- · 5 friends
-
I

பழி (குட்டிக்கதை)
விவசாயிக்கு நரி மேல் கோபம். அவன் கோழிகளை அடிக்கடி பிடித்து எலும்பைக் கூட விட்டு வைக்காமல் தின்று விடுகிறது என்று கோபம்.
இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று ஒருமுறை அதற்காக இரவில் பதுங்கிக் காத்திருந்தான். நரி வந்த போது அதன் மேல் சாக்கு போர்த்தி லபக்கென்று பிடித்து விட்டான்.
பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தான். அதன் வாலில் மண்ணெண்ணையில் நனைத்த துணியைச் சுற்றிப் பற்ற வைத்து விட்டான். என் கோழிகளைத் தினறாய் அல்லவா? ஒழிந்து போ!" என்று அதைத் துரத்தி விட்டான்.
நரி தன்னையறியாமல் விவசாயிகளின் வயலுக்குள்ளேயே நுழைந்தது. பயிர் முதிர்ந்து ஒரு பக்கம் நெற்குவியல், மறுபக்கம் வைக்கோல் போட்டு முதிர்ந்த கதிர்களைக் களையறுக்க காத்திருந்த நேரம் அது. நரியின் வரவால் ஏக்கர் முழுக்க தீ பரவி தானியமெல்லாம் கருகிச் சாம்பலானது.
விவசாயிக்கு நரியைப் பழி வாங்கியதில் நஷ்டம் தான் பன்மடங்கு.
நீதி : பிறரைப் பழி வாங்கும் போது முதலில் தனக்குத் துன்பம் வராமல் கவனித்துக் கொள்ள வேண்டும். பழிவாங்க நினைக்காதே….கர்மா பார்த்துக்கொள்ளும்!

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·