·   ·  103 posts
  • 2 members
  • 2 friends

அகஸ்தியர் கூறிய குளியல் முறைகள்

நாம் குளிக்கும் நீரை எப்படி புனித கங்கை நீராக்கிக் குளித்து, இறைவனின் அருளைப் பெறுவது என அகஸ்தியர் கூறியுள்ளார்.

குளிக்கும் போது நாம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும். இந்த இரு திசைகளும் உத்தம திசைகள் எனப்படும். நாம் கர்மம் செய்த பின் அல்லது மயானம் சென்று வந்தால் மட்டுமே தெற்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் வலி அதிகரிக்கும்.

கங்கா ஸ்நானம்

ஒவ்வொருவரும் வீட்டிலேயே கங்கா ஸ்நானம் செய்ய முடியும். நீங்கள் குளிக்கும் முன், அதில் சிறிது நீரை கையில் எடுத்து கீழ் குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்தால் அந்த நீர் கங்கை நீராக மாறிவிடும்.

 

"கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"

குளிக்கும் முறை :

பொதுவாக நாம் குளிப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு மட்டுமின்றி, நம் உடலில் இருக்கும் அதிக வெப்பத்தை போக்குவதற்காகவும் தான். 

அக்னி பொதுவாக கீழிருந்து மேலாக எரியும். அந்த வகையில் நாம் குளிக்கும் போது ஓம் என எழுதி இறைவனை வணங்கிய உடன் சிறிது நீரை தலையில் தெளித்துக் கொள்ளவும். தண்ணீரை நம் கால் முதல் மேல் உடல் நோக்கி மெதுவாக நனைத்து வந்து கடைசியில் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இப்படி செய்வதால் உடலில் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் நோக்கி பயணிக்கும். நம் மண்டை ஓட்டுக்கு மட்டும் தான் எப்படிப்பட்ட வெப்பத்தையும்., அக்னியின் வேகத்தையும் தாங்கும் சக்தி உண்டு.

தலையில் சிறிது தண்ணீர் தெளித்துள்ளதால் தலைக்கு வெப்பம் தாக்காமல், நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் கண் மற்றும் காது வழியாக வெளியேறும்.

வாயில் நீர் வைத்திருத்தல் :

அதே போல் குளிக்கும் போது வாய் நிறைய எவ்வளவு நீர் வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உடலில் மேலெழும் வெப்பம் சாந்தப்படுத்தப்பட்டு, தலையை தாக்காமல் இருக்கும். குளித்து முடிக்கும் தறுவாயில் அந்த நீரை துப்பிவிடவும்.

குளித்த பின் :

தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகத்தில் நம் முதுகு பகுதியான 'பிரஷ்டம்' தான் மிகப்பெரியது. இங்கு தான் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும். இதனால் குளித்த முடித்த உடன் இந்தப் பகுதியை தான் முதலில் துடைக்க வேண்டும்.

நனைக்கப்பட்ட துண்டு

நம்மில் பெரும்பாலும் குளித்த பின்னர் உலர்ந்த துண்டு தான் துவட்ட பயன்படுத்துவோம். ஆனால் அது சரியான முறை அல்ல. குளிக்கும் நீரிலேயே நாம் துவட்டும் துண்டை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உகந்தது.உலர்ந்த துண்டு பயன்படுத்த துவட்டுவதால் நாம் உள் சூட்டை வேகமாக பரவ செய்யும், இதனால் உடலில் உள் வலிகளை ஏற்படுத்தும்.

பேசக்கூடாது :

நாம் வாய் திறந்து பேச கூடாத மூன்று முக்கிய நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம். இந்த நேரத்தில் மௌனமாக மனதில் இறைவனை ஜெபிப்பது நல்லது.

குளிப்பதன் மூலம் ஐம்புலன்கள் செய்த தவறுகளினால் நமக்கு ஏற்பட்ட கர்மாக்கள் களையப்படுகிறது.

நீர் நிலைகளில் குளிக்கும் முறை :

வீட்டில் தவிர குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் தேவர், தேவதைகள், மகான்கள், பெரியவர்கள் ஆரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறப்படுகிறது.

'நாரம்' எனப்படும் தண்ணீரில் நாராயணம் வாசம் செய்கின்றான். அதனால் நீர் நிலைகளில் ஓடி சென்று குதிக்காமல், கரையில் நின்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்த பின்னர், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில், நீர் கலங்காமல் மெதுவாக இறங்கி குளிக்க வேண்டும்.

அதேபோல் நீரில் காரி உமிழ்வதும், துப்புவதும் கூடாது. ஏனெனில் நீரின்றி ஒரு உயிரினமும் கிடையாது. இதனால் நீரை விரயம் செய்வது கூடாது. கடன் அதிகரிக்கும்.

உப்பு நீரில் குளிப்பதால் நம் திருஷ்டி தோஷங்கள் அறுக்கும்.

  • 316
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்