நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை

14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!

14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வயதில் சினிமாவின் உச்சத்திற்கு சென்று, சென்னையில் கார் பங்களா என வசதியுடன் வாழ்ந்த நடிகை ஒருவர் ஒரு சில ஆண்டுகளிலேயே தலைகீழாக ஏழ்மை நிலைக்கு திரும்பி, கடன் காரணமாக சிறைக்கும் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றால் அது நடிகை ஜெயக்குமாரியின் சோக கதைதான்.

நடிகை ஜெயக்குமாரி பெங்களூரை சேர்ந்தவர். இவர் சினிமாவில் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக சென்னை வந்த நிலையில் அவருக்கு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் கலெக்டர் மாலதி என்ற மலையாள திரைப்படத்தில் பிரேம் நசீர் ஜோடியாக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் பல மலையாள படங்களில் நடித்தார்.

தமிழில் எம்ஜிஆர் நடித்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நம்பியாருக்கு தங்கையாக நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இருப்பினும் ஜெயக்குமாரிக்கு ஒரு பாடல் நடனமாட வாய்ப்புகள் கிடைத்தது.

சிஐடி சங்கர், அனாதை ஆனந்தன், மாணவன், மீண்டும் வாழ்வேன், நூற்றுக்கு நூறு, அருணோதயம், காசேதான் கடவுளடா, கௌரவம் உள்ளிட்ட பல படங்களில் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அவரது நடனம் அந்த கால இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

கவர்ச்சி நடனம் ஆடுவதற்காக அவர் பெரிய தொகையை சம்பளமாக பெற்றதால் அவர் மிக குறுகிய காலத்தில் செல்வந்தர் ஆனார். சென்னையில் ஒரு மிகப்பெரிய மாளிகையை வாங்கினார் என்றும் அவரிடம் இரண்டு விலையுயர்ந்த கார்கள் இருந்தது என்றும் கூறப்பட்டது. அவருடைய வீட்டின் மாடியில் தான் நடிகை ராதிகாவும் அவருடைய அம்மாவும் வாடகைக்கு இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயக்குமாரி சிங்கப்பூருக்கு கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது அப்துல்லா என்பவரை சந்தித்து அவரை காதலித்தார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். குழந்தைகள் பிறந்த பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் அவர் பட தயாரிப்பில் ஈடுபட்டார்.

ஏ.எஸ்.பிரகாசம் என்பவர் இயக்கத்தில் படம் தயாரித்துக் கொண்டிருந்தபோது அவருடைய கையில் இருந்த காசு எல்லாமே செலவாகிவிட்டது. அதன் பிறகு வட்டிக்கு வாங்கி படத்தை தயாரித்தார். ஆனாலும் அந்த படத்தை அவரால் முடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கடன்காரர்கள் நெருக்கிய நிலையில் வீடு, கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டார். அதன் பிறகும் அவரால் கடனை தீர்க்க முடியவில்லை என்பதால் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் மிகவும் சோகத்தில் இருந்த அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அன்றைய முதல்வரான கலைஞர் கருணாநிதியை சந்தித்ததாகவும் கருணாநிதி தான் காவல்துறை அதிகாரிகளிடம் கூறி அவருக்கு நீதி பெற்று தந்ததாகவும் கூறப்பட்டது.

ஒரு வழியாக வழக்கில் இருந்து விடுதலை பெற்றாலும் அவரை காப்பாற்றுவதற்காக ஒருவர் கூட முன்வரவில்லை என்பதுதான் பெரும் சோகம். கணவர் மற்றும் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் சென்னைக்கு ஒதுக்கு புறமான பெருங்குடி என்ற பகுதியில் அவர் ஒரு குடிசையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பத்திரிகையாளர் ஒருவர் அவரை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து பத்திரிகையில் வெளியானதும்தான் அன்றைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அவருக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் தற்போது அவர் இரு சிறுநீரகங்களிலும் பிரச்சனை என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கூட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அவரை நேரில் சந்தித்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

14 வயதில் சினிமாவுக்கு வந்து புகழின் உச்சம் சென்று, கார், பங்களா என வசதியாக வாழ்ந்து, ஒரே ஒரு சொந்த பாடம் எடுத்ததால் வாழ்க்கையே தலைகீழாக மாறிய சோகத்தை சந்தித்தவர் ஜெயக்குமாரி. இவர் மட்டுமின்றி ஏராளமான நடிகர்கள் தாங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை எல்லாம் சொந்த படம் எடுத்து தான் இழந்து உள்ளார்கள்.

  • 1223
  • More
Comments (0)
Login or Join to comment.
சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு