·   ·  1296 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நேர்மைக்கு செய்யப்பட்ட உதவி (குட்டிக்கதை)

கடைக்கு வந்தவுடன் தான், சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த என் செல்போன் காணாமல் போயிருந்ததை உணர்ந்தேன்.

நான் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்திருக்கிறேன். எனினும் இந்த செல்போனை நான் தவற விட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் எப்படியோ கீழே விழுந்திருக்கிறது.

வேறு ஒரு போனில் இருந்து, அந்த நம்பருக்குக் கால் செய்தேன். பதில் இல்லை. மூன்றாம் முறை எடுக்கப்பட்டது .

''ஹலோ..'' என்றது ஒரு சிறுவனின் குரல்.

''இந்தப் போன் என்னோடது. நான் இதை மிஸ் பண்ணிட்டேன். இப்ப எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நானே வந்து வாங்கிக்கறேன்..''

''கே.ஜெ ஸ்டோர் பக்கத்துல வந்துட்டு இருந்தேன் அங்கிள், ரோட்ல இந்தப் போன் கிடந்து ரிங் ஆயிட்டு இருந்துச்சு. அதான் எடுத்துப் பேசறேன்..''

''அங்கேயே இருங்க, 2 நிமிசத்துல நானே நேர்ல வந்துடறேன்..''

உடனே கிளம்பி கே.ஜெ ஸ்டோர் சென்றேன். அதற்கு அருகில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். கொரோனா காலம் என்பதால் என்னைப் போலவே அவனும் மாஸ்க் அணிந்திருந்தான்.

''நான் தான் தம்பி, போன் மிஸ் பண்ணது..!''

''இந்தாங்க அங்கிள்..''

''உன் பேர் என்ன தம்பி..?''

''இளங்கோ..''

''என்ன க்ளாஸ் படிக்கிற தம்பி..?''

''செவென்த் அங்கிள்..''

''எந்த ஸ்கூல்..?''

சொன்னான்.

''ரொம்ப நன்றி தம்பி, போனை எடுத்து ஆஃப் பண்ணி வச்சுக்காம என் கிட்ட கொடுத்தியே, பெரிய விஷயம்பா..''

''போன் தொலைச்சவங்க பாவம்.. போன் இல்லாம எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு தான் நினைச்சேன் அங்கிள். போனை எடுத்து வச்சிக்கணும்னு நான் நினைக்கல.."

நான் அவனிடம் 500 ருபாய் கொடுத்தேன்.

''காசெல்லாம் வேண்டாம் அங்கிள்.. " மறுக்க,

''என்னோட சந்தோஷத்துக்காக வாங்கிக்க இளங்கோ..'' அவன் சட்டைப்பையில் வைத்து விட்டு கிளம்பி கடைக்கு வந்தேன். நான் விற்பனையும், உதவியாளன் ராகுல் ரிப்பேரும் கவனிப்போம்.

ஒரு மணிக்கு நானும், 2 மணிக்கு மேல் அவனும் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

நான் வீட்டிற்குச் சென்று விட்டு 2 மணிக்கு திரும்ப வந்த போது கடைவாசலில் அந்த சிறுவன் இளங்கோ நின்று, ராகுலிடம் பேசிக் கொண்டிருந்தான்.

''இந்த போன்ல டிஸ்பிளே உடைஞ்சிருக்கு. மதர் போர்டும் போயிருச்சு, இதை ரிப்பேர் பண்றதே வேஸ்ட். 4000 ருபாய் ஆகும். 4000 ரூபாய்க்கு இதே மாடல் ஒரு புதுபோனையே வாங்கிக்கலாம்..''

''500 ரூபாய்க்கு இதை ரிப்பேர் பண்ண முடியாதா..?''

''ம்ம்ஹூம்..! முடியாது..''

நான் கடைக்குள் நுழையும் போது இளங்கோ சோகமாக வெளியேற, நான் கூப்பிட்டேன்.

''தம்பி, அந்தப் போனைக் கொடு..''

கொடுத்தான்.

''ராகுல், இதுல எல்லா பார்ட்ஸும் மாத்திடு..'' சொல்லி விட்டு, இளங்கோவிடம்..

''பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு தம்பி..''

''ஓகேங்க அங்கிள்..''

''இந்த போன் யாரோடது..? எப்படி உடைஞ்சுது..? ''

''இது அப்பாவோட போன். ஒரு நாள் இதைத் தவறுதலா கீழே போட்டுட்டாரு..''

''உங்க அப்பா என்ன பண்றாரு..?''

''சினிமா தியேட்டர்ல வேலை பண்ணாரு. இப்போ தியேட்டர் எல்லாம் மூடிட்டாங்க. அதனால 3 மாசமா வீட்ல தான் இருக்காரு. ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண போன் வாங்கி தரச்சொல்லி கேட்டேன். காசில்லைனு சொல்லிட்டாரு. இப்போ தான் உடைஞ்ச போனை ரிப்பேர் பண்ண பணம் கிடைச்சுது.."

அவனுடன் மேலும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ராகுல் போனை தயார் செய்து முடித்திருந்தான். இளங்கோவிடம் கொடுக்க, சந்தோசமாக போனை வாங்கிப் பார்த்தான்.

''எவ்வளவு ஆச்சு அங்கிள்..?''

''இப்போ உன் கிட்ட எவ்வளவு இருக்கு..?''

''500 ருபாய் தான் இருக்கு, அதுவும் நீங்க கொடுத்தது தான்..''

அவனிடம் 500 ருபாய் வாங்கிக் கொண்டு மீதம் 400 ருபாய் கொடுத்தேன்.

''100 ருபாய் இதை சரி பண்ணதுக்கு நான் எடுத்துக்கிட்டேன்பா, போயிட்டு வா..''

''அங்கிள், காலைல நான் உங்க கிட்ட போன் திரும்பக் கொடுத்ததால தானே எனக்கு கம்மியா காசு வாங்கி ரிப்பேர் பண்ணீங்க..''

''அது மட்டும் இல்லப்பா, உங்க க்ளாஸ்ல பிரபுனு ஒரு பையன் படிக்கறானா..?''

''ஆமாங்க அங்கிள்..''

''அவங்க அப்பா தான் நான். காலைல நீ படிக்கிற ஸ்கூல் பேர் சொன்னேல்ல, நான் சாப்பிட வீட்டுக்கு போனப்ப, பிரபு கிட்ட உன் பேரைச் சொல்லி தெரியுமானு கேட்டேன்.

'தெரியும்பா, அவன் தான் எப்பவும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க். ஆனா ஆன்லைன் க்ளாஸை ஒரு நாள் கூட அவன் அட்டென்ட் பண்ணவே இல்ல. என்னாச்சுனு தெரியல'னு சொன்னான்.

நீ ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண முடியாம எவ்வளவு மனசு கஷ்டப்படுவேனு தெரியும் இளங்கோ. அதன் உனக்கு கம்மி விலைல ரிப்பேர் பண்ணி கொடுத்தேன். நீ நல்லாப் படிக்கணும், என்ன..?''

''ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்..'' தழுதழுத்த குரலில் சொல்லியபடி தன் சட்டையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

அந்தக் கண்ணீருக்கு பின்னால் சோகமோ, மகிழ்ச்சியோ, அல்லது இரண்டுமே கலந்தோ இருக்கக்கூடும்.

  • 1961
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய