Support Ads
Main Menu
 ·   · 24 posts
  • R

    3 members
  •  · 4 friends

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.

ஆரம்பத்தில் அந்த மக்களிடம் ஒரு அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்திய நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தையே உறைய வைத்த சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம்; 15 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன நிதர்சனா, தனது வீட்டிலிருந்து ஏறக்குறைய 400 மீற்றர் தொலைவிலுள்ள அவரது அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்பத்தினரால் ஆரம்பத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து கிராம மக்கள் பொலிசார் இரானுவத்தினர் எனப்பலரும் இனைந்து தேடுதல்களை மேற்கொண்ட விளைவாக நிதர்சனா உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள்.

அதாவது நான்கு நாட்களின் பின்னர் கடந்த 19ஆம் திகதி சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் ஏற்கனவே சிறுமி கானாமல் போனபின்னர் கிராம மக்களும் இராணுவத்தினர் போலீசார் இணைந்து தேடுதல் மேற்கொண்ட ஒரு பகுதி ஆனால் அப்பகுதியில் ஆரம்பத்தில் சடலம் இல்லை 19ஆம் திகதி குறித்த சடலம் எவ்வாறு அந்தப்பகுதிக்கு வந்துள்ளது என்று மர்மங்கள் தொடர்ந்த நிலையில் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இக்கதைகள் அனைத்தும் உண்மைகளை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது சகோதரியின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவர் ஆகியோரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தொடராக இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமியின் தந்தை இந்தக் கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை வாக்குமூலமாக பொலிசாருக்கு வழங்கியிருந்தார்.
அதாவது தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் சிறுமியின் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் குறித்த சிறுமி கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்தமை பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக பல்லின் மாதிரியொன்றை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவின் சகோதரியின் கணவரின் வீட்டிலும் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்ப்படடமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதனை கண்டறியும் நோக்கில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள சில கிணறுகளின் நீரை இறைத்து பொலிசார் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதே நேரம் விசாரணைகளின் பொருட்டு சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சென்று பார்வையிட்டுள்ளதுடன் சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், இளநீல நிற கறைபடிந்திருந்த மேசையொன்றினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தார்.

சம்பவ இடத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ்.சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

திருகோணலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 7-இல் கல்வி கற்ற யோகராசா நிதர்சனாவின் நினைவாக அவர் பயன்படுத்திய கற்றல் உபகரணங்கள் மாத்திரமே இன்று அவரின் வீட்டில் எஞ்சியுள்ளன
ஒரு குழந்தை இவ்வுலகிலேயே பிறக்கும் போது, அக்குழந்தைக்கு சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் இடத்து அக்குழந்தை ஒரு நற்பிரஜையாக வளரும், மாறாக இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுமிடத்து அக்குழந்தையினுடைய எதிர்காலம் வேறு திசையில் சென்றுவிடும்.
சிறுவர்களின் உடல் உள ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவர்களது குடும்ப சூழல் அமைகின்ற போது, அக்குழந்தையினுடைய வளர்ச்சி எதிர்காலம் என்பன சிறப்பாக அமைகின்றது,
மாறாக, குடும்பச்சூழலில் காணப்படுகின்ற குறைபாடுகள் அக்குழந்தையினுடைய உடல் உள வளச்சியின் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
அது போல பல கனவுகளோடு ஏதுமறியா பிஞ்சுள்ளம் புத்தகங்களை சுமந்து கல்வி கற்ற நிதர்சனாவிற்கு அவரது குடும்பத்தினரால் உரிய பாதுகாப்பு வழங்கப்படாது அவருடைய வாழ்வை சிதைக்கவும் அன்பும் அரவணைப்பும் வழங்க வேண்டிய அவரது குடும்பம் உயிரை பறிப்பதற்கே காரணமாக இருப்பதாக இந்த விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது. ( பாஸ்கரன்)



💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 486
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் - மார்ச் 31, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 31, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 17ஆம் திகதி மேஷம்Ariesஇன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கச
    வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?
    ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வள
    இன்றைய ராசி பலன் - மார்ச் 30, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 30, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 16ஆம் திகதி. மேஷம்Ariesஇன்று தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணி களில் ஈடுபடவும் த
    நெல்சன் மண்டேலா
    தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர்  திரு.நெல்சன் மண்டேலா கூறியது" நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட
    இது கடவுளின் கணக்கு.
    ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.வ
    மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது......
    கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவ
    இன்றைய ராசி பலன் - மார்ச் 29, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 29, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 15ஆம் திகதி.மேஷம்Ariesவசதிகள் பெருகும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்
    இன்றைய ராசி பலன் - மார்ச் 28, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 28, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 14ஆம் திகதி.மேஷம்Ariesநம்பிக்கைகள் நடைபெறும் நாள். விரதம், வழிபாடுகளில் ஆர்வம
    காது கேட்கும் தன்மையை இழப்பதற்கான அறிகுறிகள்
    உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு படி இந்தியர்கள் சுமார் 6 கோடியே 30 லட்சம் பேர் காது கேளாமை தொடர்புடைய பிரச்சினைகளைஎதிர்கொண்டுள்ளனர். 5 பேரில் 4
    இன்றைய ராசி பலன் - மார்ச் 27, 2023
     இன்றைய ராசி பலன் – மார்ச் 27, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 13ஆம் திகதி.மேஷம்Ariesதைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு
    இன்றைய ராசி பலன் - மார்ச் 26, 2023
     இன்றைய ராசி பலன் – மார்ச் 26, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 12ஆம் திகதி.மேஷம்Ariesபற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சிக்க
    பணத்தை ஈர்க்க சில ரகசியங்கள்  (Some secrets to attract money)
    உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கவேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும்
    இன்றைய ராசி பலன் - மார்ச் 25, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 25, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 11ஆம் திகதி.மேஷம்Ariesநட்பால் நன்மை கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரிய
    சகட தோஷம் என்றால் என்ன? அதற்கு எளிய பரிகாரம்
    “சகடம்” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் “சக்கரம்”. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் எவ்வகை வாகனத்திற்கும் மிக முக்கியமான ஒரு பாகம்
    இன்றைய ராசி பலன் - மார்ச் 24, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 24, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 10ஆம் திகதி.மேஷம்பணம் கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்க
    Ads