Support Ads
 ·   ·  103 posts
  • 2 members
  • 2 friends

தோஷத்தை போக்கும் லிங்க வழிபாடு

சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை வழிபட்டால் எத்தகைய தோஷங்களாக இருந்தாலும் விலகும். 

இருப்பினும், குறிப்பிட்ட சில தலங்களில் உள்ள சிவலிங்கத்தினை வழிபடுவதன் மூலம் நமது பிரச்சனைகளுக்கான தீர்வை பெறலாம். 

அந்த வகையில் எந்த வகை தோஷங்களுக்கு எந்த தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபடலாம் என அறிந்து கொள்வோம்.

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் :

விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி என்னும் ஊரில் திருச்சுழி திருமேனிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நிலத்தில் ஏற்படும் விளைச்சல் பிரச்சனைகள், நாம் தங்கி இருக்கும் மனையில் ஏற்படும் ஏதாவது பிரச்சனைகள் என நிலம் மற்றும் மனை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் போக்க வழிபடலாம்.

பிரச்சனை உள்ள நிலத்திலோ அல்லது மனையிலோ இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக்கொண்டு வந்து இந்த கோவிலில் வைத்து, அந்த மண்ணில் உள்ள பிரச்சனைகளையும் தீர்த்து வைக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டு பின் அந்த மண்ணை மீண்டும் நம் நிலத்தில் கலந்துவிட்டால் அந்த நிலத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கையாகும்.

குடவாசல் கோநேசர் :

கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குடவாசல் என்னும் ஊர். இங்குள்ள குடவாசல் கோநேசர் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உடலில் ஏற்பட்ட பிணிகளும், மன கஷ்டங்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் :

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் கோவில். பல சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலிற்கு தொடர்ந்து ஆறு பிரதோஷ தினத்தன்று வந்து சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட்டால் புத்திர தோஷங்கள் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

கீழத் திருவேங்கடநாதபுரம் கயிலாசநாதர் கோவில் :

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்னத்தூர் என்னும் இடம். இங்கு அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயத்திற்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்தால் திருமண தடை, ராகு தோஷம், குழந்தை பேரு பெறுவதில் ஏற்படும் தடை போன்ற தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகும்.

திருச்சேறை ருணவிமோசனர் :

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருச்சேறை என்னும் ஊரில் அமைந்துள்ளது திருச்சேறை ருணவிமோசனர் கோவில். இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் இம்மை, மறுமைக்கான கடன்களும், பல நாட்களாக தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

  • 111
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்