Ads
Latest Poems


- ·
- · GomathiSiva
ஒதுக்கி கொள்வதற்காகவும்ஒதுங்கி கொள்வதற்காகவும்காரணம் தேடுகிறார்கள்சிலர்பாசங்கள் அவர்களுக்குபாதம்அப்பி வைத்தசுவடுகள் மட்டுமேதள்ளி போவதற்காய்தடயம் தேடுபவர்கள்கோபம் படுவதாயும்பழி சொல்லி போவார்கள்உலகம்மனிதர்களைமிருகங்களாய்மாற்றிக் கொண்டிருக்கிறதுமனிதத்தை களவாடிசவக்குழிக்குள்புதைத்து விடுகிறதுபிழை பிடிப்பதில்பிழைப்பு நடத்துப்பவர்கள்மனதைகொலை செய்து விடுகிறார்கள்பாவப்பட்ட சிலர்கோவப்பட்டுஅவர்களுக்குஆதாரம்கொடுத்து கொண்டிருக்கிறார்கள்




- ·
- · GomathiSiva
கூடிக் களித்த கொண்டாட்டங்கள் குலைந்து தான் போனதே....கொஞ்சிப் பேசும் மழலையையும் "கொஞ்ச"ம் அச்சமாய் நகர்ந்து தான் போனதே....மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நோக்கும் நிலை என்றுமே மாறாது போனதோ .....முகத்தை மறைக்கும் முகமூடியோ புன்னகையையும் சேர்த்தே மறைத்து போனதே.....எனக்கும் சமூகத்திற்கும் ஆன தொடர்புகளோ சங்கிலியில் அறுபட்ட கன்னியாய் "சமூக இடைவெளியாய் ".....

- ·
- · beesiva
முப்பதுக்குமேல் முடி உதிர்கின்றது.நாற்பதில்பார்வை குறைகின்றது.ஐம்பதுக்குமேல் பற்கள் ஈடாடுது.அறுபதுக்குமேல் சொற்கள் வலுவிழக்கின்றது.இப்படியேஉடம்போடு வந்ததெல்லாம்சொல்லாமலேமாற்றம் காண்கையில்கூடிப் பிறந்ததுகளும்கூடப்பழகியவரும்வாழ்வோடுநிலைக்கவா போகின்றனர்..சூழ்நிலைஉடைந்த கண்ணாடி.ஒழுங்கான முகத்தையும்அவலட்சணமாக்கிபிரதிபலிக்கும்.குத்திக் காட்டும்மனிதனுக்கும்சுட்டிக் காட்டும்மனிதனுக்கும் நடுவில்நர்த்தனமாடாதுநாகரீக சிரிப்போடுநகரந்து விடு..சண்டைகள்போட்டு பேசாமல்இருந்தது அக்காலம்.சண்டைகள்வந்திடுமோ என பயந்துபேசாமல் இருப்பதுஇக்காலம்..வானிலையை விடவும்மனிதனின்மனநிலை அதிகம்மாறுது தற்காலம்..இன்னும்சொற்ப காலமேமனமே அமைதியைகாத்திடு..கூடிய மனக் குப்பைகளைகுளத்தடியைகண்டதும் மரத்தடியோரம்இறக்கிவிட்டேன்..ஈரமான இதயங்கள

- ·
- · beesiva
கணவன் மறைந்து விட கண்ணீர் அவளை மணந்துக் கொண்டது எத்தனை துன்பங்கள் அவளுக்கு மாலையாய் விழுந்தது சமூகத்தின் புறக்கணிப்பு சத்தம் இல்லாமல் அவளது குறவளையை நசித்துக் கொண்டிருந்தது சோகங்கள் சொந்தமாய் உறவாடவறுமை கோரத் தாண்டவம் ஆடியது சகுனம் பார்ப்பவர்கள் மனதை காயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள் எத்தனை பழி சொற்கள் அவளுக்கு வலி கொடுக்கிறது அதை போக்க வழி கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் இந்த போராட்ட வாழ்க்கைபோதும் என்றாகி விட்டதுஉடைந்து விழுந்த ஒரு பூவைப் போல தினமும் நசுக்கப் பட்டு விழி ஓரமாய் கண்ணீர் கோடுகளுடன் கழிகிறது காலம்
- ·
- · beesiva
நடந்து வந்தபாதைகளெல்லாம்முள் வேலிகளேநடந்து கொண்டிருக்கும்பாதைகளெங்கனும்பள்ளமும் திட்டியுமே.இனி நடக்கபோகும் பாதைகளும்துன்பமும் துயரமும்எதிர் கொள்ளும்என்பதில் ஏமாற்றமில்லை.இலக்கினைஎட்டும் தூரம் வரைநடக்க வேண்டியதும்உன் பாதங்களேநம்பிக்கை ஒன்று தான்உனக்கு பாதணிகள்.உணர்வுகளையும்உண்மைக் கலைகளையும்மதியாதவன் குடிலில்கோபுர நினைப்புவேண்டாம்.மதிப்பவன் மனையில்சருகாயிருந்தாலும்மெருகாவாய் வீணேஉருகாதே..அன்புக்குகாலம் நேரம் கிடையாது.அதற்குபிறப்பும் இறப்பும்உருவமும் இருக்காது.உணர்வு மாத்திரமேஅதுஉண்மை விழிகளுக்கேதோன்றும் வல்லமைகொண்டது. அன்பை நேசிஅகிலம் அணைத்துக் கொள்ளும்.
- ·
- · GomathiSiva
படிகள் உனக்கு படுக்கையறை நெடியை மறந்து நுளம்புடன் போரிட்டுசுகமாய்உறங்காமல் உறங்கும் தெரு குப்பையாய்இதயம் இத்துப்போன மனித குளத்தில் உதயம் ஒன்றை தேடி உறங்குகிறாயாவிடியும் முன்பே நீ விளிக்கும் முன்பேவிரட்டியடிக்கும் மிருக கூட்டங்களின் மந்தைகள் வாழுமிடமிதுகருணையை கத்தரித்து கொடிய தீ மூட்டி நொடி பொழுதில் நொண்டியடிக்க வைக்கும் ஈன சமூகம் இது
Ads
Poems Categories
மற்றவை (10)
அப்பா, தந்தை (2)
அழகு (0)
அரசியல் (1)
அனுபவம் (8)
ஆசை (1)
இறைவன் (1)
இயற்க்கை (1)
உறவு (0)
கல்வி (0)
கடவுள் (0)
காதல் பிரிவு (0)
காதலர் தினம் (0)
காத்திருப்பு (0)
காதல் (1)
சூழல் (0)
சிந்தனை (0)
தமிழ் மொழி (0)
தன்னம்பிக்கை (0)
தாய்மை (0)
தேடல் (0)
நாடு (0)
பக்தி (0)
பெண்கள், பெண்மை (1)
மழலை (0)
சமுதாயம் (7)
மொழி (0)
வெற்றி (0)
வறுமை (2)
விவசாயம் (0)
மனிதன் (0)
மனம் (0)
முத்தம் (0)
கனவு (0)
சோகம் (1)
உண்மை (0)
நம்பிக்கை (1)
தனிமை (0)
தவிப்பு (0)
குழந்தை (0)
முயற்சி (0)
ஏக்கம் (1)
மழை (0)
தத்துவம் (0)
வாழ்த்து (0)
பெண் (1)
தோல்வி (0)
திருமணம் (0)
நன்றி (0)
நட்பு (1)
பாசம் (2)
பிறந்தநாள் (0)
பிரிவு (0)
பிறப்பு (0)
மதம் (0)
விலங்கு (0)
வாழ்க்கை (0)
தீபாவளி (0)
பொங்கல் (0)
தமிழ் புத்தாண்டு (0)
புத்தாண்டு (0)
ரமலான் (0)
என் கவிதை (0)
Ads