Support Ads
Main Menu
 ·   · 24 posts
  • R

    3 members
  •  · 4 friends

மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இருக்கமுடியும் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தெரிந்து கொள்வார்களா? என கடந்த 11 வருடங்களிற்கு மேலாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.


வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழந்துவரும் குடும்பங்கள் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்த மழைக்காலத்தில் மட்டுமல்ல வறட்சி காலத்திலும் இந்த மக்கள் துன்பத்தையே எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை தினமும் கண்ணால் கான முடிகின்றது.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து யுத்தம் நிறைவடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியிக்கின்ற காலத்திலும் இவர்களது வாழ்வு இப்படியே தான் இருக்கின்றது.


இவ்வாறு வீட்டுத்திட்டங்களின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் கருத்துத்தெரிவிக்கும் போது,  இந்த வருடத்தில் வீட்டுத்திட்டங்கள் தருவார்கள், அடுத்த திட்டத்தில் தருவார்கள் என்று அடிக்கடி பதிவுகளை செய்வார்கள், அரசியல்வாதிகள் பலர் வந்து உங்களுக்கு வீட்டுத்திட்டங்களை பெற்றுத் தருகின்றோம் பொருத்து வீடு வேண்டாம் கல் வீடு வாங்கித்தருவோம் என்றார்கள், ஆனால், எதுவும் நடக்கவில்லை.

எங்களின் வாழ்வு விலங்குகளின் வாழ்வை விட கேவலமான வாழ்வாகிவிட்டது எனக்குறிப்பிட்டனர்.
இவ்வாறு வீடுகளுன்றி வாழ்ந்த பெரும்பாலான குடும்பங்களுக்கு கடந்த 2018 ஆம் 2019 ஆம் ஆண்டுகளில் வீட்டுத் திட்டங்களை பெற்றுக் கொள்ளாத மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் எந்த வீட்டுக்கும் முழுமையான நிதி கிடைக்கவில்லை முதற் கட்ட இரண்டாம் கட்ட பகுதிக் கொடுப்பனவுகள் மாத்திரமே கிடைத்துள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவுறுத்த வேண்டும்; என்ற அழுத்தம் காரணமாக அதாவது பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அதைவிட மக்கள் பிரதிநிதிகள் இந்த வீடுகளை விரைவாக கட்டி முடிக்க வேண்டுமென்று வழங்கிய அழுத்தங்கள் காரணமாக அவர்கள் அந்த வீடுகளை அமைப்பதில் பெரும் சவால்களை சந்தித்தது மட்டுமல்லாது அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற குடும்பங்கள் இந்த வீட்டு திட்டத்திற்காக பட்ட கஸ்டங்கள் அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து வலிகளாக உணரமுடிகின்றது.


குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தங்களிடமிருந்தவற்றையும் விற்றும் வங்கிகளில் கடன் பெற்று அதற்கு மேலாக நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்தும் பெருந்தொகையான கடன்களை பெற்று இந்த வீடுகளை கட்டுவதற்கு கஸ்டங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.  ஆனால் இந்த வீடுகளுக்கு முதல்கட்ட கொடுப்பனவு மற்றும் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.


இதனால் இந்த வீடுகள் இதுவரை முழுமை பெறாத நிலையில் இன்று வரை காணப்படுகின்றன. இந்த பயனாளிகள்; கடந்த மூன்று ஆண்டுகளாக கடன் சுமைகளோடும்; வீடுகள் இன்றியும் வாழுகின்ற நிலமை காணப்படுகின்றது. இப்போது கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக இந்த மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  இதற்கான மிகுதி கொடுப்பனவுகள்; இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன.  ஆனால் நிதி கிடைக்கவும் இல்லை வீடுகட்டி முடிக்கவும் இல்லை.

கடந்த ஆண்டில் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள்; இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டு உரையாற்றிய போது உள்ளது.  கடந்த 2018ம் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் மாவட்டத்தில் 2691 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 2678 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 1313 வீடுகளும் முற்றுப்பெறாத நிலையிலுள்ளன.

இதற்காக 2987.53 மில்லியன் தேவைப்படுகின்றது என்றும் இதற்கான நிதியை விடுவித்து உதவ வேண்டும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இதே போன்று 5147 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக 1958 மில்லியன் ரூபா நிதி தேவையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நான்கு மாவட்டங்களிலும் 11ஆயிரத்து 829குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்வாறு வீட்டுத்திட்டங்களை நம்பி குடியிருக்க முடியாத தற்காலிக கொட்டகைகளில் அதிக வெயிலில் காலங்களிலும் மழைகாலங்களிலும் நின்மதியாக வாழமுடியாத குடும்பங்களுக்கு வீடுகள் என்பது இன்று மிக முக்கியமான தேவையாகவுள்ளது.

நன்றி:
சு. பாஸ்கரன்

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 620
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் – அக்டோபர் 1, 2023
    இன்றைய ராசி பலன் –  அக்டோபர் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 14ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடு
    ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்
    பிரபஞ்ச பேரருளாம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்செய்யும் தொழிலில் வெற்றிகள் பல காண்போம்பிரபஞ்ச ஆசியுடன் நற்பவி அருளட்டும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.10.2023.  சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.49 வரை த
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 30, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 30, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 13ஆம் திகதி மேஷம்Aries விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 30.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 02.34 வரை பிரதம
    உங்கள் வாழ்க்கை துணை எந்த ஊரிலிருந்து வரப்போறாங்க தெரியுமா?
    ஒரு ஆணுடைய வாழ்க்கை துணையாக வரப்போகிற பெண் எந்த திசையில் இருந்து வரப்போகிறார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? என்றால் ஜோதிடம் முடியும் என்று கூ
    எச்சரிக்கை தரும் பதிவு... (அவசியம் படியுங்கள்...உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்)
    கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீடியோக்கள், அவரது வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த
    படித்ததில் பிடித்தது
    திருமணத்தில் உணவை பரிமாறும் விதமே இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அதுதான் தற்போதைய திருமணத்தில் நான் பார்க்கும் மோசமான விஷயமாக கருதுகிறேன் .அந்த காலங்
    12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்
    மேஷ ராசி:மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்."ஷண்முகம் பார்வதீ புத
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 29, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 29, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 12ஆம் திகதி மேஷம்Aries புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.34 வரை பௌர்ணமி
    நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த இந்த தீபத்தை ஏற்றுங்கள்
    கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவிக்
    மருத்துவ குணமுடைய மூலிகையாக விளங்கும் புதினா
    புதினா ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், ப
    இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு எளிய தீர்வு
    முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முத
    சனி பெயர்ச்சி பலன் 2023 - ராஜயேகம் எந்த ராசிக்கார்களுக்கு?
    கும்பம் ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி
    Ads