- · 5 friends
-
I

ஆரோக்கியம் மிகுந்த முருங்கைக் கீரை இட்லி பொடி
இட்லி, தோசை போன்றவற்றிற்கு உடனடியாக நமக்கு உதவி செய்வது தான் இட்லி பொடி. பல குழந்தைகளுக்கு இட்லி பொடி இருந்தால் இட்லியையும், தோசையையும் சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட இட்லி பொடியை மிகவும் சத்து மிகுந்த இட்லி பொடியாக எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
ஆரோக்கியமும் சத்தும் மிகுந்த முருங்கைக்கீரை இட்லி பொடி எப்படி செய்ய வேண்டுமென்றால், முதலில் முருங்கைக் கீரையில் இருக்கும் கனமான காம்புகளை மட்டும் நீக்கி விட வேண்டும். பிறகு அதை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை நிழல் காய்ச்சலாக காய வைக்க வேண்டும்.
சருகு போல் காயும் அளவுக்கு காய வைக்க வேண்டும். காய்ந்த முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து – 2 கப், கடலைப்பருப்பு – 1 கப், மிளகு – 1 ஸ்பூன், தனியா – 1 ஸ்பூன், கட்டி பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு, எள் – 2 ஸ்பூன், மிளகாய் – 8, கருவேப்பிலை – 2 இனுக்கு, துவரம் பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், உப்பு – தேவையான அளவு.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான தீயில் இவை அனைத்தையும் தனித்தனியாக போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆறிய பிறகு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூண்டு ஆறு பல் சேர்த்து அதையும் நன்றாக வதக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
இரும்பு சத்து மிகுந்த முருங்கைக்கீரை இட்லி பொடி தயாராகிவிட்டது. சுட சுட இட்லி தோசைக்கு சத்து மிகுந்த முருங்கைக்கீரை இட்லி பொடியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அமிர்தம் போல் ஆரோக்கியம் கிடைக்கும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·