மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களை நடித்த அவர், முதல் முதலாக அறிமுகமானது தெலுங்கு திரைப்படமான போக்கிரி படத்தின் ரீமேக் ஆன கன்னட படத்தில்தான்.அதன்பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் பிறகு தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்.மாடலிங் துறையில் இருந்து, சினிமாவுக்கு வந்த இந்த அழகான நடிகை, தனக்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற முடியாமல் சினிமாவை விட்டே சில காலமாக ஒதுங்கி இருக்கிறார்.கடந்த ஆண்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா, தனது கணவர் நிதின் ராஜூக்கு பாத பூஜை செய்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.பிரணிதா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அந்த வகையில் லேட்டஸ்ட் ஆக அவரது நீச்சல் உடை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.நீச்சல் உடையில் பிரணிதா சுபாஷை பார்த்த ரசிகர்கள், ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா உச்சக்கட்ட கவர்ச்சி காட்டுவது என்று புலம்பினாலும், அந்த புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர்.