·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.

ஆரம்பத்தில் அந்த மக்களிடம் ஒரு அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்திய நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தையே உறைய வைத்த சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம்; 15 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன நிதர்சனா, தனது வீட்டிலிருந்து ஏறக்குறைய 400 மீற்றர் தொலைவிலுள்ள அவரது அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்பத்தினரால் ஆரம்பத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து கிராம மக்கள் பொலிசார் இரானுவத்தினர் எனப்பலரும் இனைந்து தேடுதல்களை மேற்கொண்ட விளைவாக நிதர்சனா உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள்.

அதாவது நான்கு நாட்களின் பின்னர் கடந்த 19ஆம் திகதி சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் ஏற்கனவே சிறுமி கானாமல் போனபின்னர் கிராம மக்களும் இராணுவத்தினர் போலீசார் இணைந்து தேடுதல் மேற்கொண்ட ஒரு பகுதி ஆனால் அப்பகுதியில் ஆரம்பத்தில் சடலம் இல்லை 19ஆம் திகதி குறித்த சடலம் எவ்வாறு அந்தப்பகுதிக்கு வந்துள்ளது என்று மர்மங்கள் தொடர்ந்த நிலையில் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இக்கதைகள் அனைத்தும் உண்மைகளை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது சகோதரியின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவர் ஆகியோரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தொடராக இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமியின் தந்தை இந்தக் கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை வாக்குமூலமாக பொலிசாருக்கு வழங்கியிருந்தார்.அதாவது தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் சிறுமியின் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் குறித்த சிறுமி கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்தமை பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக பல்லின் மாதிரியொன்றை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவின் சகோதரியின் கணவரின் வீட்டிலும் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்ப்படடமை குறிப்பிடத்தக்கது.அத்தோடு நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதனை கண்டறியும் நோக்கில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள சில கிணறுகளின் நீரை இறைத்து பொலிசார் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதே நேரம் விசாரணைகளின் பொருட்டு சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சென்று பார்வையிட்டுள்ளதுடன் சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், இளநீல நிற கறைபடிந்திருந்த மேசையொன்றினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தார்.

சம்பவ இடத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ்.சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

திருகோணலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 7-இல் கல்வி கற்ற யோகராசா நிதர்சனாவின் நினைவாக அவர் பயன்படுத்திய கற்றல் உபகரணங்கள் மாத்திரமே இன்று அவரின் வீட்டில் எஞ்சியுள்ளனஒரு குழந்தை இவ்வுலகிலேயே பிறக்கும் போது, அக்குழந்தைக்கு சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் இடத்து அக்குழந்தை ஒரு நற்பிரஜையாக வளரும், மாறாக இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுமிடத்து அக்குழந்தையினுடைய எதிர்காலம் வேறு திசையில் சென்றுவிடும்.சிறுவர்களின் உடல் உள ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவர்களது குடும்ப சூழல் அமைகின்ற போது, அக்குழந்தையினுடைய வளர்ச்சி எதிர்காலம் என்பன சிறப்பாக அமைகின்றது,மாறாக, குடும்பச்சூழலில் காணப்படுகின்ற குறைபாடுகள் அக்குழந்தையினுடைய உடல் உள வளச்சியின் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.அது போல பல கனவுகளோடு ஏதுமறியா பிஞ்சுள்ளம் புத்தகங்களை சுமந்து கல்வி கற்ற நிதர்சனாவிற்கு அவரது குடும்பத்தினரால் உரிய பாதுகாப்பு வழங்கப்படாது அவருடைய வாழ்வை சிதைக்கவும் அன்பும் அரவணைப்பும் வழங்க வேண்டிய அவரது குடும்பம் உயிரை பறிப்பதற்கே காரணமாக இருப்பதாக இந்த விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது. ( பாஸ்கரன்)

  • 638
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்