தமிழ்பூங்காவில் சேர்ந்து உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். ஒவ்வொரு பதிவிற்கும் புள்ளிகள் கிடைக்கும். உங்கள் புள்ளிகளைப் பயன்படுத்தி பரிசுகளைப் பெறுங்கள்.
Added a news
புதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையை, இலங்கை மின்சார சபை இம்மாதம் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையாக இது அமையவுள்ளது. இதன்படி புதிய மின்சார கட்டண சீராக்கம் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அமுலாகும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார கட்டணமானது அதன் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a news
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணய சுழற்சி இடம்பெற்றது. குறித்த நாணய சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத்தில் றஹ்மானியா வட்டாரத்தில் எம்.எம்.மஹ்தி மற்றும் மாஞ்சோலை வட்டாரத்தில் ரசாட் முஹம்மட் ஆகியோர்களுமே வெற்றி பெற்றுள்ளனர்.000
Added a news
2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்த அறிக்கைகள் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த செயல்முறை இருப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.இருப்பினும், அறிக்கையிடல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிராக அபராதங்களைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் (IRES) நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டினார்.தேர்தல் செயல்முறையின் நேர்மையை நிலைநிறுத்த, இணங்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தெளிவான சட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள் தேவை என்பதை கஜநாயக்க வலியுறுத்தினார்000
Added a news
தேர்தல் ஆணையகம் இலங்கை உள்ளுரதிகார சபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், தாமதமின்றி சட்டப்பூர்வமாக பெண்களுக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களுக்கான 25 சத விகித சட்டபூர்வ ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யும் செயல்முறையை தொடங்க வேண்டும் என நாட்டிலுள்ள 34 தன்னார்வ அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.இது தொடர்பாக தேர்தல் ஆணையத் தலைவருக்கும் ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் தன்னார்வ அமைப்புக்கள் கையெழுத்திட்டு கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர்.குறித்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இம்முறை இடம்பெற்ற உள்ளூர் அதிகார சபை தேர்தலில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை இருந்தபோதிலும், பிரசாரம் செய்தல், வாக்களித்தல், போட்டியிடுதல் இருப்புப் அனைத்து அம்சங்களிலும் - பெண்கள் வெளிப்படையாகவே தீவிரமாக இருந்தனர்.முந்தைய உள்ளாட்சி மன்றங்களைச் சேர்ந்த பல அனுபவம் வாய்ந்த பெண்கள், கட்சி ஒப்புதல் மூலமாக மறுக்கப்பட்டபோது இம்முறை அவர்கள் சுயாதீனமாக போட்டியிட்டனர்.இந்தத் தேர்தல் பெண்கள் வாக்குகளைப் பெறுவதிலும், உள்ளூர் அரசியலில் மீண்டும் நுழைவதிலும் நம்பிக்கைக்குரிய அதிகரிப்பைக் குறிக்கிறது.இருப்பினும், பல கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், “ஒவ்வொரு மூன்று இடங்களுக்கும் ஒரு பெண்” எனும் தேவையை நிறைவேற்றுவதை மிகவும் சிக்கலாக்கியுள்ளது.கடந்த கால போக்குகள், வரம்பு பூர்த்தி செய்யப்பட்டாலும் கூட, பெண்களை பரிந்துரைக்கும் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.மேலும் முந்தைய தேர்தல்களில், சில உள்ளூர் அதிகாரிகள் 25 சதவீத ஒதுக்கீட்டை முழுவதுமாக வழங்கத் தவறிவிட்டனர்.உள்ளூர் அதிகாரசபை தேர்தல்கள் சட்டத்தின் 2017 திருத்தத்தின்படி, தேர்தல் ஆணையம், 25 சதவீத பெண்களுக்கான ஒதுக்கீடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது.இதில், முதல் – பின் - பதிவு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத பெண்களுக்கு ஈடுசெய்ய விகிதாசார பிரதிநிதித்துவப் பட்டியலைப் பயன்படுத்துவதும் அடங்கும்.ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் இளம் பெண்கள் உட்பட குறைந்தது 25 சதவீதம் பெண்கள் இருப்பதை உறுதிசெய்வது எனும் இணக்கப்பாட்டை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் வேண்டும்.ஒரு கட்சி இரண்டு இடங்களைப் பெறும் போது, குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் வலியுறுத்த முடியும், வலியுறுத்த வேண்டும்.ஒதுக்கீட்டை நிறைவேற்றத் தவறும் அரசியல் கட்சிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும்.பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது, உள்ளூர் நிர்வாகத்தில் பாலின பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ நெறிமுறைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.” என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 21.80 சதவீதமாக அமுல்படுத்தப்பட்டது என்றும் அது பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கீட்டை வழங்கும் 25 சதவீதம் எந்த நடைமுறையை முழுமையாக அமுலாக்கவில்லை என்பதையும் கவனத்திற் கொண்டு இம்முறையும் அவ்வாறே புறக்கணிக்கப்படுமாயின், இது விடயமாக அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்றம் செல்ல தயார் செய்வதாக பெண்கள் செயல்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷிரீன் ஷரூர் தெரிவித்துள்ளார்.00
Added a news
கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். அவர் போப் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப் லியோ XIV ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் கூடிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 69 வயதான ரொபர்ட் பிரீவோஸ்ட், செயிண்ட் பீட்டர் சிம்மாசனத்தின் 267 ஆவது தலைவராக இருப்பார். போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கர் இவர்தான்.எனினும், அவர் பெருவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகள் கழித்ததன் காரணமாக, அங்கு பிஷப்பாக மாறுவதற்கு முன்பு லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு கார்டினலாகக் கருதப்படுகிறார்.ஸ்பானிஷ் மற்றும் பிராங்கோ-இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு 1955 இல் சிகாகோவில் பிறந்த பிரீவோஸ்ட், பலிபீடப் பையனாகப் பணியாற்றினார். 1982 இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பெருவுக்குச் சென்றாலும், அவர் தனது சொந்த நகரத்தில் ஒரு போதகராகவும், ஒரு முன்னோடியாகவும் பணியாற்ற அமெரிக்காவிற்குத் தொடர்ந்து திரும்பி வந்தார்.அவர் பெருவியன் குடியுரிமை பெற்றவர், மேலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுடன் பணியாற்றிய மற்றும் தொடர்புகளை பேண உதவிய ஒரு நபராக அன்புடன் நினைவுகூரப்படுகிறார்.அவர் உள்ளூர் திருச்சபை போதகராகவும், வடமேற்கு பெருவில் உள்ள ட்ருஜிலோவில் உள்ள ஒரு செமினரியில் ஆசிரியராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைமைப் பொறுப்பாளராக அவர் வகித்த உயர் பதவி காரணமாக அவர் கார்டினல்களுக்கு நன்கு அறியப்பட்டவர்.இந்த அமைப்பு ஆயர்களைத் தேர்ந்தெடுத்து மேற்பார்வையிடும் முக்கியமான பணியைக் கொண்டுள்ளது.2023 ஜனவரியில் அதே நேரத்தில் அவர் பேராயரானார். மேலும் சில மாதங்களுக்குள் பிரான்சிஸ் அவரை ஒரு கார்டினலாக ஆக்கினார்.தன்னை கத்தோலிக்க திருச் சபையின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக சக கார்டினல்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் மொழிகளில் பேசினார்.மறைந்த போப் பிரான்சிஸைப் பற்றியும் அவர் அன்புடன் பேசினார், மேலும் கூட்டத்தை ஜெபத்தில் வழிநடத்தி முடித்தார்.சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறிய பின்னர் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் தோன்றினார். இது உள்ளே இருந்த 133 கார்டினல்கள் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது.000
Added a news
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். உலங்குவானூர்தியின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த உலங்குவானூர்தியில் விமான கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்000
Added article
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Added article
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார். அவர் நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ வகைப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. தற்போது சந்தானம் டி டி நெக்ஸ்ட் லெவல் படத்தினல் நடித்துள்ளார். இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், கஸ்தூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளனர்.இந்த படத்தை அவரின் நெருங்கிய நண்பர் ஆர்யா தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலர் இணையத்தில் கவனம் பெற்றது. இந்த படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Added article
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்போது படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ரஜினிகாந்துக்கு கிடைக்கும் சம்பளம் அதிர்ச்சியளிக்கிறது. அதன்படி, படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி. பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் ரஜினியின் சம்பளம். ரூ.260-280 கோடி வரை ரஜினி சம்பளமாகப் பெறுவதாகத் தகவல். லோகேஷ் கனகராஜுக்கும் அதிக சம்பளம். படத்தை இயக்குவதற்கு லோகேஷுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் 'கூலி'. தமிழ் சினிமாவின் எல்லாக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக 'ஜெயிலர்' இருந்தது. உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்தது. 'கூலி'யைப் பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தவிர மற்ற வருவாய் வழிகளும் சன் பிக்சர்ஸுக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 'ஜெயிலர்' படத்தை விட அதிக OTT ஒப்பந்தத்தை 'கூலி' பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
Added a news
கனடாவின், யுகான் மாகாண முதல்வர் ரஞ்ச் பிள்ளை நேற்று அவரது பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்வும் அறிவித்துள்ளார்.இந்த முடிவை எடுக்குமுன் அவர் தனது மகனுடன் யுகான் ஆற்றின் கரையில் முக்கிய உரையாடல் நடத்தியதாக கூறியுள்ளார்.“எங்களைப் போன்றவர்கள் இந்த பணியை செய்யக்கூடியவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று என் மகன் என்னிடம் கூறினார்,” என பிள்ளை கூறியுள்ளார்.ரஞ்ச் பிள்ளையின் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி என்பது தனது வாழ்நாளிலேயே மிகப் பெரிய பெருமை என பிள்ளை குறிப்பிட்டார்.
Added a news
டொரண்டோவின் எடோபிகோ பகுதியில் காரும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரு பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து புதன்கிழமை பிற்பகல் 4:45 மணியளவில், கிப்லிங் அவென்யூ மற்றும் எக்லிங்டன் அவென்யூ மேற்கு சந்திப்பில் இடம்பெற்றதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பலத்த காயங்களுடன், தீவிர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.விபத்தில் ஈடுபட்ட மற்ற வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தார் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த விபத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Added a news
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விமானநிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்தடுத்த டிரோன் தாக்குதலால் மக்கள் அச்சமடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற தகவல் வெளியாகவில்லை. சம்பவத்தை அடுத்து லாகூர் விமான நிலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் சேத விபரங்கள் வெளியாகவில்லை.
Added a post
சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான்.. வந்தவன் சென்னையிலேயே தங்கியதால் நாகரீகம் ரெம்ப முற்றி அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான்.ஒருநாள் திடீரென்று அவனுடையஅம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார்.வந்தவர் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்துசாப்பிட்டுக் கொண்டிருப்பதைகண்டார்.அம்மா கேட்டார்.."யார் இது"?சேகர் சொன்னான்..."என் ரூம் மேட்மா"அம்மா.."அப்படின்னா"??"ரூம் மேட்னா கூட வசிக்கிற பொண்ணு.. நீ சந்தேகப்படுற மாதிரி வேற ஒன்னும் இல்லைமா.. வீட்டை மட்டும்தான் ஷேர் பண்றோம்.. அவ தனி பெட்ரூம் நான் தனிபெட்ரூம்."அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய்விட்டார்..இரண்டு நாட்கள் கழித்து அவன் ரூம்மேட் சொன்னாள்; "உங்கம்மா வந்து போனதிலிருந்து தோசை கரண்டியை காணல, ஒரு வேளை உங்கம்மா எடுத்துபோயிருப்பாங்களோ?"சேகர் சொன்னான்.. "தெரியல எங்ககிராமத்து வீட்ல போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டுகேக்குறேன்"அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.."அன்புள்ள அம்மா, நான் நீங்க இங்கே இருந்த தோசைக் கரண்டியை எடுத்தீங்கனும் சொல்லல்ல.. எடுக்கலைனும் சொல்லல்ல.. ஆனா ஒன்னுமட்டும் உண்மை.. என் வீட்டிலிருந்து நீங்க போனதற்கப்புறம் தோசைகரண்டியை காணவில்லை.."சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது..அதை சேகர் பிரித்து படித்தான்.."அன்புள்ள மகனுக்கு.. நான் உன் கூட வசிக்கிற பொண்ணோடு தப்பா இருக்கிறேன்னும் சொல்லல்ல.. இல்லைன்னும் சொல்லல்ல.. ஆனா ஒன்று மட்டும் உண்மை.. அவ அவ பெட்ரூமில் தூங்கியிருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டுபிடிச்சிருப்பா.."செத்தாண்டா சேகரு....!
மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்களுக்கு மனநிறைவு, தெளிவு, அமைதி தரக்கூடியதை நீங்களே கண்டு உணருங்கள்! - புத்தர்
Added a post
அரபு நாடு ஒன்றிற்குச் சென்றிருந்த மாதவன், இரண்டு வருடத்தின் பின்பு விடுமுறையில் வந்தபோது, மாதவியும் அவனின் குழந்தை தனுவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அவன் நின்ற அந்த ஒரு மாதமும் அவர்கள் இருவருக்கும் அது பொற்காலமாகவே இருந்தது.அவனும் அவர்களுக்கான வீட்டைக் கட்டிக் கொடுத்திருந்தான். ஒரு சில தங்க நகைகள் கூட செய்து கொடுத்திருந்தான்.மாதவியைப் பார்த்து அயலவர்கள் பொறாமைப்படும் போதெல்லாம் உள்ளூர மகிழ்ச்சியடைந்தாள் அவள்.புதிய வீடும் புதிய நகையும் வாங்கித் தந்த கணவனை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டவள், அவன் நிற்கும் வரையில் அவனை எல்லாவகையிலும் நன்கு கவனித்துக் கொண்டாள்.இனி அடுத்த மூன்று வருடங்கள் திரும்பி வரமுடியாது என அவன் சொல்லியதால், அவனுக்குத் தேவையான பலகாரங்களையும் செய்து கட்டிக் கொடுத்தாள் மாதவி .பிரியும் நாள் வந்தபோது, தானும் பிள்ளையும் விமான நிலையம் வரை வந்து வழி அனுப்புவதாக மாதவி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், மாதவன் மறுத்து விட்டான்.தான் போன பின்னர் இருவரும் தனியே திரும்பி வருவது ஆபத்தானது என்று சொல்லித் தானே போய் வருவதாகச் சொல்லிக் கொண்டான்.அவனும் தங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறான் என மாதவியும், அவனைக் கண்ணீர் மல்க, இறுதியாகக் கட்டிப் பிடித்து வழி அனுப்பி வைத்தாள்.அவ்வளவு நாளும் தான் கேட்பதை எல்லாம் வாங்கித் தந்த தந்தையைப் பிரிய மனமின்றி அழுது ஆர்ப்பாட்டமே செய்து விட்டிருந்தாள் தனுக்குட்டி.அவனும் மகளுக்கு இறுதியாக நிறைய முத்தங்கள் கொடுத்து, அங்கு போய் மிட்டாய் அனுப்பி வைப்பதாக அவளுக்கு ஆசை காட்டி, அவளைச் சமாதானப் படுத்தினான்.ஒருவழியாக எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு மாதவன் புறப்பட்டபோது , உருகி உருகி அழுது விடை கொடுத்தாள் மாதவி.ஒருநாள் கழிந்தபோது இன்னமும் மாதவன் போய்ச் சேர்ந்த தகவல் வரவில்லை என்பதை உணர்ந்த மாதவியின் மனம், பயத்தில் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.உடனடியாக அவனின் அலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் சொல்லியது.இடையில் ஏதாவது பயணத்திட்டம் மாற்றப்பட்டு விமான நிலையத்தில் இருக்கிறாரோ ? என்ற சந்தேகம் ஏற்படவே, அடுத்த நாளும் பொறுத்துப் பார்த்தாள்.ஆனால் இரண்டு நாட் கடந்தும் அவனைக் காணவில்லை என்ற நிலையில்தான், காய்கறிச் சந்தையில் மாதவனுடன் வேலை செய்யும் குமாரின் மனைவியைச் சந்தித்தாள் மாதவி.அப்போது தனது நிலமை பற்றி விளக்கியபோது, அவளும் உடனடியாகத் தனது கணவனான குமாருக்கு அழைப்பை எடுத்த போதுதான், குமார் அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னான்.மாதவன் முகநூலில் ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும், அவளைப் பிடித்து இருப்பதாகவும் மாதவியை விவாகரத்துச் செய்து விட்டு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகவும், இனித் திரும்பி வரமாட்டேன் என்று சொல்லி விட்டே இங்கிருந்து சென்றதாகவும் அவன் கூறினான்.குமார் சொல்லச் சொல்ல மாதவிக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வருவதாக உணர்ந்தாள். அப்படியே மயங்கிச் சரியத் தொடங்கினாள்.அவள் மயங்கிக் கீழே விழப் போவதை உணர்ந்த மங்கை, மாதவியைத் தாங்கிப் பிடித்துக் கீழே இருத்தினாள்.அங்கிருந்த யாரோ ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து, மாதவியின் முகத்தில் தெளித்தபோது, கண் விழித்த மாதவி, அழத் தொடங்கினாள்.அவளின் அழுகையைப் பார்த்த மக்கள் கூட்டம், புதினம் அறிந்து கொள்வதற்காகக் கூடியது. பின்னர் மங்கை மூலம் தகவல் அறிந்து, மாதவனைத் திடடியவாறும், மாதவியைக் கவலையுடன் பார்த்தவாறும், செல்லத் தொடங்கினார்கள்.பின்னர் ஒரு முச்சக்கர வண்டியில் மாதவியை அவளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் மங்கை.வீட்டிற்கு வந்த மாதவி, தனது தாயிடம் விபரத்தைச் சொல்லி அவரின் மடியில் விழுந்து அழுது தீர்த்தாள்.அதேவேளை இந்தத் தகவலறிந்த அயலவர்கள் சிலர், மனதுக்குள் மகிழ்ந்து கொண்டார்கள்."இந்த ஒரு மாதமும் புருசனும் பொஞ்சாதியும் என்ன ஆட்டம் ஆடினதுகள். இவளுக்கு இது வேணும்தான். இனிச் சாப்பிட வழியில்லாமத் திரியட்டும். அப்பதான் அடங்குவாள்....!"நீண்ட காலத்தின் பின் வந்த கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்தது ஒரு குற்றம் போல் அயலவர்கள் முணுமுணுத்துக் கொண்டு போனபோது, மாதவியின் மனம் சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் அவளின் வேதனையைப் புரிந்து கொள்ளாமல், அவளுக்கு ஆறுதல் கூறுவது போல் அவர்கள் வந்து சென்றார்கள்.வந்தவர்கள் காணாமற் போனபோது, வெறுமையை உணர்ந்தாள் மாதவி. அப்பா இன்னொருத்தியுடன் ஓடிப் போனது கூடத் தெரியாமல் "ஏனம்மா அழுகிறீங்க...?" என்று தனுக்குட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.நாட்கள் நகர்ந்தபோது, வெளியே செல்வதற்குக் கூடப் பயந்தாள் மாதவி. அதனையும் மீறி மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு வந்த பெற்றோர்களின் கேள்விகளும், அதற்குப் பதில் சொல்லியும்,பாதி செத்துப் போனாள் மாதவி.ஏதோ நடைப் பிணம் போல் ஒரு மாதம் ஓடியபோது, அவன் வாங்கித் தந்த தங்க நகையை அடகு வைத்து அடுத்த மாதத்தை நகர்த்தினாள் மாதவி.இனி இப்படியே அடகு வைத்துக் கொண்டிருந்தால் கடைசியில் பிச்சை எடுக்க வேண்டி வர வேண்டும் என எண்ணியவாறே, வேலை தேடத் தொடங்கினாள் அவள்.கிடைக்கும் கூலி வேலைகளுக்குப் போகத் தொடங்கியவள், ஆரம்பத்தில் காயங்களும் கொப்பளங்களுமாக நிறையவே துன்பப் பட்டாள்.இனி வலிகளையும் வேதனைகளையும் மகளுக்காகத் தாங்கித்தான் வாழ வேண்டும் என்பதை உணர்ந்தவளாக வறுமையிலும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மாதவி......!கதை முற்றும்....!இது ஒரு உண்மைச் சம்பவம்!
Added a post
1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.2,திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம்,லஞ்ச் பாக்ஸ்,குடை போன்றவைக்கும்.3,ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் சொல்லுங்கள் என வேண்டலாம்.4,தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்."இன்னும் கல்யாணம் ஆகலயா?""குழந்தைகள் இல்லையா?""இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?""ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?"இது நமது பிரச்சினை இல்லைதானே!"5,தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ,பெண்ணோ,சிறியவரோ,பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாகமாறச்செய்யும்!6,நண்பருடன் டாக்ஸியில் சென்றால் பெண் தோழியாக இருந்தாலும்..இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.7,மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்.மோசமாக இருந்தாலும், சாய்ஸில் வைத்திருக்கலாம்.8,அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்.அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.9,நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால்,மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்.அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்,10,யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்!11,பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.12,உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள். "நீங்கள் பார்க்க ஸ்மார்ட்டாக, கியூட்டாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.13,யாராவது அவர்கள் போட்டோவைக் காட்ட போனைக் கொடுத்தால் காலரியில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்.அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.14,யாரும் தனக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது. போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்.அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம்,"விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.15,நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது போனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.16,கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.17,நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால்,அவர்களின் சம்பளம்,வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்.அவர்களாகவே சொன்னால் தவிர.18,தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால்,ஸ்டைலுக்காக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்,கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது!19,யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.20,இறுதியாக ஒன்று.இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிருங்கள்....தெரிந்து கொள்வோம் பகிர்வோம் நல்லதை பகிர்வோம் முயன்றவரை புரிந்து கொள்வோம்.
Added a post
1. உற்றார் உறவினர்களை கண்டவுடன் சில நேரங்களில் தங்களை அறியாமல் சிரித்து விடுவது அது துக்கத்தில் இருப்பவர்கள் பார்த்தால் மனவேதனை படுவார்கள்.2. மரணமடைந்தவரின் வாழ்க்கையை எதார்த்தமாக விமர்சித்து கொண்டிருப்பது.3. உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரணிக்க வேண்டும் ஆனால் தாங்கள் மட்டும் பல நாட்கள் இந்த உலகத்தில் வாழ்வது போலவும் மற்றவர்கள் வேகமாக மரணிப்பது போலவும் ஜம்பம் அடிப்பது.4. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான மரணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் சிலருக்கு அதில் உடன்பாடு இருக்காது. இருந்தாலும் அந்த சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டும். அதைவிடுத்து அப்படி செய்யவில்லை இப்படி செய்யவில்லை என்று வீராப்பு செய்து கொண்டிருப்பார்கள்.5. தந்தை அல்லது தாய் ஓரளவு பொருளாதார உயர்வு நிலையை அடைந்து இறை நிலையை அடைந்திருந்தால் அந்த பொருளாதாரத்தை எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பெற்ற பிள்ளைகளும் உடன்பிறந்த சகோதரர்களும் , சகோதரிகளும் மற்றவர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முக்திக்கான கடைசி கால பயணத்தை முறையாக செய்ய மாட்டார்கள்.6. இப்போது உள்ள காலத்தில் பல முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. இருந்தாலும் ஓர் உயிரற்ற உடல் உயிர் இருக்கும் போது பல ஆசைகள் மனதில் வைத்திருக்கும். அது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்காது மரணத்திற்கு பின் தன் உடலை தன் சுற்றத்தார் தூக்கி செல்ல வேண்டும்; அவர்களே தன் இறுதிக் கடன்களை முறையாக செய்ய வேண்டும் என எண்ணி இருப்பார்கள். ஆனால் பல படித்த ஜாம்பவான்கள் வேலையாட்களை வைத்து இறுதிப் பயணத்தை முடித்து வைப்பார்கள். தாங்கள் கட்டிய வேட்டியும் சட்டையும் கசங்காமல் வருவார்கள்.7. இன்னும் சிலர் நேரம் ஆகிறது நேரமாகிறது என்று மறைமுகமாக கூறிக்கொண்டே இருப்பார்கள்.8. வாழும் காலத்தில் அந்த உயிரற்ற உடல் பலருக்கும் நன்மை செய்திருக்கும், தீமையும் செய்திருக்கலாம்; அவர்கள் மனதினுள் உணர்வை அறியாமல் வேண்டப்பட்டவர்கள் கடைசிநேர பயணத்தில் உடன் இருக்க மாட்டார்கள்.
Added a post
இரண்டு நண்பர்களில் ஒருவர், மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம். எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம். காலம் செல்லசெல்ல "நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்.. அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே" என்ற சிந்தனை உருவாகும். மேலும் சிறிது காலம் செல்லும்போது இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும்.அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்.. பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது.இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால், நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்:1 . நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.2 . மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.3. நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.4. ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்.5. நண்பர் உதவவில்லையானால் " அவருக்கு என்ன சூழ்நிலையோ,கஷ்டமோ தெரியவில்லை?" என்று நினைக்கப் பழகுங்கள்.6. உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.7. நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக நில்லுங்கள். நல் ஆலோசனை நல்குங்கள்.8 . நண்பர் தன் கஷ்டத்தை முதலில் சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு நன்று அல்ல.9 . அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.10 . அவ்வாறே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.வாழ்க நண்பர்கள் ! வளர்க நட்பு !!முயற்சிப்போமா?????