Support Ads
 ·   ·  1637 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நன்றி (குட்டிக்கதை)

ஒருமுறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புல துரத்தியது.

அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனிதக் குரங்கு உட்கார்ந்திருந்தது.

அதைப் பார்த்து நடு நடுங்கிய மனிதன் அந்த மனிதக் குரங்கிடம் அடைக்கலம் கேட்டான்.

அந்த மனிதக் குரங்கு, கவலைப்படாதே நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன்.

என்னை அண்டி வந்த உனக்கு நான் நிச்சயமாகப் பாதுகாப்புத் தருவேன் என்றது.

இரவுப் பொழுதும் வந்தது... புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது. மனிதனும் மனிதக் குரங்கும் மாறி மாறி உறங்க முடிவு செய்தனர். மனிதன் தூங்கியப் போது மனிதக்குரங்கு காவல் காத்தது குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான். புலி இவர்களைப் பிரிக்க முடியாவிட்டால் நமக்கு உணவு கிடைக்காது என எண்ணி அந்த மனிதனிடம்... வஞ்சகமாக

இப்போது மனிதக்குரங்கு தூங்குகிறது நீ அதைப் பிடித்து கீழே தள்ளிவிடு... எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.

மனித மனம் குரங்கை விட மோசமானது. நாம் தப்பிக்கலாம் என்றுத் தன்னலம் கருதி மனிதன் குரங்கை கீழே தள்ளிவிட்டான்.

கீழே விழும் போது நடந்ததைப் புரிந்துக் கொண்டது மனிதக்குரங்கு.

ஆனால் புலியோ “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும்.... உனக்கு மனிதனின் இயல்பைப் புரிய வைக்கவே நான் இவ்வாறு கூறினேன். இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன்.... நீ மேலே சென்று மனிதனைக் கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டு விட்டுப் போய் விடுகிறேன்” என்றது.

அப்படியே செய்வதாக சொல்லி விட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது. மனிதனோ குரங்கைப் பார்த்து பயத்தால் நடுங்கினான்.

மனிதக் குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் நான் காப்பேன்.

புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக் கொண்டேன். நீ கவலை இல்லாமல் இருக்கலாம்... என்றது.

நண்பன் என்று வந்தவனிடம் நட்பு பாராட்ட வேண்டும்...

நட்பு ஒரு பெண்ணின் கற்பைப் போன்றது.

ஒருமுறை நட்பின் புனிதத்தில் குறை கண்டோமே ஆயின் அந்த நட்பு அதன் மதிப்பை நிச்சயமாக இழந்தே போகும் இது தான் உண்மை...

கதையின் நீதி :-

நன்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டு விலங்குகள்...

துரோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு மனிதர்கள்...

  • 90
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய