Latest News
கனடாவின் முன்னாள் பிரதி பிரதமர் மற்றும் கனடாவின் முன்னாள் அமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்ட் “அடுத்த சில வாரங்களில்” நாடாளுமன்றத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிய்மிர் ஜெலென்ஸ்கி தனது பொருளாதார ஆலோசகராக நியமித்ததாக அறிவித்திருந்தார்.உக்ரைன் வம்சாவளியாளர் ஃப்ரீலேண்ட், முன்பு கனடாவிற்கு உக்ரைன் புனரமைப்பு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்தார்.2025 செப்டம்பர் மாதத்தில் அவர் உள்நாட்டுப் பொருளாதார வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து விலகி புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.“உக்ரைன் இன்று உலகளாவிய ஜனநாயகப் போரின் முன்னணி இடத்தில் உள்ளது. அதனால் நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்களுக்கு பணம் பெறாமல் பொருள
டொரோண்டோ நகரில் உள்ள யோர்க்டேல் GO பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்ததாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யோர்க்டேல் சாலை மற்றும் அலன் எக்ஸ்பிரஸ்வேயை நோக்கிச் செல்லும் ரேம்ப் அருகிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பேருந்திற்குள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வந்த தகவலையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆணை பொலிஸார் மீட்டுள்ளனர். மருத்துவ அவசர சேவையினர் (Paramedics) சம்பவ இடத்தில் ஒருவரை பரிசோதித்ததாகவும், ஆனால் மருத்துவமனைக்கு எவரையும் கொண்டு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.இந்த தாக்குதல்
ஈரான் அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடாவின் வன்கூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரான்–கனடியர்கள் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குழுக்கள் வன்கூவரில் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.1979 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் இஸ்லாமிய குடியரசு ஆட்சியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் நிலையை வெளிச்சம் போடுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.இப்போது நடைபெறும் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக, ஈரானை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடி குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரான் நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.முன்னதாக நடைபெற்ற ஈரா
பனிப்புயலையும் பொருட்படுத்தாமல், பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்ணுக்கு இந்திய சாரதி ஒருவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.கடந்த சனிக்கிழமை இரவு, கனடாவின் கால்கரியில் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில், டாக்ஸி சாரதியும் இந்திய வம்சாவளியினருமான ஹர்தீப் சிங் தூருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. பிரசவ வலியில் துடித்த பெண்ணொருவரை சிங்குடைய டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வரமுடியுமா என அந்தப் பெண்ணின் கணவர் கேட்க, கடும் பனிப்புயல் வீசிக்கொண்டிருந்த நிலைமையிலும் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதித்துள்ளார் சிங். ஆனால், மருத்துவமனையை அடையும் முன்பே, காரின் பின் சீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார் அந்தப் பெண். விரைவாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு
2026ஆம் ஆண்டில் கனடா தனது குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கி, புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளது.2024 இறுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2025 நவம்பரில் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள், வேலைவாய்ப்பு இழப்பு விகிதத்தை குறைப்பது, வீட்டு வசதி பிரச்சினையை சமாளிப்பது, சுகாதாரம் போன்ற பொது சேவைகளின் அழுத்தத்தை தணிப்பது என்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டவை.எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டாலும், திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழி அறிவுள்ளவர்கள் மற்றும் கனடாவில் முன் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இனி முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.“இந்த கட்டுப்பாடுகள் மூலம் கனடாவுக்கு வருபவர்கள் பொருளாத
கனடாவின் வன்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.வன்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாக கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும். விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்
“இன்று இரவு, கனடியர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஒன்று கூடி, புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வரவிருக்கும் ஆண்டை வரவேற்கும் நேரமிது.புத்தாண்டு முன்னிரவில், கடந்த ஆண்டில் நமக்கு மகிழ்ச்சியளித்த தருணங்களையும், அவற்றை சிறப்பாக்கிய நமது வாழ்வில் உள்ள மனிதர்களையும் நாம் நினைவுகூருகிறோம்.இந்த ஆண்டு எமது நாட்டிற்கு பல சவால்களை கொண்டு வந்திருந்தாலும், நாம் ஒரு விசேடமான, தாராள மனம் கொண்ட, அக்கறையுள்ள தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அதிஷ்டம் என்பதையும் அது நினைவூட்டியுள்ளது.நாம் ஒன்றுபட்டிருக்கும்போது, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும்போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும்போது தான் நாம் மிக வலிமையானவர்களாக இருக்க
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள 'கிரே நன்ஸ்' மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவின் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார்.அவர் தொடர்ந்தும் கடுமையான வலி இருப்பதாக கூறியபோதிலும் அவருக்கு இ.சி.ஜி (ECG) பரிசோதனை செய
கனடாவின் சர்ரே பகுதியில் வாகமொன்றிலிருந்து கருகிய நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டிரெய்லர் தீப்பிடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.102 அவென்யூ – 12200 பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த பயண டிரெய்லரில் தீப்பிடித்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சர்ரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.அப்போது தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பொழுதுபோக்கு வாகனத்தின் (recreational vehicle) உள்ளே இரண்டு நபர்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக காவல்துறையும் தீயணைப்புப் பி
Zolo என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம், சமீபத்தில், ‘2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த இடங்கள்’ பட்டியலை வெளியிட்டது.2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம், ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள குவெல்ஃப் (Guelph) ஆகும். இந்த பட்டியல், நகரிலுள்ள வீடுகள் விலை, சராசரி வருவாய், குற்றச்செயல் வீதம், ஆண்டுக்கு எத்தனை நாட்கள் சூரிய ஒளி இருக்கும், பாதசாரிகள் நடந்து செல்ல வசதி மற்றும் விலைவாசி ஆகிய காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. குவெல்ஃப் நகரம், ஒண்டாரியோவிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், நல்ல காபி ஷாப்கள், உள்ளூர் கடைகள், இருபுறமும் மரங்கள் நடப்பட்ட நடைபாதைகள் ஆகியவை குவெல்ஃப் நகரின் சிறப்பம்சங்கள
வங்கதேசத்தில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர், கடந்த 12-ம் தேதி சைக்கிள் ரிக்ஷாவில் செல்லும்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தலையில் சுட்டுவிட்டு தப்பினர். டாக்கா மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் பெரும் கலவரம், வன்முறை
கடந்த நவம்பர் மாதம் முதல் கனடாவில் 20, 50 மற்றும் 100 டொலர் மதிப்புள்ள போலி கனடிய நாணயத் தாள்கள் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக கனடிய சில்லறை விற்பனை பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஒரே ஒரு மாதத்தில் கண்டறியப்பட்ட போலி நாணயத் தாள்களின் எண்ணிக்கை, முந்தைய முழு ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போலி நோட்டுகள் தயாரிக்கும் நபர்கள் தங்களின் தொழில்நுட்பங்களை மிகவும் மேம்படுத்தியுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பயிற்சி பெற்ற கண்களுக்குக் கூட உண்மையான நோட்டுகளையும் போலி நோட்டுகளையும் வேறுபடுத்துவது கடினமாகி விட்டது.ஹோலோகிராம்கள் கூட மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இந்த போலி நாணயத் தாள் பரவல் கிறிஸ்துமஸ் பண்டி