Feed Item
Added a news 

கனடாவின், யுகான் மாகாண முதல்வர் ரஞ்ச் பிள்ளை நேற்று அவரது பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்வும் அறிவித்துள்ளார்.

இந்த முடிவை எடுக்குமுன் அவர் தனது மகனுடன் யுகான் ஆற்றின் கரையில் முக்கிய உரையாடல் நடத்தியதாக கூறியுள்ளார்.

“எங்களைப் போன்றவர்கள் இந்த பணியை செய்யக்கூடியவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று என் மகன் என்னிடம் கூறினார்,” என பிள்ளை கூறியுள்ளார்.

ரஞ்ச் பிள்ளையின் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி என்பது தனது வாழ்நாளிலேயே மிகப் பெரிய பெருமை என பிள்ளை குறிப்பிட்டார்.

  • 826