- ·
- · GomathiSiva
உச்சம் தொட்ட விலை
உட்கார்ந்திருந்தது தக்காளி...
உடன் ஏறிய நிலை
உரிக்காமலேயே கண்ணில் நீர்துளி
உதிர வைத்தது சின்னவெங்காயம்...
சிறு துண்டு இஞ்சியும்
சில்லறைக்கு இனி இல்லை...
உருண்டது அங்குமிங்குமாய்
உற்சாகமாய் முட்டைகோசு
இரண்டு மாதமாய்
இறங்கவில்லை அதன் மவுசு...
துட்டில் மிக தூக்கலாய்
துடிப்பாய் தட்டில் மிளகாய்...
பரவலாய் விரிந்திருக்கும்
பசுமையாய் காய்கறி அவை..
வதங்கியது வியாபாரி முகம்
விற்பனை களை கட்டவில்லை...!
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
கல்லறை வாசங்களை
பார்த்து விட்டேன்
- ·
- · GomathiSiva
விழும் அச்சமில்லை
விரல்நுனி தாங்கிடும்...
வறுமையின் உச்சம்
வாழ்வின் ஆதாரம்...!
- ·
- · GomathiSiva
கூன் விழுந்த பாட்டி
கூட வரும் நம்பிக்கையூட்டி...
ஒன்றாய் கைகோர்த்தபடி
ஒற்றை கைத்தடி...!
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
அரியானை அம்பலக் கூத்தனை
அருமறையின் அகத்தானை...
ஆர்வத்தினை அகம் வைத்து
அனுதினமும் போற்றும் பொழுது...
அனைத்தும் தரும் திருஐந்தெழுத்து!
விஸ்வநாதர் ஆட்சியாய்
விசாலாட்சி அன்னையாய்...
அன்னத்தின் பெருமை
அன்னபூரணி வீற்றிடலாய்...
காவல் தெய்வமாய்
காலபைரவர் துணை...
சிறப்பாய் கோவிலெங்கும்
சிவலிங்கம் அருளாசி...
பூமியில் படர்ந்திருக்கும்
புண்ணியஸ்தலம் காசி
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
விடிந்தது முடிகிறது
பொழுது
மடிந்து புதைகிறது
கனவு
விடியலின் புலர்வில்
மடிந்து விழுகிறது
மகிழ்ச்சி மட்டுமே
ஏமாற்றங்களின்
கைக்குலுக்கள்கள்
நம்பிக்கை துரோகங்கள்
ஏமாற்றங்களின்
ஏர்பிடிப்புக்கள்
தினமும் சந்திக்கும்
சகோதரர்கள்
மாற்றங்கள் துரு
நாற்றங்களாய் வீசுகிறது
திட்டாங்கள்
சதி வலைகளை
பின்னுகிறது
அன்பானவர்கள்
அரக்கர்களாகி விட
அதிர்ச்சி கிடங்கில்
சவமாய் விழுகிறோம்
வாழும் எண்ணம்
வாடி விழ
லட்சியங்கள்
மூச்சைடைத்து
முகவரி தொலைக்கிறது