Support Ads
 ·   ·  958 posts
  • 3 members
  • 3 friends

எளிய பரிகாரம் - தண்ணீர் தானம்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருக்கும். பிறந்த ஜாதக கட்டம் சரியாக இருக்கிறது. நல்ல இடத்தில் வேலையில் இருப்பான். நல்ல குடும்பம் இருக்கும்.  ஆனால் மனதில் நிம்மதி இருக்காது. எந்த ஒரு காரியத்தையும் அவனால் சரியாக செய்து முடிக்க முடியாது. எல்லா விஷயத்திலும் பின்னடைவு ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு சூழல் ஒரு மனிதனுக்கு வருகிறது என்றால் காரணம் அவன் செய்த கர்மா தாம். செய்த பாவம் நம்மை பின் தொடர்ந்து அடிக்கிறது என்று அர்த்தம். இதிலிருந்து வெளிப்படுவதற்கு ஆன்மீகத்தில் ஏராளமான பரிகாரங்கள் உண்டு.   

உங்கள் கையால் இந்த ஒரு பொருளை தானம் கொடுக்கும் போது அந்த நிமிடமே உங்கள் கர்மா குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் செலவில்லாத தானம், அது என்ன தானம்?

கர்மாவை கரைக்கும் தானம் தாகத்தோடு இருக்கும் உயிரினத்திற்கு தண்ணீர் கொடுப்பது. இன்னைக்கு தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் வந்து விட்டோம். அதைப் பற்றி சொல்ல வரவில்லை. ஒரு கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வீதியில் நடந்து வருபவர்களுக்கு உங்கள் கையால் ஊற்றினாலே கர்மாவில் பாதி, அந்த தண்ணீரில் கரைந்து விடும் என்று சொல்லுவார்கள்.

அந்த காலத்தில் எல்லாம் பார்த்தால் பானையில் தண்ணீரை கிணற்றிலிருந்து மோந்து கொண்டு இருப்பார்கள். யாராவது தாகத்தோடு வந்தால் அந்த தண்ணீரை அவர்களுடைய கையில் ஊற்றுவார்கள். அவர்கள் கையாலே தண்ணீரைப் பிடித்துக் குடித்து தாகத்தை தணித்துக் கொள்வார்கள். இதுதான் சிறந்த தானமாக பார்க்கப்பட்டது.

இந்த காலத்திற்கு ஏற்றவாறு வீதியில் தாகத்தால் கஷ்டப்படுபவர்களுக்கு நீங்க தானம் தண்ணீர் தானம் கொடுங்க. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீராக இருந்தாலும் சரி. குடி தண்ணீர் வாங்கி தானம் கொடுக்கலாம். உதாரணத்திற்கு ரோட்டோரங்களில் செருப்பு தைக்க கடை வைத்திருப்பவர்கள். சின்ன சின்னதாக பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள் வயதான பாட்டிகள் எல்லாம் வெயிலில் கீரை கட்டை தலை மேல் சுமந்து கொண்டு வியாபாரம் செய்யும். அப்படிப்பட்ட பாட்டிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இப்படி கஷ்டப்படுபவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய தண்ணீர் தானம் உங்கள் தலைமுறைக்கு வழிகாட்டும் என்பது தான் நம்பிக்கை.

அடுத்தபடியாக சொன்னால் அணிந்து கொள்ளக்கூடிய ஆடை. இன்றளவிலும் வீதியில் கிழிந்த ஆடையை போட்டுக் கொண்டிருக்கும் மக்களை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்து விட்டு, ஐயோ பாவம் என்று சொல்லிவிட்டு தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வோம். ஆனால் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டோம். உங்களிடம் இருக்கும் துவைத்த, பழைய துணியை கொண்டு போய் அப்படி இருக்கும் நபர்களுக்கு தானம் கொடுத்தாலும் அந்த தர்மம் உங்கள் தலைகாக்கும். உங்கள் தலைமுறையை காக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

அதிலும் ஒரு 10 வயதில் இருந்து 15 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த தானத்தை கொடுப்பது ரொம்ப சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க பஞ்சமி வழிபாடு கர்மவால் குடும்பத்தில் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள், மேலே சொன்ன இந்த எளிய தானத்தை செய்யுங்கள். உங்கள் கர்மா அன்றே, அந்த நிமிடமே குறையும். அடுத்த நாளே நன்மை நடப்பதை பார்க்கலாம்,

  • 938
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்