·   ·  99 posts
  • 2 members
  • 2 friends

ஸ்ரீ திருவாலீஸ்வரர் சமேத சௌந்தரவல்லி திருக்கோயில்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அரசூர் கிராமத்தில் அழகுற அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் சமேத சௌந்தரவல்லி திருக்கோயில்.

அகத்திய மாமுனிவரும், பரத்வாஜரும், வானரத் தலைவன் வாலி எந்த பகுதியில் வசித்துள்ளனர். வாலி கட்டிய கோயில் என்பதால் அவரது பெயரிலேயே திருவாலீஸ்வரர் என்ற நாமத்துடன் சிவபெருமான் இங்கு அழைக்கப்படுகின்றார். வாலி கிஷ்கிந்தாபுரிக்கு பேரரசனாக இருந்தாலும் தான் தனிப்பட்ட முறையில் வழிபட சிவன் கோயில் வேண்டும் என்று தானே அதனை பிரதிஷ்டையும் செய்ய வேண்டும் என கருதி பல ஊர்களை தேடி வந்த போது அரசூர் என்ற இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகின்றது.

இங்கு தங்கி வானரப் படைகள் மூலம் ஒரு குளமும் அமைத்து அங்கு கோயில் கட்டினார் என்பது புராண கதை. கோயிலில் மூலவராகவும், உற்சவராகவும் ஸ்ரீ திருவாலீஸ்வரரும், ஆலயத்தில் அம்பாளும் செளந்தரவல்லி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கின்றார். 16 பட்டைகள் கோணங்கள் கொண்ட லிங்க வடிவமாக சிவன் இங்கு காட்சி தருகின்றார்.

நாம் 16 செல்வங்களை பெற்று இருக்கிறோம் என்கின்ற தத்துவம் கொண்ட சிவலிங்கமாக இது திகழ்கின்றது. கோயிலின் தல விருட்சமாக நாவல் மரம் அமைந்துள்ளது. இந்த தலத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜ பெருமாள், பஞ்சலிங்கங்களும் அமைந்துள்ளன.

ஸ்ரீ காலஹஸ்தி காஞ்சிபுரம், திருவானைக்கா காசி ராமேஸ்வரம் உள்ளிட்ட ஐந்து தலங்களில் உள்ள பஞ்சலிங்கங்கள் வடிவில் சிவபெருமான் இங்கு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, கால பைரவர் உட்பட சாமி சிலைகள் பல்வேறு அழகிய வடிவிலான சிற்பங்களும் அமையப் பெற்றுள்ளன.

கோயிலில் பிரதோஷ வழிபாடு, நவராத்திரி, பங்குனி உத்திரம், ஐப்பசி அன்னாபிஷேகம், விநாயகர் பூஜைகள் விசேஷமாக நடைபெறுகின்றன. திருமணம் நடக்காதவர்கள் இங்கு வேண்டினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள எம்பெருமானையும், அம்பாளையும் தரிசித்தால் குழந்தை பேரு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரி வழியாக 5 கிலோமீட்டர் கடந்து அரசூர் கிராமத்தை அடைந்தால் அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரரை தரிசிக்கலாம்

  • 128
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்