News
Latest News
படகு விபத்தில் காணாமல் போன டொரண்டோ தம்பதி சடலமாக மீட்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  441 views
கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் டொரண்டோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.சனிக்கிழமை பிற்பகலில் காணாமல்
ஜோதிடர் என 8 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் இந்தியாவுக்கு தப்பியோட்டம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  639 views
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையா
 16 வயது சிறுவன் படுகொலையில் தேடப்பட்டு வந்த நபர் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  406 views
கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கி
ஒண்டாரியோவில் தொடர் காட்டுத் தீ - கியூபெக் இளைஞர் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  403 views
கனடாவின் வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ஹியூரான் ஷோர்ஸ் பகுதியில் திட்டமிட்டுத் தொடர்ச்சியாக காட்டுத் தீ மூட்டிய குற்றச்சாட்டில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 28 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில், 'மெல்வெல் வீதிக்கு' அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் காட்டுத் தீ பரவுவதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்குக் கோரிக்கைகள் வந்தன.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும், வீதியின் இருபுறமும் சுமார் 10 அடி முதல் 700 அடி வரையிலான காட்டுப்பகுதிகளில் திட்டமிட்டு வைக்கப்பட்ட 10 சிறிய காட்டுத் தீ சம்பவங்களை கண்டறிந்து கட்டுப்படுத்தினர்.தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் நடமாடிய சந்தேகத
நண்பர்களை துண்டு துண்டாக வெட்டி கொடூரக் கொலை
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  392 views
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர வைத்துள்ளது.சந்தேக நபர் குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார்.கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டா
இளம்பெண்ணை கொன்றுவிட்டு தப்பியோடியவர் பொலிசாரால் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  412 views
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொரன்றோவில், நவ்நீத் கௌர் (26) என்னும் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். கௌரை பின் தொடர்ந்த ஒருவர், திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.தகவலறிந்த பொலிசார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷரன்ஜீத் சிங் (37) என்றும் அவர் பிராம்டனைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.அவர் ஏற்கனவே கௌருக்கு அறிமுகமானவரா, எதனால் கௌரை அவர் சுட்டார் என்பது போன்
மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக் கொண்ட டிக்டாக் பிரபலம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  416 views
கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.இளம் வயதிலேயே அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ரெபெக்கா லூனா, 'WhereDidBecsGo' என்ற கணக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் 95,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைப் பெற்றிருந்தார்.அல்சைமர் நோயுடன் வாழும் தனது அன்றாட அனுபவங்களையும், "இறக்கும் தருவாயில் டேட்டிங் செய்வது" மற்றும் "புலப்படாத குறைபாடுகளுடன் பயணம் செய்வது" போன்ற தலைப்புகளில் வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.அண்மையிால் தனது உடலமைப்பில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக, தனக்குக் குறிப்பிட்டிருந்த மருத்துவ உதவியுடனான உயிர் மாய்ப்பு திகதியை முன்கூட்டியே மாற்றி அமைப்பதாக தனது
ஒண்டாரியோவில் இடம்பெற்ற கோர விபத்து
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  580 views
ஒண்டாரியோவின் லிஸ்டோவெல் அருகே இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 55 வயதுடைய நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.லிஸ்டோவெல் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'பெர்த் ரோடு 158' பகுதியில், 81-வது வீதிக்கும் 84-வது வீதிக்கும் இடையே இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பெர்த் கவுண்டி OPP காவலர்களும், அவசர மருத்துவ உதவிக் குழுவினரும் விரைந்தனர்.பாதசாரியாகச் சென்ற நியூ பிரன்சுவிக் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் மீது வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் அறிவித்தனர். இந்த விபத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 'பெர்த் ரோடு 158' பாதை, தற்போது மீண்டு
 கனடாவில் தப்பியோடிய கைதி கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  580 views
கனடாவின் ஒண்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.சிறையிலிருந்து தப்பிய கைதி ஆந்தனி பேட்ரிக் என அடையாளம் காணப்பட்டார்.ஜூலை 24ம் திகதி சிறையிலிருந்து தப்பியதாகத் தகவல் வெளியான நிலையில், தகவல் வெளியான சுமார் 9½ மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.சிறை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.தேடுதல் வேட்டையின் போது, நகரின் தெற்குப் பகுதி மற்றும் நெடுஞ்சாலை 61 வழித்தடத்தில் பயணிக்கும் வாகன சாரதிகள், அந்நியர்களுக்கு வாகனம் நிறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர்.கைதியை கண்டால் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உட
குழந்தை பராமரிப்புக்கு பணம் வழங்க மறுத்த தந்தைக்கு தண்டனை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  488 views
தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசுரத் தடையின் கீழ் "திரு. M" (Mr. M) எனக் குறிப்பிடப்படும் அந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது மொத்தமாக 37,312.54 டொலர்களை நிலுவையாக வைத்திருக்க வேண்டியிருந்தது.குழந்தையின் தாயாரான "திருமதி. C" (Ms. C) மற்றும் பிரதிவாதியான திரு. M ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணையவில்லை. குழந்தை பிறந்த நாள் முதல் வளர்ப்புச் செலவுகள் முழுவதையும் தாயாரே கவனித்து வந்துள்ளார்.ஆண்டிற்கு 297,700 டொலர்கள் வருமானம் ஈட்டும் திரு. M, குழந்தைப் பராமரிப்பிற்க
கனடாவில் மோசடி செய்த இந்திய வம்சாவளி இளம்பெண் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  404 views
கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண், வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை நம்பி, பலர் கௌரை அணுகி வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர்.ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது, அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வாடகைக்கு இருப்பதும், அந்த வீட்டை வாடகைக்கு விடும் திட்டமே அந்த வீட்டுக்காரருக்கு இல்லை என்பதும்!இதில் சிலர் தாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் உடைமைகளுடன் வந்துள்ளார்கள். அவர்கள் வாடகை ஒப்பந்தம் செய்து, குடியிருப்பதற்காக வந்த வீட்டில் ஏற்கனவே வேறொரு குடும்ப
கனடாவில் சிறுவர் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 63 பேர் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  411 views
கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கையைத் தொடர்ந்து, 63 சந்தேக நபர்கள் மீது 200-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.'புராஜெக்ட் டைம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை தயாரித்தல், கைவசம் வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களால் இலக்கு வைக்கப்பட்ட 51 பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உரிய உதவிகளும் வழங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 264 குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட