
கரணவாய் கலட்டியை கிழக்கு பிறப்பிடமாகவும் வதிரியை வசிப்பிடமாகவும் கொண்டவரின் சடலம் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
கரணவாய் கலட்டியை கிழக்கு பிறப்பிடமாகவும் வதிரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணபதிப்பிள்ளை செல்லத்துரை என்பவரை இன்று அதிகாலை 2.00 மணியிலிருந்து காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள். அவருடைய சடலம் கரணவாய் கிழக்குப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது. பிற்பகல் கரணவாய் கிழக்கு உள்ள கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு உள்ளது. கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.