96 மகாவித்தியர்கள் நற்பணிமனறம் இந்த நிதியுதவியை வழங்கி போட்டிக்கு சென்று வெற்றி பெறவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.  அவர்களுக்கு என்றும் நான் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றேன் நன்றி கூறுகின்றேன். 

நான் போட்டிக்கு போவதற்கு பணத்தேவைக்காக கேட்டபோது எந்த உதவிகளையும் செய்யாது எனக்கு கடைசிவரை உதவுவதாக தெரிவித்து எதையும் செய்யாத அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி இப்போது என்னைத் தேடி வருகின்றார்கள்.  இந்த உதவியை முதல் செய்திருந்தால் எனக்கு சந்தோஷமாக இருந்திருக்கும் ஏனெனில் என்னைப் போல் ஏராளமானவர்கள் சாதிக்க ஆர்வமுள்ளவர்களாக உள்ளார்கள் அவர்களுக்கு நிதி ஒரு பிரச்சனையாக உள்ளது சமூகத்தில் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் நிறையவே உள்ளது அதை எல்லாம் தாண்டி நாங்கள் முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரை போன்று பலர் சாதிக்க முனைந்தாலும் அவர்களது குடும்பங்களின் வறுமை மற்றும் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது. சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும். (சு. பாஸ்கரன் )


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 581
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் – அக்டோபர் 1, 2023
    இன்றைய ராசி பலன் –  அக்டோபர் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 14ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடு
    ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்
    பிரபஞ்ச பேரருளாம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்செய்யும் தொழிலில் வெற்றிகள் பல காண்போம்பிரபஞ்ச ஆசியுடன் நற்பவி அருளட்டும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.10.2023.  சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.49 வரை த
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 30, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 30, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 13ஆம் திகதி மேஷம்Aries விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 30.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 02.34 வரை பிரதம
    உங்கள் வாழ்க்கை துணை எந்த ஊரிலிருந்து வரப்போறாங்க தெரியுமா?
    ஒரு ஆணுடைய வாழ்க்கை துணையாக வரப்போகிற பெண் எந்த திசையில் இருந்து வரப்போகிறார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? என்றால் ஜோதிடம் முடியும் என்று கூ
    எச்சரிக்கை தரும் பதிவு... (அவசியம் படியுங்கள்...உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்)
    கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீடியோக்கள், அவரது வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த
    படித்ததில் பிடித்தது
    திருமணத்தில் உணவை பரிமாறும் விதமே இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அதுதான் தற்போதைய திருமணத்தில் நான் பார்க்கும் மோசமான விஷயமாக கருதுகிறேன் .அந்த காலங்
    12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்
    மேஷ ராசி:மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்."ஷண்முகம் பார்வதீ புத
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 29, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 29, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 12ஆம் திகதி மேஷம்Aries புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.34 வரை பௌர்ணமி
    நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த இந்த தீபத்தை ஏற்றுங்கள்
    கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவிக்
    மருத்துவ குணமுடைய மூலிகையாக விளங்கும் புதினா
    புதினா ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், ப
    இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு எளிய தீர்வு
    முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முத
    சனி பெயர்ச்சி பலன் 2023 - ராஜயேகம் எந்த ராசிக்கார்களுக்கு?
    கும்பம் ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி
    Ads