·   ·  1296 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கடவுளிடம் தள்ளுபடி கேட்ட மகா கஞ்சன் (குட்டிக்கதை)

ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்.

நிறைய பணம் சேர்த்தான்.

அவனுக்கு சம்பாதிக்க தெரியுமே தவிர செலவு பண்ணத் தெரியாது. மகா கஞ்சன்.

காசை கையில் எடுக்கவே மாட்டான். எடுத்தால் செலவு செய்ய வேண்டி இருக்குமே!

அதனால் இப்படியே அவன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். வயதாகிவிட்டது.

அவனுடைய மனைவி ஒரு நாள் இவ்வளவு நாளும் நீங்கள் என்னை எங்கேயுமே அழைத்துக்கொண்டு போனதில்லை.

இப்போதாவது அழைத்துக் கொண்டு போக கூடாதா? என்றாள்.

எங்கே போக வேண்டும் சொல்லு என்றான்.

காசிக்கு போக வேண்டும் கங்கையில் குளிக்க வேண்டும் என்றாள் அவள்.

அதற்கு ஏன் இவ்வளவு தூரம் செலவு செய்ய வேண்டும்.

நம்ம ஊரு ஆற்றிலேயே குளிக்கலாம்.

இதுவும் புண்ணிய நதிதான்.

இங்கே குளித்தால் அங்கே குளித்த பலன் கிடைத்துவிடும் என்றான்.

சரி என்று ரெண்டு பேரும் ஆற்றங்கரைக்கு போனார்கள்.

அன்றைக்கு ஏதோ விசேஷம் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

கரையிலே சில புரோகிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். குளிப்பதற்கு முன் அவர்களிடம் உட்கார்ந்து ஏதோ மந்திரம் சொல்லுவார்கள்.

கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இதனால் இவன் ஆற்றங்கரையைவிட்டு கொஞ்ச தூரம் போனான்.

ஊரைவிட்டுத் தள்ளி வந்து விட்டான்.

அங்கே யாருமில்லை. அப்பாடா என்று சந்தோஷப்பட்டான்.

குளிக்கலாம் என்று புறப்பட்டான்.

இந்த நேரம் கடவுள் பார்த்தார். இந்தக் கஞ்சனுக்கு ஏதாவது புத்தி புகட்டவேண்டும் என்று நினைத்தார். உடனே ஒரு புரோகிதர் மாதிரி உருவத்தை மாற்றிக் கொண்டு அந்த ஆள் முன்னால் வந்து நின்றார்.

இவனுக்கு அதிர்ச்சி இங்கே யாருமே இருக்க மாட்டார்கள் என்று நினைத்தால் இங்கேயும் ஒரு ஆள் வந்து விட்டான்.

என்ன செய்வது என்று யோசித்தான்.

புரோகிதர் உருவத்தில் இருந்த கடவுள் சொன்னார் இதோ பார் இன்றைக்கு விஷேட நாள் நீராடுவதற்கு முன்னாடி சங்கல்பம் பண்ண வேண்டும் என்றார்.

என்னிடம் பணம் எதுவும் இல்லை என்றான் அவன்.

பரவாயில்லை பிறகு கொடு வாங்கிக் கொள்கிறேன்.

ஆனால் ஒன்று எவ்வளவு கொடுப்பாய் என்பதை இப்போதே சொல்லிவிடு என்றார்.

இவன் அதிகம் யோசித்து பத்து பைசா தருகிறேன் என்றான்.

சரி என்று ஒத்துகொண்டு எல்லா கிரியைகளையும் செய்தார்.

அதன்பிறகு கணவனும் மனைவியும் ஆற்றில் குளித்தார்கள்.

கடவுள் போய்விட்டார்.

கொஞ்ச நாள் கழித்து அவன் வீட்டுக்கு கடனை வசூல் பண்ணுவதற்கு வந்தார்.

வாசலில் நின்று கொண்டிருந்த அவன் மனைவி விஷயத்தைச் சொன்னாள்.

அவன் யோசனை செய்தான்.

இப்போது வெளியில் போனால் அவனுக்கு பத்து காசு கொடுக்க வேண்டியிருக்கும்.

அதனால் எனக்கு காய்ச்சல் இன்னொரு சந்தர்ப்பத்தில் வந்து வாங்கிக் கொள்ளச் சொல் என்றான்.

அந்த அம்மா போய் சொன்னாள்.

இல்லை நான் அவரை உடனே பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தார் இவர்.

அவள் மறுபடியும் உள்ளே ஓடி விஷயத்தைச் சொன்னாள்.

இதோ பாரு எனக்கு காய்ச்சல் வந்து நான் இறந்து விட்டதாகச் சொல் என்றான் அவன்.

புரோகிதர் அப்படி என்றால் ஒரு வழியாக இறுதிச் சடங்குகளை முடித்து விட்டுப் போய் விடுகிறேன் என்றார்.

உள்ளே இருந்தவன் யோசித்தான்.

அந்த ஆள் என்னை விடமாட்டான் போல் இருக்கின்றது.

அதனால் ஒரு சவப்பெட்டியில் என்னை வைத்து தூக்கிக்கொண்டு மயானத்துக்கு போங்கள் பார்க்கலாம் என்றான்.

புரோகிதரும் விடுவதாக இல்லை. கூடவே நடந்து போனார் அங்கே இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு தீ வைக்கும் நேரம் இவன் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தான்.

புரோகிதர் உருவத்தில் இருந்த கடவுள் சிரித்தார்.

தன் சுய உருவத்தை காட்டினார்.

அதன் பிறகு அவனைக் கூப்பிட்டார். இதோபார் ஏன் இப்படி ஓடுகிறாய் ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேள் தருகிறேன் என்றார்.

அவன் யோசனை செய்தான்.

யோசனை செய்துவிட்டு ஒரே ஒரு வரம் தான் உங்களிடம் கேட்க வேண்டும் என்றான்.

என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள்.

அந்த பத்து பைசா தட்சணையை தள்ளுபடி செய்து விடுங்கள் அது போதும் என்றான்.

கடவுளும் சரி என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

இது சுவாமி சிவானந்தர் சொன்ன கதை.

பல செல்வந்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

தாங்களும் அனுபவிக்க மாட்டார்கள்.

அடுத்தவர்களுக்கும் கொடுக்க மாட்டார்கள்.

இது மாதிரியான கஞ்சர்களுக்கு இவ்வுலகமும் இல்லை.

எவ்வுலகமும் இல்லை என்கிறார் சுவாமி சிவானந்தர்.

  • 2194
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய