- · 1 friends
-

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் - கனடா கல்விக் கண்காட்சி
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் - கனடா கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி யாழ்ப்பாணம் வலம்புரி ஆடம்பர விருந்தினர் விடுதியில்
மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்படு செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த குதித்த நிகழ்வின் ஏற்பட்டுக்குழுவினர் கூதுகையில் -
யாழ் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சியானது இரு நாள்களை கொண்டதாக நடைபெறவுள்ளது
வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன.
இந்த நிகழ்வு 30.05.2025 அன்று காலை 09.00 மணிக்கு வலம்புரி ஆடம்பர விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்களுள்ளதுடன் துறைசார் காள்விகளுக்கும் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது
அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு ஜெற்வின் ஆடம்பர விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சி ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.