Latest News

கனடாவில் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் நோவா ஸ்கோஷியாவில் மருத்துவர் ஒருவர்பாலியல் குற்றச்ச செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கடந்த மே மாதம், நோவா ஸ்கோஷியாவின் அப்பர் நப்பன் பகுதியில் உள்ள கம்பர்லேண்ட் பிராந்தியத்தில் ஹெல்த் கேர் சென்டரில் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மருத்துவர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதுடன், நோவா ஸ்கோஷியாவின் அம்ஹெர்ஸ்ட் நீதிமன்றத்தில் நவம்பர் 15 ம் திகதி மீண்டும் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த மருத்துவரின் மூலம் மேலும் பாதிக்கப்பட்டவர்கள

கனடாவின் பசுமைக் கட்சியின் (Green Party of Canada) நீண்டகாலத் தலைவரான எலிசபெத் மே எதிர்வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதன் காரணமாக கட்சி மீண்டும் புதிய தலைவரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சித் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக எலிசபெத் மே தெரிவித்தார். 2025 இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுக்கு பெரிய திட்டங்கள் வகுத்துள்ளோம் என மே தனது மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சிறிய நகரமான பெல்லா பெல்லாவிற்கு எலொன் மஸ்க் திடீர் விஜயம் செய்துள்ளார்.உலகின் முதனிலை செலவ்ந்தரான மஸ்க் இவ்வாறு திடீரென விஜயம் செய்துள்ளார். தனது பிரத்தியேக விமானத்தின் ஊடாக அவர் குறித்த கரையோர தீவு நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.டெஸ்லா மற்றும் எக்ஸ் தளம் என்பனவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக மஸ்க் திகழ்கின்றார். பெல்லா பெல்லா நகரில் மஸ்க் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். மஸ்க் தொடர்பில கனடாவில் மாறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏர் கனடா விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது கனடா தொழில்துறை உறவுகள் வாரியம்.ஏர் கனடா நிறுவனத்தின் விமானப் பணியாளர்கள் 10,000க்கும் அதிகமானோர் தங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஊதியம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்துக்கும் பணியாளர் யூனியனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த வேலைநிறுத்தத்தால், நாளொன்றிற்கு 130,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கனேடியர்களும் அடங்குவர். இந்நிலையில், ஏர் கனடா விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ள கனடா தொழி

ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட், கனடிய பிரதமர் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.ஒட்டாவாவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இன்று (ஆகஸ்ட் 18, 2025) ஒட்டாவாவில் சந்திப்பு நடத்துகின்றனர்.கூட்டாட்சி அரசு அதிகாரி ஒருவர், இந்த இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.கார்னி மற்றும் ஃபோர்ட், வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதி மற்றும் குற்றம் பற்றி விவாதிக்கவிருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஓர் சாதாரணமாக சந்திப்பு என முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கனடாவின் பிரதான விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவை நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று மாலை முதல் விமானங்களை மீண்டும் இயக்கத் தொடங்குவதாக அறிவித்தது.மொன்றியலை தளமாகக் கொண்ட எயார் கனடா, மத்திய அரசு நடுவர் மன்றத்தை உத்தரவிட்டு, விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப பல நாட்கள் ஆகலாம் என நிறுவனம் தெரிவித்தது.கனடா தொழிலக உறவுகள் வாரியம் பிற்பகல் 2 மணிக்குள் (ET) செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும், விமானப் பணியாளர்கள் தங்கள் கடமைகளை தொடரவும் உத்தரவிட்டதாக எயார் கனடா தெரிவித்துள்ளது.சனிக்கிழமை, கூட்டாட்சி அரசு, ஏர் கனடா மற்றும் அதன் பணியாளர்களை மீண்டும் பணிக்கு

கனடாவில் வீட்டு விற்பனையில் சாதகமான நிலைமை பதிவாகியுள்ளதாக கனடிய வீட்டுமனை ஓன்றியம் (CREA) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த2025 ஜூலையில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 6.6% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மாதங்களில் மந்தமாக இருந்த வீட்டுச் சந்தை மீண்டும் உயர்ந்து வருகின்றது. கடந்த ஜூலையில் மொத்தம் 45,973 வீடுகள் விற்கப்பட்டன. இது 2024 ஜூலையில் 43,122 காணப்பட்டது.கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையானது 3.8% உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வீடு விற்பனை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. குறிப்பாக டொரண்டோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனையானது 33.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நாகாலாந்து கவர்னரும் பா.ஜ., முன்னாள் தலைவருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80.தமிழக பாஜவின் முகமாக இருந்தவர் இல.கணேசன். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது கண்ணியமான பேச்சினை, பாஜ கட்சியினர் மட்டுமின்றி, பிற கட்சியினரும் ரசித்துக் கேட்பர். அந்தளவுக்கு நாகரிகமாக, நகைச்சுவையுடன் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் இல கணேசன். நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.கடந்த மாதம் சென்னை வந்த அவர், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார்.கடந்த 8 ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னை ஆயிர

கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் 14ம் இலக்க வீதி மற்றும் மெக்வோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரின் நிலைமை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எயார் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை இரத்து செய்து வருகிறது. விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கனடாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா தனது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.இந்த 72 மணி நேர வேலை நிறுத்த மானது சனிக்கிழமை காலை 1 மணி முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஊதியங்கள் மற்றும் பிற கோரிக் கைகளை முன்வைத்து 10,000 விமான பணியாளர்களை பிரதிநிதித்துவம் கனேடிய யூனியன் ஆஃப் பப்ளிக் எம்ப்ளாயீஸ்க்கும், எயார் கனடா நிறுவ னத்திற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாததை தொடர்ந்து இந்த வேலை நிறுத்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.இந்த திட்டமிடப்படாத வேலை நிறுத்தம் காரணமாக தி

டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அவர் தொடர்ச்சியாக 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியேற்ற உள்ளார்.

டொராண்டோ நகர மையத்தில் உள்ள பூங்காக்களில் இடம்பெற்ற மூன்று பாலியல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் தொடர்பில் முதலில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் மூன்றாவது சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் கடந்த ஜூலை 11 ஆம் திகதி பிற்பகல், குயின்ஸ் குவே வெஸ்ட் மற்றும் ரீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள எச்.ரீ.ஓ பூங்காவில் இடம்பெற்றுள்ளது.சந்தேக நபர் தன்னை ஓர் கைரேகை ஜோதிடராக அறிமுகம் செய்து பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐம்பது வயதான பய்சல் முஹமட் என