Latest News
கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo, வயது 55) என்பவர் தனது காதலியுடன் உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். உணவகம் சென்றுவிட்டு தன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சாகூ வந்தபோது, அங்கு ஒருவர் தனது கார் மீது சிறுநீர் கழிப்பதைக் கவனித்துள்ளார் அவர்.என்ன செய்கிறாய் என சாகூ கேட்க, என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அந்த நபர் கூறியதுடன், சாகூவை தலையில் தாக்கியுள்ளார். சாகூ கீழே விழ, அவரது காதலி அவசர உதவியை அழைத்துள்ளார். அவசர உதவிக்குழுவினர் வரும்போது சாகூ சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். உடனடியாக சாகூ மர
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் அவரது தம்பி ஆண்ட்ருவின் (Andrew) இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை அரண்மனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.அரண்மனை அது குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், 65 வயது ஆண்ட்ரு, காலஞ்சென்ற எலிசபெத் அரசியாரின் இரண்டாவது மகன். ஆண்ட்ரு இனி கிழக்கு இங்கிலாந்தில் தனிப்பட்ட வீட்டில் தங்குவார் என்று அறிக்கை குறிப்பிட்டது.மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெயினுடன் (Jeffrey Epstein) அவருக்கு இருந்த தொடர்புகளால் ஆண்ட்ரு மீது நடவடிக்கை எடுக்க நெருக்குதல் வந்தது. குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரு மறுக்கும் நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டதாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
கனடாவில் போதைப்பொருள் குற்றச்செயல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 12 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாறு போதைப் பொருள் குற்றச் செயல்கள் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும், இந்த அளவு 2011 ஆம் ஆண்டில் பதிவான போதைப் பொருள் குற்றச் செயல்களை விடவும் 61 சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2023 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் போதைப்பொருள் குற்றச்செயல் விகிதம் 13 சதவீதம் உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் ஆசிரியர்கள் உடன் பணிக்கு திரும்ப வேண்டுமென மாகாண அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.16 நாட்களாக நீடித்த மாகாணத்தின் வரலாற்றிலேயே நீண்ட கல்வி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, அல்பர்டா அரசு திங்கள்கிழமை பேக் டு ஸ்கூல் எக்ட் “Back to School Act (Bill 2)” எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில், 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சட்ட ரீதியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சட்டம், ஆசிரியர் சங்கமான அல்பர்ட்டா ஆசிரியர் ஒன்றியம் கடந்த செப்டம்பரில் பெரும்பான்மையாக நிராகரித்த ஒப்பந்த நிபந்தனைகளையே சட்டமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சட்டத்தில், பணியை மறுப்பவர்களுக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்
கனடாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரை சக இந்தியர் ஒருவர் கொலை செய்த வழக்கில் அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை (21.10.2025) காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் உயிரற்ற உடல், Charles Daley Park என்னும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த இந்திய இளைஞரான மன்பிரீத் சிங் (27) என்பவர் சைனியை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். மன்பிரீத் சிங் மீது கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்பிரீத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், அவரை கண்டால்
வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையை (Govpay) எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்று வரும் ஆசிய -பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் எனவும், அதனை எப்படி நிறுத்தினேன்? என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார். இந்த வேளையில் பிரதமர் மோடியை புகழ்ந்தார். அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தை கவனம் பெற்றது.இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது: ‛‛இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இருதரப்புக்கும் நல்ல உறவு உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் நல்ல மனிதர். அவர்களிடம் ஃபீல்ட் மார்ஷல் (ராணுவ தளபதி அசீம் முனீர்) உள்ளர். அவர் ஏன் ஃபீல்ட் மார்ஷல் என அழைக்கப்படுகிறா
டொரண்டோ பெரும்பாக பகுதி மற்றும் நயாகரா பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு உறைபனிபொழிவு எச்சரிக்கையை கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இந்த எச்சரிக்கை டொரண்டோ நகரம், மிசிசாகா–ப்ராம்ப்டன், நயாகரா ஃபால்ஸ்–வேலண்ட்–தெற்கு நயாகரா பிராந்தியம், மற்றும் செயின்ட் கத்தரீன்ஸ்–கிரிம்ஸ்பி–வடக்கு நயாகரா பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பனிப்பொழிவு காரணமாக சில பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தங்கள் மரங்கள் மற்றும் செடிகளை மூடிப்பாதுகாக்குமாறும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர்.இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் ஜனாதிபதி நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம், ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தீபாவளி என்ற வாா்த்தையுடன் பாரம்பரிய ரங்கோலி படமும் இடம்பெற்றுள்ளது.இது தொடா்பாக கனடா அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கனடா உள்பட உலகம் முழுவதும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், சமண மதத்தினரால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா தீபாவளியாகும்.கனடாவின் பன்முக கலாசாரக் கட்டமைப்பை அங்கீகரிக்கும் வகையில், தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அஞ்சல் தலை வெளியீட்டுக்காக கனடா அஞ்சல் துறைக்கு