·   ·  1374 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மரியாதை உள்ளோர்க்கான 15 கட்டளைகள்

1.யாரனேும் உங்களுக்கு கை குடுக்க வரும்போது நீங்கள் கதிரை (ஆசனம் -chair) ஒன்றில் இருப்பீர்களானால் எழுந்து நின்று குடுங்கள் அவர் சிறியவரோ ஏழையோ யாராகினும்!

2.உங்களை நம்பி யாரேனும் உங்கள் பாதுகாப்பில் இருந்தால் அவர்களை காப்பாற்றுங்கள். உங்களோடு இருப்பவர்களுக்கென தனிப்பட்ட ரீதியில் மரியாதை உண்டு , நகைச்சுவை உணர்வோடு பழகினாலும் மரியாதை தர தவறாதீர்கள்!

3.விருந்தினராக சென்ற இடத்தில் உங்களுக்கு தரப்படும் உணவில் குறை கண்டு பிடிக்காதீர்கள், உப்பு , புளி போன்ற விடயத்தில் அலட்டி உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளவேண்டாம்!

நீங்கள் பணம் கொடுத்து வாங்காத எந்த தின்பண்டமாகிலும் அதன் இறுதிதுண்டு வரை சாப்பிடாமல் வாங்கியவருக்கே குடுத்து விடுங்கள்,!

4.வியாபாரம் தொடர்பிலோ அல்லது வேறு எந்த விடயத்திலுமோ நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது அதை செய்கிறேன் இதனை உங்களுக்கு தருகிறேன் என முதலாவது வாக்கு தராதீர்கள், பின்நாளில் நீங்கள் நஸ்டமடைய அதுவே காரணமாகும்.

5.நீங்கள் செய்யாத வேலையின் பெறுமதியை திருடாதீர்கள்,யார் செய்தார்களோ அவர்களுக்கே அதன் பாராட்டு கிடைத்தாகவேண்டும்.

6.எவ்வேளையிலும் வீண்பழிக்கு உட்படாதீர்கள், உரிய தரப்பிடம் நேரடியாக சென்று உங்கள் நேர்மையை காட்ட தவறாதீர்கள், வீண்பழி சுமத்துவோரிடம் அமைதியாக இருந்தாலும் மேலிடத்தில் இருப்பவரிடம் உங்கள் மீது நல்லெண்ணம் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். நேர்மை அதற்கு உதவும்!

7.உரியவரால் நீங்கள் அழைக்க படாத விருந்துக்கு யார் அழைத்தாலும் செல்லாதீர்கள், நண்பர்களிடம் இந்த விடயத்தில் கறார் காட்டினாலும் பரவாயில்லை!

8.கண்களை பார்த்தே பேசுங்கள், உறவுக்காக கெஞ்சாதீர்கள், அது எப்படியான உறவாக இருந்தாலும் சரி உங்கள் மேல் இல்லாத தவறுக்காக மன்னிப்பு கோராதீர்கள், ஒரு தரம் நீங்கள் பிழை செய்யாமல் கேட்கும் மன்னிப்பு காலம் முழுதும் உங்களை அவர்களிடம் கெஞ்ச வைத்து உங்கள் தன்மானத்தை இழக்க செய்யும்,!

9.யாரேனும் உங்களுக்கு வாழ்க்கை தந்ததாக நினைத்துகொள்ளாதீர்கள், மிக முக்கியமான உறவொன்றின் மூலம் கிடைக்கும் எதற்கும் நன்றியுணர்வோடு இருங்கள், அதை தவிர்த்து அவர்களை இழந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று நினைத்து உங்களை நீங்களே தாழ்த்திகொள்ளாதீர்கள்! ஆக சிறந்த படைப்பு நீங்கள் தான்,

10.நன்றாக உடை அணியுங்கள், நாகரீகம் என்பது நவீன ஆடைகளை சார்ந்தது அல்ல, அது உங்களை சீராக காட்டினாலே போதுமானது, சீரான உடையும் நேர்த்தியான உடைகளின் மீதான தெரிவும் உங்களை மற்றவர் மதிக்கும் படி செய்யும்,

கிழிந்த ஆடைகளும் தசைகளை பிதுக்கி காட்டும் அலங்காரமும் மற்றவர் முன் உங்களை அருவருப்பாகவே காட்டும்,!

11.எங்கே சென்றாலும் பணத்தோடு செல்லுங்கள், பணம் இல்லாத போது நண்பர்களே விருந்துக்கு அழைத்தாலும் சுற்றுலாவுக்கு அழைத்தாலும் நிராகரிப்பது நல்லது, அவர்கள் மத்தியில் உங்களை நீங்களே பெலவீனராக்கும் முயற்சி அது.

குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்பாக வைத்துகொள்ள போராடுங்கள், தர்மம் செய்கிறேன் பேரில் குடிகார பிச்சைகாரர்களுக்கு தராதீர்கள், நிலை அறிந்து தர்மம் செய்யுங்கள்.

12.மற்றவர் பேசும் போது கேளுங்கள், நல்ல காரியங்களுக்கு தலையாட்டுங்கள், கண்களை பார்த்து பேசுங்கள், பெண்களிடம் குழந்தைகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள்,

தற்காலத்திற்கு ஏற்ற போல் உங்கள் நெருங்கிய உறவினரின் பெண்குழந்தையானால் குழந்தைக்கோ பெற்றார்க்கோ அசௌகரியத்தை உண்டுபண்ணுவது போல தூக்காமலும் தொடாமலும் இருங்கள். அது உங்கள் குழந்தை பருவத்திற்கு நீங்களே செய்யும் மரியாதை.!

13.எதுவாக இருந்தாலும் கோபத்தை வெளிப்படுத்துவதில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபமாக இருப்பது ஆற்றல் விரயம்.

14.ஆல்ககாலுடன் புகைப்படம் இடுவது அநாகரிகம் என்பதை உணருங்கள், ஆபாச குறியீடுகளை புகைப்படம் எடுக்கும் போது காட்டாதீர்கள், நடுவிரல் காட்டுவது நவீன முறை அல்ல என்பதை வளர்ந்து வரும் சிறாருக்கு சொல்லிகொடுங்கள், ஆக குறைந்தது அப்படியான புகைப்படங்களில் இருந்து நீங்கள் விலகி நில்லுங்கள்!

15.நேர்மையாக இருக்க தயங்காதீர்கள். நேர்மையாக இருப்பது போல் நடிப்பினை காட்டாமல் தனி அறையானாலும் உங்களுக்கு நீங்களே முதலில் நேர்மையாக இருங்கள்.

நேர்மையாக இருப்பது என்பது மிகச்சிறந்த பெண்களினதும் ஆண்களினதும் குணம் மறவாதீர்கள்!

  • 448
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய