Latest News
கனடாவில் உன்னிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய 'லைம் நோய்' (Lyme disease) பாதிப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.எனினும், தற்போதைய தரவுகளை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.உண்ணிகள் தொடர்பான விழிப்புணர்வு இணையதளமான eTick.ca வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உன்னிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் அதிகரித்துள்ளன.கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 'லைம் நோய்' பாதிப்புகள் பதிவாகியிருந்தன.கனடாவில் அதிகளவில் உன்னிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜ
கனடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி பரவி வருவதை அடுத்து, அங்குள்ள தொலைதூர கிராம மக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாகாண அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, 'டெஹ்சோ' (Dehcho) காட்டுத்தீயானது ஃபோர்ட் சிம்ப்சன் விமான நிலையத்திற்கு மேற்கே வெறும் 7 கிலோமீட்டர் தொலைவில் சுழன்றடித்து வருகின்றது.இக்காட்டுத்தீ தற்போது சுமார் 4.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு தீவிரமாகப் பரவியுள்ளது.ஃபோர்ட் சிம்ப்சன் கிராம அதிகாரிகள் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், அங்கு வசிக்கும் சுமார் 1,300 குடியிருப்பாளர்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, கிழக்கு நோக்கி 630 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யெலோநைஃப் நகரின் 'மல்டிபிளக்ஸ்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓவன் சவுண்ட் நகரில், அடுத்தடுத்த இரண்டு இரவுகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஞாயிற்றுக்கிழமை அன்று, ஓவன் சவுண்ட் நகரைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, போதையிலிருந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்களது காரைத் திருடிச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார்.புகாரின் பேரில் அந்த நபரையும் காரையும் காவல்துறையினர் நகருக்குள் அடையாளம் கண்டு, நிறுத்த முயன்றனர். ஆனால், அவர் போக்குவரத்து சமிக்ஞைகளை மதிக்காமல், மிக அதிவேகமாக காரைச் செலுத்தி தப்பியோடினார்.அவர் ஓட்டிய வேகம் அவருக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், காவல்த
கனடாவின் ஒட்டாவா நகருக்கு தெற்கே உள்ள ஆஸ்கூட் (Osgoode) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கார் விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணியளவில் டால்மெனி சாலை மற்றும் நிக்சன் டிரைவ் சந்திப்பில் ஒரு பிக்கப் டிரக் மற்றும் எஸ்யூவி ரக கார் ஆகிய இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது குறித்து அவசரகால மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.படுகாயமடைந்த ஒரு சிறுமி மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா துணை மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.மாலையில், எஸ்யூவி காரில் பயணம் செய்த அந்த 8 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது. மேலும்,
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் திருடர்கள் இருவர் மதுபான விடுதி ஒன்றிலிருந்த ஏடிஎம் ஒன்றைத் தூக்கிச் சென்றார்கள்.நேற்று மதியம் 3.30 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்னுமிடத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றிற்குச் சென்ற திருடர்கள் இருவர், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை திருட்டு ட்ரக் ஒன்றில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். பின்னர் ட்ரக்கும் ஏடிஎம் இயந்திரமும் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏடிஎம் இயந்திரத்துக்குள் பணம் எதுவும் இல்லை. அதாவது, அதிலிருந்த பணத்துடன் திருடர்கள் தப்பிவிட்டார்கள்.மோப்ப நாய் உதவியுடன் அவர்கள் இருவரையும் பொலிசார் தேடிக் கண்டுபிடிக்க, அவர்கள் இருவரும் தாம்ஸன் நதிக்குள் குதித்துள்ளார்கள்.தீயணைப்பு வீரர்களின் உதவி
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சவதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த புதன்கிழமை வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு முகங்கொடுத்திருந்தது.அந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரையில் 920 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதுடன், நிலநடுக்க இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 243 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கங்களினால் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்
கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.விபத்துக்குள்ளான விமானம் 'டர்போ கமாண்டர் 690' ரகத்தைச் சேர்ந்ததாகும். இது காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை வான்வழியாகக் கண்காணித்து, வழிநடத்தும் ஒரு கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.புதன்கிழமை இரவு, யெல்லோநைஃப் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்ட் சிம்ப்சன் என்ற இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.விமானம் குறித்த நேரத்தில் வந்து சேராததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் உயிர் பிழைத்தவர்கள் யார
வெனிசுலா நிலநடுக்கத்தில் 40 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் வியாழக்கிழமை (25) ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிட்டர் அளவிற்கு அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 30 முறை தொடர்ந்து அந்த நில அதிர்வு மக்களால் உணரப்பட்டது.100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வெனிசுலாவை நிலைகுலைய வைத்துள்ளது. வெனிசுலாவின் தலைநகரான மற்றும் காராகஸ், லா குவைரா அகிய பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தன. அதில் ஏராளமான மக்களும் சிக்கிக் கொண்டனர். காணும் இடமெல்லாம் கான்கிரீட் குவியலாக காணப்படு
கனடாவின் எண்ணெய் வளம் மிக்க அல்பர்ட்டா (Alberta) மாகாணம், கனடா கூட்டமைப்பில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அல்பர்ட்டா மாகாணத்தில் நீண்டகாலமாகவே நிலவி வரும் பொருளாதாரக் குறைகள் மற்றும் கனடா மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தி ஆகியவை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியின் கொள்கைகளால் தங்களின் எரிசக்தித் துறை பாதிக்கப்படுவதாக அல்பர்ட்டா மக்கள் கருதுவதே இந்தத் தீவிர பிரிவினைவாதப் போக்குக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சுமார் 35 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'ஹஷிஷ்' (Hashish) போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்த முயன்ற கனடாவாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர், சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (ஜூன் 23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தாதியர் பயிற்சி பெற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஆவார்.தனது கல்விச் செலவிற்காக 12,500 கனேடிய டொலர்களும், வெளிநாட்டுச் சுற்றுலா ஒன்றும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில், டொரண்டோ பல்கலைக்கழகத்தின் சாரதி ஒருவரே இந்த போதைப்பொருள் தொகையை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.சந்தேகநபரான மாணவி, கனடாவின் டொரண்டோ நகரிலிருந்து போதைப்பொருளுடன் துபாய் வழியாக, எமிரேட்
நகராட்சி அரசாங்கங்கள் விரைவாக வீடுகளைக் கட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கில், அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாண்டுகளுக்குள், தங்களின் முதன்மையான வீட்டுவசதி கண்காணிப்பு இணையப் பக்கத்தை (housing tracker) தொடர்ந்து புதுப்பிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஃபோர்டு (Ford) அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.ஆகஸ்ட் 2023 இல், ஒண்டாரியோவில் உள்ள நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கட்டப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கையிற்கான இலக்குகளை ஃபோர்டு அரசாங்கம் நிர்ணயிக்கத் தொடங்கியது. மேலும், அந்த இலக்குகளை எட்டும் நகராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தது."ஒண்டாரியோ முழுவதும் கூடுதலான வீடுகளை விரைவாகக் கட்டுவதற்கான எங்கள் பணியில் நாங்கள் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். ஒண்டாரியோ மக்களுக்குத் தேவையான
வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட ஒரு தாக்குதல் சம்பவத்தில், பெண்ணொருவரின் ஹிஜாப் (தலைக்கவசம்) அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த நபரைத் தேடி வருவதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், உட்ரிட்ஜ் கிரசண்ட் (Woodridge Crescent) 100 வது பகுதியில் நடந்த இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதிகாரிகளின் தகவல்களின்படி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எந்தவொரு காரணமும் இன்றி ஒரு பெண்ணை அணுகி, இனவெறி கலந்த அவதூறு வார்த்தைகளைக் கூறியதோடு, "அவரது ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றி", அவர் மீது ஒரு குடையையும் வீசியுள்ளார்.சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து நடந்து சென்று ஓடித் தப்பியதாகவும், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்பின் தெரியாதவர் என்றும் காவல்