·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

அச்சத்தால் பேராசை உண்டாகும் - (குட்டிக்கதை)

அச்சம் ,,,,,

ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர். 

சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத்தீமைகளுக்கும் அச்சம் தான் அடிப்படைக் காரணம்;

அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார். 

குறுக்கிட்ட சீடர் ஒருவர்,

“ஐயா! அச்சத்தால் பேராசை உண்டாகும் என்கிறீர்கள். 

இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,'' என்றார். 

அதற்கு அவர் பதில் ஏதும் சொல்ல வில்லை. 

அன்றிரவு

வழக்கம் போலத் துறவியும், சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். 

அப்போது துறவியிடம் வந்த சமையல்காரர், “மடத்தில் அரிசி தீர்ந்துவிட்டதை நான் கவனிக்கவில்லை. 

இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை முடித்து விட்டேன். 

நாளை நகரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தால் தான்,

சமையல் செய்ய முடியும். 

நண்பகலில் தான்

உணவு தயாராகும். காலை உணவு சமைக்க வழி இல்லை,'' என்றார். 

பிறகு அவர் எல்லாருக்கும் உணவு பரிமாறினார். 

துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர். 

சீடர்களைப் பார்த்து துறவி,

“இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள் ஏன்'' என்று கேட்டார். 

“நாளை காலையில் உணவு கிடையாது என்று சமையல்காரர் சொன்னார். 

காலையில் பட்டினிகிடக்க வேண்டி இருக்கும். 

அதனால், இப்போது

அதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம்,''என்றார் சீடர்களில் ஒருவன்.

“நாளை காலையில் உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள். அதனால் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டீர்கள். 

அச்சத்தால் பேராசை வரும், என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா'' என்றார் துறவி.

அச்சத்தால் பேராசை வரும் என்பதை ஒப்புக்கொண்டனர் சீடர்கள்.

அனுபவம் என்பது எதை எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. எதை எப்போது செய்யக் கூடாது என்று தெளிவாக இருப்பதாகும்.

எல்லாமே தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை.

ஆனால்

அடுத்தவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடக்கூடாது.

 அது தவறு துணிவு உங்களை உழைப்பில் உயர வைக்கும் ...

பணிவு உங்களை பிறர் மனதில் உயர வைக்கும் .

  • 811
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்