
யாழில் ஆலயத்திற்கு சென்ற நபர் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது,
யாழ்ப்பாணம் மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும் போது கால் வழுக்கி விழுந்துள்ளார்.
அதன் போது பின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.