Support Ads
 ·   ·  2141 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சுண்ணாம்பின் மகத்துவம்

எலும்பின் இருக்கும் சத்து கால்சியம் என்ற சுண்ணாம்பு சத்து தான். நமது முன்னோர்கள் வீடுகளுக்கு வெந்த சுண்ணாம்பை பாலில் நீர்த்து ( சிமெண்டுக்கு பதில்) , அத்துடன் கடுக்காய், பனை வெல்லம் சேர்த்து கலக்கி வீடுகள், சுவர்கள் போன்றவற்றை கட்டுவார்கள்.

சுண்ணாம்பு கற்களை வேகவைத்து பால், இளநீர் சேர்த்துக் கரைப்பதால், பாலில் உள்ள சுண்ணாம்பு சத்தும், இளநீரில் உள்ள சுண்ணாம்பு சத்தும் சேர்ந்து சுண்ணாம்பு கற்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. இது போதாது என்று முன்னோர்கள் கடுக்காய் சேர்த்தார்கள். அப்படி என்ன தான் செய்யும் இந்த கடுக்காய் ?

கடுக்காய் ஒரு காயகல்பம் மூலிகை. இந்த உடம்பை கல்லு போல மாற்றும் தன்மை உடையது கடுக்காய். சுண்ணாம்புடன் கடுக்காய் சேர்ப்பதால் சுண்ணாம்பு சத்தை இரும்பை போல இறுக்கும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயில் உள்ள துவர்ப்புத் தன்மை சுண்ணாம்புடன் சேரும் பொது வீடு, சுவர், கட்டடம் போன்ற வற்றின் ஆயுள் மேலும் நீட்டிக்கப் படுகிறது. இவற்றோடு பனை வெல்லம் சேர்த்தல் என்ன ஆகும் ? எதற்கு சேர்கிறார்கள் ?

முன்னோர்கள் தென்னைமரம், பனை மரம் இவற்றில் உள்ள பாலையை சீவி விட்டு அதில் ஒரு பானையை சுண்ணாம்பு உள் பக்கமாக தடவி விடுவார்கள். இதில் பதநீர் வந்து இறங்கும். இதில் வேறு எந்த பொருளும் சேர்க்க கூடாது குறிப்பாக போதை பொருள் சேர்க்காமல் இருப்பது நல்லது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீருடன் தக்க அளவில் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி எடுப்பது தான் பனைவெல்லம். பனைவெல்லம் இனிப்பு தன்மையாக இருக்க பதநீரும், சுண்ணாம்பும் தான் காரணம். அதே போல தண்ணீர் துவர்ப்பு தன்மை கொண்டது, இதன் துவர்ப்பும் சுண்ணாம்பும் சேர்ந்து மேலும் வலு சேர்த்து அந்த வீடோ, சுவரோ, கட்டடமோ பல நூறு ஆண்டுகள் உறுதியாக இருக்க செய்கிறது.

சுண்ணாம்பு ( இயற்கை தாது), பால் ( இயற்கை), இளநீர் ( இயற்கை), கடுக்கை ( இயற்கை), பனைவெல்லம் ( இயற்கை) என இயற்கை மூலங்களில் உண்டான கட்டடங்களே பல நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் போது, இயற்கைமூலங்களில் இருந்து கிடைக்கும் சுண்ணாம்பு சத்தை நாம் உணவாகவோ மருந்தாகவோ சாப்பிடும் போது நமது எலும்புகள் பலம் பெற்று, உறுதியுடன், உடல் வலிமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வது திண்ணம். இது சித்தர்களின் சூத்திரம்.

இந்த முறை இந்த அண்டத்திற்கு மட்டும் அல்ல இந்த அண்டத்தில் உள்ள பிண்டதிற்கும் பொருந்துகிறது.

தினமும் #வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுகின்ற பாட்டிகளுக்கு கை, கால், மூட்டுகளில் வலி வருவதில்லை. சுண்ணாம்பு மிக அற்புதமான மருந்து. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட வெட்கப்படுவோம். அது ஏதோ கிராமத்தில் உள்ளவர்கள் போடுவதென்று. எலும்பு தேய்மானம் ஆகாது எலும்பு தேய்மானம் என்று மருந்து சாப்பிடுபவர்கள், மூட்டுகளில் வலி(Join Pain ), உள்ளவர்களுக்கு நல்ல பலனை தரும். மேற்சொன்ன பாதிப்பு இல்லாதவர்கள் கூட போடலாம். புகையிலை தான் சேர்க்க கூடாது.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

இப்படி சுண்ணாம்பு நிறைய விதத்துல பயன்படுகிறது.

  • 590
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங