·   ·  71 news
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

மோல்டோவாவில் கொவிட்-19 தொற்றினால் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு ஐரோப்பிய நாடான மோல்டோவாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மோல்டோவாவில் கொவிட்-19 தொற்றினால் ஆறாயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 66ஆவது நாடாக விளங்கும் மோல்டோவாவில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 53ஆயிரத்து 567பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 181பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 74பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 160பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

  • 918
  • More
Comments (0)
Login or Join to comment.