News
Latest News
திமுக - மக்கள் நீதி மய்யம்  கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி
  •  ·  sivam
  •  · 
  •  ·  India
  •  ·  488 views
திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளை மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நாளை 20.03.2026 (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.சென்னை அண்ணாநகர் சாம்கோ ஹோட்டலில் நடைபெறவு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  612 views
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் (GTA) வீடுகளின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சில குறிப்பிட்ட பகுதிகளில் 500,000 டாலர்களுக்கும் குறைவான விலையில் வீடுகள் விற்பனையாகியுள்ளதாக 'Wahi' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.பெப்ரவரி மாத விற்பனை தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிராம்ப்டன் (Queen Street Corridor): இங்கு வீடுகளின் சராசரி விற்பனை விலை 407,000 டொலராகும்.இதுவே டொராண்டோ பெரும்பாக பகுதியிலேயே மிக மலிவான இடமாக காணப்படுகின்றது.இங்கு அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள் (Condos) இருப்பதே விலை குறைவாக இருக்க முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.பிளெமிங்டன் பார்க் (Flemingdon Park): டொராண்டோ நகரின் எல்லைக்குள் மலிவான இடமா
இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  497 views
இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்​ரெசா சுலை​மானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்ற
 ஒட்டாவாவில் சினிமா பாணியில் தொடர் கொள்ளை சம்பவம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  428 views
கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறிய தொடர் வாகனத் திருட்டுகள் மற்றும் வீடுபுகுந்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெறும் சில மணிநேர இடைவெளியில் நகரம் முழுவதும் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.வெஸ்ட் ஹண்ட் கிளப் வீதி பகுதியில், வாகன சாரதி ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய சந்தேகநபர்கள் இருவர், அவரிடமிருந்து காரைப் பறித்துச் சென்றனர்.சிறிது நேரத்தில் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், உரிமையாளரின் கார் சாவியைத் திருடி, அங்கிருந்த மற்றொரு காரையும் கடத்திச் சென்றனர்.கடத்தப்பட்ட காருடன் நகரின் கிழக்குப் பகுதியில் அவர்கள் விபத்துக்குள்ளாகினர
ஈரான் தளபதி கொல்லப்பட்டதாக தகவல்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  426 views
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான 'பாசிஜ்' தன்னார்வப் படைத் தளபதி குலாம்ரேசா சுலைமானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தளபதி சுலைமானியின் மரணம் ஈரானின் 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு' கட்டமைப்பிற்கு விழுந்த பாரிய பலத்த அடி என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஈரானிய இராணுவத் தளபதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து இராணுவ ரீதியான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.இந்தச் செய்தி குறித்து ஈரான் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கருத்துக்களையும் அல்லது உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை என அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  556 views
கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.2026 பெப்ரவரி மாதம், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பிராந்தியம் முழுவதும் பயணித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதை அவதானித்த நயாகரா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.மார்ச் 10 அன்று மதியம் 3 மணியளவில், வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைத் அதிகாரிகள் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சுமார் $78,000 (கனடிய டாலர்) மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.160 கிராம் ஃபெண்டானில், 280 கிராம் மெத்தாம்பேட்டமைன், 137 கிராம் கொக்கைன், ஆக்ஸிகோட
நெதன்​யாகுவை கொல்லாமல் விடப்போவதில்லை - ஈரான் சூளுரை
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  496 views
ஈரான் குழந்தைகளைக் கொல்​லும் இந்த குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம் என ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை அறிக்​கை​யொன்றினை வெளியிட்டுள்ளது.மார்ச் 12ஆம் திகதி வெளி​யான வீடியோ ஒன்​றில், நெதன்​யாகு​வின் ஒரு கையில் ஆறு விரல்​கள் இருப்​பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்​டி​யுள்ள பல இணை​யதளப் பயனர்​கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்​யப்​பட்ட வீடியோ என சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளனர்.அந்த வீடியோ​வில் ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் வான்​வழித் தாக்குதல்​களைத் தொடங்​கிய பிறகு தனது முதல் செய்​தி​யாளர் சந்​திப்​பில் உரையாற்​றி​னார்.அதில் ஈரானின் புதிய உயர் தலை​வர் மோஜ்தாபா கொமெய்னியை கொல்​லப
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  484 views
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்த அல்லது காயமடைந்தார் என்ற பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஈரானிய அரச ஊடகம் வெளியிட்ட நிலையில் அவர் கையில் ஒரு கோப்பை கோப்பியுடன் தனது உதவியாளர் ஒருவருடன் உரையாடும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.மூன்றாவது வாரமாகவும் தொடரும் இஸ்ரேல் - ஈரான் போரால் உலக நாடுகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் போரில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காயமடைந்த்தாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் தனது உதவியாளரொருவருடன் உரையாடும் காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது.
பீதியை கிளப்பும் வட கொரியா
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  446 views
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன.இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்
ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கர்களுக்கு அவசர உத்தரவு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  439 views
ஈராக்கில் நிலவும் அதீத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, அங்குள்ள அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட வலயத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனடாவில் உணவுப் பொருள் விலைகளில் ஏற்படப் போகும் மாற்றம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  481 views
உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாய துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமா
 ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகியது இத்தாலி
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  377 views
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் (Giorgia Meloni) அறிவித்துள்ளார். அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.