எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது

கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எவ்வளவோ நடிகர்களைப் பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்க முடியும். ஆனால், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர்கூட ரங்காராவை இதுவரை இமிடேட் செய்ததே கிடையாது. அவ்வளவு நுட்பமானவை அவரது நடிப்பின் பரிமாணங்கள்!

அதிக படங்களில் அப்பா வேடங்களில் நடித்தார். ஆனாலும், இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப்படங்களில் 25 ஆண்டுகள் (1950-களில்,1960-களில்,1970-களின்முன்பகுதியில் ) வயதான, முதிய கதாபாத்திரங்களை நிறைய செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி. ரங்காராவ் அறுபது வயதைத் தன் வாழ்நாளில் கண்டதில்லை.1974-ல் அவர் மறைந்தபோது அவர் வயது56தான்.

தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்தவர். தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விசுவநாத சக்ரவர்த்தி' எனப் பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டத்தைத் தமிழ்ப் பட டைட்டில்களில் யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்திலேயே பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் http://B.Sc. அது மட்டுமல்லாமல் நாடக மேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த ஷேக்ஸ்பீரியன் ஆக்டர்!

நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப்படங்களில் புராண கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார். ஒரு தெலுங்கு நடிகர் தமிழ்ப் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.

ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் தனது அபாரமான நடிப்பால் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். ‘தேவதாஸ்’, ‘மிஸ்ஸியம்மா’ ஆரம்பித்து.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் மாமனார் - மருமகள் பாசத்துக்கு எடுத்துக்காட்டுபோல விஜயகுமாரியின் மாமனாராக ரங்காராவ் நடிப்பில் யதார்த்தம் வெகுவாக வெளிப்பட்டு நிற்கும். ‘கற்பகம்' படத்தில் ஜெமினி கணேஷின் மாமனாராக நடித்திருப்பார்.

திரைப்படங்களில் அப்பா வேடத்துக்கே தனி கவுரவத்தை ஏற்படுத்தியவர் எஸ்.வி.ரங்காராவ். அப்பா வேடம் மட்டுமல்ல, ‘கண்கண்ட தெய்வம்' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' வேடம்! அதிலும் புடம்போட்ட தங்கமாகப் பளிச்சிட்டிருப்பார்.

‘பக்த பிரகலாதா', ‘நம் நாடு’ போன்ற படங்களில் அவர் ஏற்ற வில்லன் வேடங்கள் பார்ப்பவர்கள் வயிற்றைக் கலக்கும். ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலில் ரங்காராவின் நடிப்பு தென்னிந்தியா முழுவதும் பிரபலம். ‘சபாஷ் மீனா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘சர்வர் சுந்தரம்’ஆகிய படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை அற்புதமாகப் பிரகாசிக்கும்.

தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. ஆம்! ரங்காராவ் இயக்குநரும்கூட! இந்தோனேசியாவில் ஒரு திரைப்பட விழாவில் இவர் ‘நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார். மற்றபடி இந்திய அரசின் கவுரவம் எதுவும் இவருக்குக் கிடைத்ததில்லை. உலகின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

‘நானும் ஒரு பெண்’ (1963) படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புக்கு எம்.ஆர். ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து, கடைசியில் பொறுமை இழக்கிற நிலைக்கு வந்துவிட்டார். ரங்காராவ் தாமதமாக செட்டின் உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே கமென்ட் அடித்திருக்கிறார்

“கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு... ஒரு ஒழுங்கும் இல்ல. படாதபாடு படுத்துறான்.” ரங்காராவ் மனம் நொந்து இயக்குநரிடம் ''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து கிளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள். எனக்கு உடம்பு சரியில்லை. ஆனால் அதுபற்றிக் கவலையில்லை” என்று ரோஷத்தோடு சொல்லி அதன்படியே நடித்துக்கொடுத்தாராம்.

‘பக்த பிரகலாதா’ (1967) படத்தில் இரண்யகசிபுவாக ரங்காராவ் நடித்தார். படப்பிடிப்புக்கு ரங்காராவ் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் மெய்யப்பச் செட்டியாரின் காதுக்குத் தகவல் போனது. செட்டியார் கோபமாகிவிட்டார். “நான் இன்று செட்டுக்கு வருகிறேன்” என்றவர் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் சொன்னது போல் ஆஜர் ஆனார். ரங்காராவுக்குச் சூட்சுமம் புரிந்துவிட்டது. புகார் செட்டியார்வரை சென்றுவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார். படப்பிடிப்பு இடைவேளையில் அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களையெல்லாம் கழற்றி விட்டுச் சொன்னார்,

“மிஸ்டர் செட்டியார்! இந்த நகைகளைப் பிடியுங்கள்.” செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார். சரியான கனம்! “இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு புராண வசனமும் பேசி எவ்வளவு நேரம் நான் நடிக்க முடியும், சொல்லுங்கள்! நான் வீட்டுக்குப் போன பின்னும் இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது” என்று சொல்ல, செட்டியார் பரிவுடன் சொன்னாராம் “நீங்கள் செய்தது சரிதான்."

உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தி நடித்தாலும் அளவை மீறாமல் நடித்த ரங்காராவுக்கு மாற்றாகக் குறிப்பிட யாருமில்லை.

  • 1366
  • More
சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு