Support Ads
 ·   ·  147 posts
  • 2 members
  • 2 friends

இறந்தவர் என்னுடைய குரு - ரமணர்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு முரடர் இறந்துவிட்டார். அங்கிருந்த ஜனங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். இத்தனை மக்களை மிரட்டி, பொருள் பறித்து வாழ்ந்த தீயவன் ஒழிந்தான் என்று நிம்மதியால் மகிழ்ந்தார்கள்.
 ஊர் மக்கள் எல்லோரும் அதுபற்றி ரமணரிடம் வந்து சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள். நிஷ்டையில் இருந்த ரமணர் இதுபற்றி எந்த எதிர்வினையும் ஆற்றாது இருந்தார். நேரம் கடந்தது.
மாலையில் இறந்த நபருடைய பூத உடல் மயானத்திற்குச் செல்லும்பொருட்டு ரமணரின் ஆஸ்ரமத்தைத் தாண்டிச் சென்றது. அப்போது ரமணர் எழுந்து நின்றவாறு கைகூப்பி அந்த உடலுக்கு மரியாதை செய்தார். இதுகண்டு அவர் பக்தர்களுக்கு கோபம் வந்துவிட்டது. 'அயோக்கியனுக்கு ஏன் மரியாதை' என்று பொங்கிவிட்டார்கள். ரமணர் ஒன்றும் சொல்லவில்லை.
பக்தர்களின் ஓயாத நச்சரிப்பால் ரமணர் தன் மெளனத்தைக் கலைத்தார். ‘இறந்தவர் என்னுடைய குரு’ என்றார். எல்லோரும் வியந்தார்கள். 'வாழவே தகுதி இல்லாத இந்த கொடியவனா, இந்த மகானுக்கு குரு' என்று குழம்பினர். ரமணர் சோகத்தோடு சொன்னார்.
'நான் திருவண்ணாமலைக்கு வரும்போது என் வயது 12. அதுவரை என் அம்மாதான் எனக்கு முதுகுத் தேய்த்து, தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுவார். தன்னாலே குளிக்கும் விதம் எனக்குத் தெரியாது. அதனால் இங்கு வரும்வரை எப்படி குளிக்க வேண்டும் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. இங்கு ஒருமுறை கிரிவலப் பாதையில் இருந்த ஒரு குளத்தில் இவர் குளித்ததைப் பார்த்தேன்.
எப்படி நாமே முதுகைத் தேய்ப்பது, கை-கால் விரல்கள், காது மூக்கு என ஒவ்வொரு இடத்தையும் எப்படி அழுக்குப் போக சுத்தம் செய்வது என்று இவரிடம் கவனித்தேன். நானும் அதுபோலவே குளிக்க இவரைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன்.
 எனக்கு உடல் சுத்தம் பற்றி கற்றுக் கொடுத்த குரு இவர். அதனால் இவரை வெறுக்க மனம் விரும்பவில்லை’ என்றார். 
எல்லோரும் தீயவராகப் பார்த்த ஒருவரை ரமணர் மட்டுமே குருவாகப் பார்த்தார். அதனால்தான் அவர் மகான் என போற்றப்பட்டார்.
  • 328
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்