அமரர் அபென்ஷன் கந்தையா

  • 1 members
  • 1 followers
  • 1850 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
Added a post 
இலங்கைக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் வருகைதந்திருந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான பயண நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்து மீண்டும் ஈரான் சென்றுள்ளார்.ஈரானுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதுமுன்பதாக நேற்று உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்..இதன்போது ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.000
  • 11
Added a post 
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இதற்கமைய, இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது000
  • 13
Added a post 
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 40ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணி சார்பில், அதிகபடியாக ரிஷப் பண்ட் 88 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்தநிலையில், 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது000
  • 17
Added a post 
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் பால் மா இறக்குமதியாளர்கள் 400 கிராமுக்கு 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 150 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 17
Added a post 
தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.அதற்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பார் குறியீடு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 18
Added a post 
இலங்கையில் ஆண் கைதிகளைப் போல் தனியார் நிறுவனங்களில் பணியுரியும் வாய்ப்பு பெண் கைதிகளுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என சிறைச்சாலைப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, "தண்டனை விதிக்கப்பட்ட 208 பெண் கைதிகள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களின் உழைப்பைப் பயன்படுத்த இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."இந்தப் பெண் கைதிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் இருந்தால், அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்" எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்;''பெண் கைதிகளுக்கு பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக தையல் மற்றும் நெசவு தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு சிறிய உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.ஆண் கைதிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. அதற்காக அவர்களுக்கு நாளொன்றுக்கு 1024 ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.எனினும், பெண் கைதிகளுக்கு அவ்வாறு வாய்ப்பு கிட்டுவதில்லை'' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சிறைச்சாலைகளின் புள்ளிவிவர அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டு 134,098 ஆண் கைதிகளும், 4483 பெண் கைதிகளும் இருந்தனர்.2021 ஆம் ஆண்டு 74,105 ஆண் கைதிகளும், 2868 பெண் கைதிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 19
Added a post 
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விஜயம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.பிராந்திய வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.எனினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஈரான் இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுவதால் அது இலங்கையர்களுக்கு நல்ல விடயமாக பார்க்கப்படுகின்றது.எனினும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது 3 நாள் பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்த போது அமெரிக்காவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் விடயங்களில் அமெரிக்கா மிகவும் தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கின்றது.எனினும் ஈரான் ஜனாதிபதி இலங்கை வருவதற்கு முன்னர் பாகிஸ்தான் சென்று வந்தததால் பாகிஸ்தானுடன் நட்புறவு ஏற்பட்டு அது இஸ்ரேலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்ற நிலையிலேயே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக கருதப்படுகிறது.அதனால் இலங்கை பாதிக்கும் என்பதற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 22
Added a post 
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி மோசடியான முறையில் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (24) பணிப்புரை விடுத்துள்ளார்.குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாக கூறி பணம் சம்பாதிக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு SLBFE இன் பதவி நிலை உயர் அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளா ர்.இதேவேளை, அநுராதபுர த்தை அண்மித்த பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பௌத்த பிக்கு ஒருவரும் வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள புலனாய்வுக் குழுவுடனான கலந்துரையாடலின் படி, இவ்வாறான சம்பவத்தை யாராவது எதிர்கொண்டால், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு SLBFE இன் முறைப்பாடு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தை பெறுவதற்கு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000]
  • 22
Added a post 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ICC கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜமைக்காவின் கரீபியன் தீவில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்த உசைன் போல்ட் உயர்நிலைப் பள்ளியில் தடகளப் போட்டிகளை பயின்று வேகமாக ஓடக்கூடிய நபராக மாறினார்.உலகளாவிய ரீதியில், மிகவும் வேகமாக ஓடக்கூடிய நபராக சாதனை படைத்த உசைன் போல்ட், தற்போது ICC 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 21
Added a post 
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.நீண்டகாலம் தங்கும் விடுதி என்ற போர்வையில் விபச்சாரம் நடைபெறுவாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகில் இயங்கிய விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.இதன்போது 4 பெண்களும், விடுதி உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது000
  • 25
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 12 ஆம் தேதி மேஷம் -ராசி: மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். காதணி சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நெழிவு, சுழிவுகளை அறிந்து கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்ரிஷபம் ராசி: எதிர்காலம் சார்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தனவரவுகளின் மூலம் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் மறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்மிதுனம் -ராசி: குழந்தைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் கடகம் -ராசி: திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்சிம்மம் -ராசி:சொத்து விற்பது, வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். கவலை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னி -ராசி: காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். விவேகமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம் -ராசி: எதிலும் திருப்தி இன்மையான சூழல் அமையும். விமர்சனங்களால் மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். தற்பெருமை இன்றி செயல்படுவது நல்லது. சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்விருச்சிகம்- ராசி: மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். அரசுப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் படிப்பு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசு -ராசி: சிந்தனைகளில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பாசம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மகரம் -ராசி:உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெண்மைகும்பம் –ராசி:போட்டி சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருந்தால் ஆதாயம் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் மூலம் மதிப்பு மேம்படும். மூத்த சகோதரர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். கமிஷன் சார்ந்த செயல்பாடுகளால் தனவரவுகள் மேம்படும். வாகனம் சார்ந்த விஷயத்தில் சிறு சிறு செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: தந்தையுடன் அனுசரித்துச் செல்லவும். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் தோன்றி மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 53
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 25.4.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று அதிகாலை 12.48 வரை சுவாதி. பின்னர் விசாகம்.  உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 57
  • 82
Good Morning...
  • 87
Added a news 
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே பொலிசாரால் நேற்று (24) இரவு வளைக்கப்பட்டது.இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 அழகிகளும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். 0777xxxx27 , 077xxxxx13 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக குறித்த விடுதியில் அழகிகளை ஒப்பந்தம் செய்து மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்றோர் அங்கு சென்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
  • 90
  • 87
1859: பிரித்தானிய, பிரெஞ்சு பொறியியலாளர்கள் சுயஸ் கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தனர்.1898: ஸ்பெய்னுக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.1945: இத்தாலியில் நாஸி படைகள் சரணடைந்தன.1981: ஜப்பானின் சுராகா நகரிலுள்ள அணு மின் உலையில் 100 ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாகினர்.1988:இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.2005: ஜப்பானின் அமகாசாக்கி நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 107 பேர் பலி.2006: கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைக் குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.2007: ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸினின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.2011: அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சூறாவளியினால் சுமார் 300 பேர்பலி.
  • 107
கருத்து கந்தசாமி
  • 112
திருக்குறள்
  • 114
  • 114
காலை வணக்கம்
  • 114
Added a news 
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அலெர்ட் செய்துள்ளது. அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமையாக வீசத் தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே சென்றால் முகம், உடல் எரியும் அளவுக்கு வெப்பம் தகித்து வருகிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், கடலோர ஆந்திரா, மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென் தமிழ்நாடு, வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
  • 332
Added a news 
தமிழ்நாட்டில் கடந்த சில சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் இன்று 24ந்தேதி ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
  • 315
Added article 
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கே அம்மாவாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.இவர் தன்னுடைய இடுப்புப் பகுதியை பெரிதாக்கிக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் எந்தளவுக்கு வைரல் ஆகின்றனவோ அந்த அளவுக்கு ட்ரோல்களும் வெளியாகின்றன.இந்நிலையில் சமீபத்தில் அவர் வித்தியாசமான உடையணிந்து எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 
  • 318
Added article 
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கினார்கடந்த ஆண்டில் பேஷியல் செய்த போது திடீரென அவரது முகம் வீங்கியது. இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த பிரச்சனை அப்படியே விடப்பட்டது.இப்போது ரைசாவின் கைவசம் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் மீண்டும் வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார். மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
  • 318
Added a news 
பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ரங்கன ஷிலிபினி ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • 329
Added a news 
அதிபர், ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அரச பாடசாலை ஆசிரியர்கள் -அதிபர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.அதிபர்,ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த நாட்டில் 2 இலட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். சுமார் 16 ஆயிரம் அதிபர்கள் உள்ளனர்.ஆசிரியர் சேவை மற்றும் அதிபர் சேவையில் சம்பள பிரச்சியை காணப்படுகின்றது. அதிபர் – ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் ஏப்ரல் 18 ஆம் திகதி கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் செயலாளரின் கையொப்பத்துடன் கடிதமொன்று வெளியிடப்பட்டது.அதிபர், ஆசிரியர் சேவையில் சம்பளபிரச்சினை இல்லை என்றே அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது பாரிய பிரச்சினையாகும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
  • 340
Added a news 
கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004 ஆம் ஆண்டில் உருவாக்கிய அமைப்பாகும்.அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் ஆரம்ப அங்கத்தவர்களில் ஒருவரும், சிரேஷ்ட கலாநிதியுமான கே.ஆரியசிங்கவிற்கு சிரேஷ்ட வளவாளருக்கான விருதும் ஏனைய வளவாளர்களுக்கான விருதுகளும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த ஜனாதிபதிக்கு வளவாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திர பண்டாரவினால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.பின்னர் ஜனாதிபதி அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்க நிறைவேற்றுக் குழு உறுபினர்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்துகொண்டார்.
  • 331