·   ·  1301 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

எதை கற்றுக் கொள்கிறோம்? (குட்டிக்கதை)

வேலன் மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

அவர் இறை பக்தி உடையவர்.

மரங்களை வெட்டி நன்றாக சம்பாதித்து வந்தார்.

கையில் நிறைய பணம் சேர்ந்தது.

ஒரு நாள் வேலன் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு தனது மதிய நேர உணவை ஆற்றோரமாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் முன்னங்கால்கள் இல்லாத ஒரு குள்ளநரியை பார்த்தார்.

மிகவும் பரிதாபப்பட்டார்.

இரண்டு கால்கள் தான் அந்த குள்ளநரிக்கு உள்ளது.

அது எப்படி வேட்டையாடி சாப்பிடும் என எண்ணி வருந்தினார்.

அப்போது அங்கே ஒரு புலி உறுமும் சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தை கேட்ட வேலன் பயந்து மரத்தின் மேல் ஏறி ஒழிந்து கொண்டார்.

புலியை உன்னிப்பாக கவனித்தார்.

புலி ஒரு மானை பிடித்து வந்து சாப்பிட்டு விட்டு மீதியை அப்படியே விட்டு சென்றது.

அதனை கண்ட குள்ளநரி மெதுவாக தவழ்ந்து சென்று புலி மிச்சம் வைத்துச் சென்ற மானை புசிக்க ஆரம்பித்தது.

மரத்திலிருந்து வேலன் சந்தோஷப்பட்டார்.

இறைவன் என்னதான் குள்ள நரியை கால் இல்லாமல் படைத்தாலும் அதற்கு சாப்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்தாரே என்று நினைத்து மகிழ்ந்தார்.

அவர் உடனே குள்ளநரிக்கே இறைவன் சாப்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

அப்படி என்றால் எனக்கு மிகுந்த இறை நம்பிக்கை உள்ளதால் எனக்கும் அவ்வாறே உணவளிப்பான் என்று எண்ணினார்.

நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தார் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே தங்கினார்.

இறைவனை தொழுதுவிட்டு வீட்டு வாசலிலேயே இருந்தார் .

நாள் போகப் போக இளைத்துப் போனார்.

சில பேர் அவருக்கு சாப்பாடும் எடுத்து வந்து கொடுத்தார்கள்

சில நாள் கழித்து வேலன் சலித்துக் கொண்டார்.

ஏன் என்னை கடவுள் கண்டு கொள்ளவே இல்லை என வேதனை பட்டார்.

காலில்லாத நரிக்கு கூட சாப்பாடு போட்டாய் ஏன் என்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறாய் என இறைவனிடம் மன்றாடினார்.

மிகவும் மன்றாடி அழைத்ததால் கடவுள் உடனே காட்சி தந்தார்.

வேலன் அவரிடம் கேட்டார் ஏன் கடவுளே காலில்லாத நரிக்கு கூட உணவு வழங்குகிறீர்கள் நீங்கள் படைத்த எல்லாவற்றுக்கும் உணவளிப்பீர்கள் என்ற நம்பி இருந்தேனே ஏன் என்னை கண்டு கொள்ளவே இல்லை என்றார்.

கடவுள் பதிலளிக்கிறார் ஆம் நான் எல்லோருக்கும் தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.

உனக்கும் தகவல் கொடுத்தேன். ஆனால் நீ புலியைப் பார்த்து கற்றுக் கொள்ளாமல் நரியை பார்த்து வாழ பார்க்கிறாய்.

புலி சாப்பிட்டுவிட்டு மிகுதியை தேவையானவர்களுக்கு கொடுத்தது எனவே அதை பார்த்து கற்றுக் கொள் என்றார் கடவுள்.

அதாவது நம் வாழ்வில் பல குள்ள நரிகளையும் பல புலிகளையும் பார்க்கின்றோம்.

புலியின் சிந்தனைக்கும் குள்ளநரியின் சிந்தனைக்கும் வித்தியாசம் உள்ளது.

அவரவர் சிந்தனைக்கு ஏற்ப அவரவர் செயற்பாடுகள்.

இதே போல் நம்மைச் சுற்றியும் நிறைய குள்ள நரிகளும் நிறைய புலிகளும் இருக்கின்றன. நாம் எதைச் செய்கிறோம் என்பதில் தெளிவாக இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றிதான்.

  • 1837
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய