Latest News
கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில், தன்னை ஒரு குடிவரவு சட்டத்தரணி என்று பொய்யாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கடந்த பெப்ரவரி 26-ஆம் திகதி கிச்சனர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.பாதிக்கப்பட்ட நபர், வேலைக்கான வீசா விண்ணப்பத்தைப் பெறுவதற்காக ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடியுள்ளார்.இதற்காக 2024 மே மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை பல கட்டங்களாகப் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை அறிந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.தேடப்படும் நபர் கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஹர்ஷரன் அலுவாலியா (Harsharan Ahlu
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 7,000-க்கும் அதிகமான கனடியர்கள் வெளியேறியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.மார்ச் 4 முதல் மார்ச் 8 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். இவர்கள் நேரடி மற்றும் மாற்று விமானப் பாதைகள் ஊடாக கனடாவை வந்தடைந்துள்ளனர்.வர்த்தக ரீதியிலான விமானங்களைப் பயன்படுத்தி வெளியேறுமாறு ஊக்குவிக்கும் அதேவேளை, தேவைப்பட்டால் விசேட விமானங்கள் (Charter flights) மற்றும் பேருந்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.சுமார் 871 பேர் துருக்கி போன்ற பாதுகாப்பான
னடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.இந்த துயர சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை ரொபிலார்ட் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பகுதி எங்கிலிஹர்ட் நகரத்திற்கு அருகிலும், கிரிக்லன்ட் நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கிராமப்புற வீட்டின் முன்புற பாதையில் (driveway) ஒரு பயணிகள் வாகனம் சிறிது தூரம் நகர்த்தப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்த வாகனத்தை இயக்கியவர் குழந்தை வாகனத்தில் இல்லை என்பதை அறியாமல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.இந்த சம்ப
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்குகோக் (Scugog) நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.ஒண்டாரியோ மாகாண காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் 8 ஆம் திகதி காலை சுமார் 5.55 மணியளவில், போர்ட் பேரி (Port Perry) பகுதியில் உள்ள Highway 7/12 மற்றும் 4th Line அருகே இரண்டு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணையாளர்கள் தெரிவித்த தகவலின்படி, எதிர்திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதே இந்த விபத்திற்கு காரணமாகியுள்ளது.இந்த விபத்தில் சண்டர்லேண்ட் (Sunderland) பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
வடக்கு லண்டனில் உள்ள இஸ்லிங்டன் (Islington) பகுதியில் உள்ள ஒரு துருக்கிய நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், கத்திகளைக் காட்டி மிரட்டி நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் துணிச்சலாக செயல்பட்டு, துடைப்பம் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொள்ளையர்களை எதிர்கொண்டனர்.இருப்பினும், கொள்ளையர்கள் தங்கம் மற்றும் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதேபோல் ஹார்ட்போர்ட்ஷையர் (Hertfordshire) பகுதியில் உள்ள ஒரு கடையில், கண்ணாடித் தடுப்புகளை உடைக்க செயின்சா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நகைக்கடைகள் மட்டுமின்றி, வீதிகளில் நடந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கொள்ளை சம்பவங்க
கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த தப்பியோடிய குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் ஒருவர் மொன்றியலில் கைது செய்யப்பட்டுள்ளார்.24 வயதான பிரயன் பியுன்டன் க்ராமாஜோ என்ற நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் மொன்றியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர் கடந்த 2025 ஜூலை 17 அன்று டொரண்டோவில் உள்ள யோர்க்டேல் ஷாப்பிங் மையத்தின் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக டொரண்டோ பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். பின்னர் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட கனடாவின் மிகவும் தேடப்பட்ட 25 குற்றச்சாட்டு நபர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் இடம்பெற்றிருந்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது.இந்த தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 2-ம் தேதி முதல் துபாய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை போதுமானதாக இல்லை.இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் துபாயில் சிக்கியுள்ளனர். அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப ஏதுவாக எமிரேட்ஸ் நிறுவனம் சார்பில் மார்ச் 5, 6-ம் தேதிகளில் 100 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.ஈரான் ராணுவ தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஏராளமானோர் காயம
ஈரானின் அண்டை நாடான அஜர்பைஜானின் நாக்சைவான் பகுதியில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாட்டில் அமெரிக்காவின் ராணுவ தளம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக அஜர்பைஜைன் செயல்படுவதால் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடி தருவோம் என்று அஜர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது.கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி மற்றும் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது.இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், போரில் எங்கள் கூட்டாளர் நாடுகளுடன் இணைந்து நிற்போம் என கனடா பிரதமர் கூறியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.மத்திய கிழக்கில் போர்ச்சூழல் மும்முரமாகிவரும் நிலையில், போரில் தனது நாட்டின் ராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம் என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர், அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோனி அல்பானீஸுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது கனடா பிரதமர் கார்னியிடம், ஈரான் போரில் கனடா ஈடுபடும் சூழ்நிலை உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற
ஈரான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் , இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈரான் உளவுத்துறை அமைச்சை சேர்ந்த அதிகாரிகள், ஒரு மூன்றாவது நாட்டின் வழியாக அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகததுக்கு (CIA) செய்தி அனுப்பியுள்ளனர். அதில், போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தயாராக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே முறையான அல்லது தீவிரமான உரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரியவருகிறது. இது குறித்து பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில்,"நாங்கள் இப்போதே எமது ந
சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் பின்னணி கொண்டவரான நான்சி க்ரெவால் (45), செவ்வாயன்று இரவு மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இரவு 9.30 மணியளவில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் நான்சியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.ஆனால், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், நான்சி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.சமூக ஊடகப் பிரபலமான நான்சி, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் இந்திய அரசியல், குறிப்பாக, தான் சார்ந்த பஞ்சாப் அரசியல் குறித்த
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நகரமாக பர்ரி அறிவிக்கப்பட்டுள்ளது.டொரொன்டோவை தலைமையிடமாகக் கொண்ட காப்பீட்டு நிறுவனம் மை சொயிஸ் வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், பர்ரி நகரம் மிகவும் ஆபத்தான நகரமாக முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.இதற்கு முன்பு அந்த இடத்தை ப்ரான்போர்ட் பெற்றிருந்தது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் போக்குவரத்து விதிமுறை மீறல்களை விட விபத்துகளின் அதிகரிப்பேயாகும் என தெரிவிக்கப்படுகின்றது.2020ஆம் ஆண்டிலிருந்து 200,000க்கும் மேற்பட்ட கார் காப்பீட்டு கோரிக்கைகளை (insurance quotes) ஆய்வு செய்து, 2026ஆம் ஆண்டுக்கான ஆபத்து நிலைகளை நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.விபத்துகள் மற்றும் கவனச்சிதறல் ஓட்டம், அதிவேகம் போன்ற விதிமுறை மீறல்களை