News
Latest News
கியூபாவில் வரலாறு காணாத வெள்ளம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  645 views
கரீபியனில் கோர தாண்டவம் ஆடிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியைத் தொடர்ந்து, கியூபாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது.சூறாவளி காரணமாகக் பெய்த கனமழையால், கியூபாவின் நீளமான நதியான ரியோ கௌடோ (Rio Cauto) தன் கரைகளை உடைத்துக் கொண்டு ஓடியது. இதனால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசர கால ஊழியர்கள், படகுகள் மற்றும் ராணுவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தண்ணீர் இடுப்பளவுக்கு மேல் இருந்த பகுதிகளில், மீட்புக் குழுவினர் நீச்சலுடைகளுடன் (Wetsuits) மக்களை மீட்டனர்.கியூபாவின் கிரான்மா மாகாணத்தில், தீயணைப்புத் துறையும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்
ரஷ்யாவின் புரவெஸ்ட்னிக் - உலகத்தில் எந்த நாட்டாலும் ஒன்றுமே செய்ய முடியாது
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  448 views
வரும் காலத்தில் பூமியில் போர் நடப்பதைவிட வானத்தில் தான் போரே நடக்க போகிறது. ஒவ்வொரு நாடுகளும் ஏவுகணைகளுக்கும், டிரோன்களுக்கும் கோடிகளை கொட்டுகின்றன. எதிரிகளின் நாட்டுக்கே செல்லாமல், எதிரிகளின் இலக்குகளை தாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அந்த வகையில் ரஷ்யா தயாரித்து சோதனை செய்த புரவேஸ்ட்னிக்கை உலகின் உலகத்தில் எந்த நாட்டாலும் ஒன்றுமே செய்ய முடியாது. அணு ஆயுதமான அது எப்படி செயல்படும்.ரஷ்யாவை பொறுத்தவரை அமெரிக்காவை போல் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யாவை தவிர உலகின் எந்த நாட்டுடனும் அமெரிக்கா எளிதாக மோதும். அதேநேரம் ரஷ்யா உடன் மட்டும் நேரடியாக மோதுவது இல்லை.உலகம் முழுக்க அண்மை காலம் வரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் தான் இருந்த
கனடிய பிரதமர் தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பல் தொழிற்சாலைக்கு விஜயம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  595 views
கனடிய பிரதமர் மார்க் கார்னி தென் கொரியாவில் நீர்மூழ்கிக் கப்பலக்ள தயாரிக்கும் உற்பத்திசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.கனடாவின் அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளும் போட்டியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான தென் கொரியாவின் ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) நிறுவனம் தயாரித்த கப்பல்களைப் பார்வயைிடும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தென்கொரியா விஜயம் செய்துள்ள பிரதமர் அங்கு பாதுகாப்பு கூட்டணி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கார்னியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்ஜின்டி, வைஸ் அட்மிரல் ஆங்கஸ் டாப்ஷி மற்றும் தென் கொரியா பிரதமர் கிம் மின்-சொக் ஆகியோரும் கலந்து கொண்டனர். கனடா, தனது பழமையான விக்டோரியா வகை (V
மோசடி குறுந்தகவல்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  583 views
கனடா முழுவதும் மோசடி குறுந்தகவல்கள் எண்ணிக்க அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வங்கிகள், தபால் திணைக்களம் அல்லது வருமான வரித்துறை (CRA) ஆகியவற்றின் பெயரில் வரும் மோசடி குறுந்தகவல்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாலானோர் அவை போலியானவை என்று அறிந்திருந்தாலும், பலர் இன்னும் இத்தகைய சதிகளுக்குள் சிக்கி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.போமன்வில்லில் (Bowmanville, Ontario) வசிக்கும் கேவின் போரிசிக் சமீபத்தில் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸில் ஒரு மீன்பிடி கம்பி விற்க முயன்றபோது ஒரு மோசடிக்குள்ளானார்.கொள்வனவாளர் என நம்பிய ஒருவர் அவருக்கு 150 டொலர் பணம் அனுப்பியதாகக் கூறி ஒரு e-Transfer இணைப்பை அனுப்பினார். போரிசிக் அந்த இணைப்பை கிளிக் செய்ததும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 400 டொலர் மோசட
கார் மீது சிறுநீர் கழித்தவரை தட்டிக்கேட்டவர் கொலை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  554 views
கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo, வயது 55) என்பவர் தனது காதலியுடன் உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். உணவகம் சென்றுவிட்டு தன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சாகூ வந்தபோது, அங்கு ஒருவர் தனது கார் மீது சிறுநீர் கழிப்பதைக் கவனித்துள்ளார் அவர்.என்ன செய்கிறாய் என சாகூ கேட்க, என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அந்த நபர் கூறியதுடன், சாகூவை தலையில் தாக்கியுள்ளார்.  சாகூ கீழே விழ, அவரது காதலி அவசர உதவியை அழைத்துள்ளார். அவசர உதவிக்குழுவினர் வரும்போது சாகூ சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். உடனடியாக சாகூ மர
 தம்பி ஆண்ட்ருவின்  இளவரசர் பட்டத்தைப் பறித்தார் மன்னர் சார்ல்ஸ்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  561 views
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் அவரது தம்பி ஆண்ட்ருவின் (Andrew) இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை அரண்மனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.அரண்மனை அது குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், 65 வயது ஆண்ட்ரு, காலஞ்சென்ற எலிசபெத் அரசியாரின் இரண்டாவது மகன். ஆண்ட்ரு இனி கிழக்கு இங்கிலாந்தில் தனிப்பட்ட வீட்டில் தங்குவார் என்று அறிக்கை குறிப்பிட்டது.மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெயினுடன் (Jeffrey Epstein) அவருக்கு இருந்த தொடர்புகளால் ஆண்ட்ரு மீது நடவடிக்கை எடுக்க நெருக்குதல் வந்தது. குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரு மறுக்கும் நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டதாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
பட்டப்பகலில் வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொலைப்பட்ட இந்திய தொழிலதிபர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  685 views
கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
 கனடாவில் போதைப் பொருள் குற்றங்கள் அதிகரிப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  717 views
கனடாவில் போதைப்பொருள் குற்றச்செயல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 12 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாறு போதைப் பொருள் குற்றச் செயல்கள் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும், இந்த அளவு 2011 ஆம் ஆண்டில் பதிவான போதைப் பொருள் குற்றச் செயல்களை விடவும் 61 சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2023 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் போதைப்பொருள் குற்றச்செயல் விகிதம் 13 சதவீதம் உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  871 views
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் ஆசிரியர்கள் உடன் பணிக்கு திரும்ப வேண்டுமென மாகாண அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.16 நாட்களாக நீடித்த மாகாணத்தின் வரலாற்றிலேயே நீண்ட கல்வி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, அல்பர்டா அரசு திங்கள்கிழமை பேக் டு ஸ்கூல் எக்ட் “Back to School Act (Bill 2)” எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில், 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சட்ட ரீதியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சட்டம், ஆசிரியர் சங்கமான அல்பர்ட்டா ஆசிரியர் ஒன்றியம் கடந்த செப்டம்பரில் பெரும்பான்மையாக நிராகரித்த ஒப்பந்த நிபந்தனைகளையே சட்டமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சட்டத்தில், பணியை மறுப்பவர்களுக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்
சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய இளம்பெண்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  866 views
கனடாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரை சக இந்தியர் ஒருவர் கொலை செய்த வழக்கில் அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை (21.10.2025) காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் உயிரற்ற உடல், Charles Daley Park என்னும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த இந்திய இளைஞரான மன்பிரீத் சிங் (27) என்பவர் சைனியை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். மன்பிரீத் சிங் மீது கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்பிரீத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், அவரை கண்டால்
Govpay திட்டம் டிசம்பரில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Sri Lanka
  •  ·  809 views
வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையை (Govpay) எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Sri Lanka
  •  ·  776 views
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.