Feed Item
Added a post 

சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான்.. வந்தவன் சென்னையிலேயே தங்கியதால் நாகரீகம் ரெம்ப முற்றி அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் திடீரென்று அவனுடைய

அம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார்.

வந்தவர் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து

சாப்பிட்டுக் கொண்டிருப்பதை

கண்டார்.

அம்மா கேட்டார்..

"யார் இது"?

சேகர் சொன்னான்...

"என் ரூம் மேட்மா"

அம்மா..

"அப்படின்னா"??

"ரூம் மேட்னா கூட வசிக்கிற பொண்ணு.. நீ சந்தேகப்படுற மாதிரி வேற ஒன்னும் இல்லைமா.. வீட்டை மட்டும்தான் ஷேர் பண்றோம்.. அவ தனி பெட்ரூம் நான் தனி

பெட்ரூம்."

அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய்விட்டார்..

இரண்டு நாட்கள் கழித்து அவன் ரூம்மேட் சொன்னாள்; "உங்கம்மா வந்து போனதிலிருந்து தோசை கரண்டியை காணல, ஒரு வேளை உங்கம்மா எடுத்து

போயிருப்பாங்களோ?"

சேகர் சொன்னான்.. "தெரியல எங்க

கிராமத்து வீட்ல போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு

கேக்குறேன்"

அம்மாவுக்கு கடிதம் எழுதினான்..

"அன்புள்ள அம்மா, நான் நீங்க இங்கே இருந்த தோசைக் கரண்டியை எடுத்தீங்கனும் சொல்லல்ல.. எடுக்கலைனும் சொல்லல்ல.. ஆனா ஒன்னுமட்டும் உண்மை.. என் வீட்டிலிருந்து நீங்க போனதற்கப்புறம் தோசைகரண்டியை காணவில்லை.."

சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது..

அதை சேகர் பிரித்து படித்தான்..

"அன்புள்ள மகனுக்கு.. நான் உன் கூட வசிக்கிற பொண்ணோடு தப்பா இருக்கிறேன்னும் சொல்லல்ல.. இல்லைன்னும் சொல்லல்ல.. ஆனா ஒன்று மட்டும் உண்மை.. அவ அவ பெட்ரூமில் தூங்கியிருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டுபிடிச்சிருப்பா.."

செத்தாண்டா சேகரு....!

  • 855