Category:
Created:
Updated:
I
பண்டைய காலத்தில் தூங்குவதற்கு முன்பு தொப்புள் பகுதியில் எண்ணெய் தடவி தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய், நெய், ஆமணக்கு எண்ணெய் என்று பல்வேறு விதமான எண்ணெய் வகைகளை தூங்குவதற்கு முன் தொப்புள் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் அதிக நன்மையை பெறலாம். இவ்வாறு செய்வதால் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நமது உடம்பில் உள்ள நரம்பு மண்டலமும் சிறப்பாக செயல்படுகின்றது.
ஆமணக்கு எண்ணெய்யை விட்டு மசாஜ் செய்தால் முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி குணமாவதுடன், எலும்புகளும் வலிமை பெறும்.
வேப்பெண்ணெயை வைத்து மசாஜ் செய்துவிட்டு தூங்கினால், முகப்பரு போவதுடன், சருமமும் பளபளப்பாக காணப்படுவதுடன், தினசரி இதனை செய்தால் நல்ல பலனை பெறலாம்.