Support Ads
 ·   ·  947 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

துவந்த யுத்தம்

பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு மட்டும் இடையே நடக்கும் போர்.)
மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான்.
(ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்றதொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூனனின் தேர் மீது எய்தான். அதனால் பத்து கஜ தூரத்திற்கு மட்டும் பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர்.
அப்போது தேரில் சாரதியாயிருந்த 
ஸ்ரீ கிருஷ்ணர் “ஆஹா.. அற்புதம்… அற்புதம்” என்று தன்னையுமறியாமல் கர்ணனின் பராக்கிரமத்தை சிலாகித்துக் கூவினார்.
அர்ஜூனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் பொறாமை.
“நாம் இதே அஸ்திரத்தை எய்து கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளியதை,
இந்த கண்ணன் சிலாகிக்கவில்லை. பாராட்டவில்லை. ஆனால் கர்ணனோ வெறும் பத்து கஜ தூரத்திற்கு நம் தேரை தள்ளியதை மெச்சுகிறானே… இதென்ன அநியாயம்? இதென்ன விந்தை?”
“அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் கர்ணன், என் கிரீடத்தை தனது அஸ்திரத்தால் வீழ்த்தியபோது கூட அவனை மெச்சவில்லை.
சொல்லப்போனால் இதைவிட அது பெரிய தீரச் செயல். அப்போது அவனை பாராட்டதவன் இப்போது மட்டும் ‘ஆஹோ ஓஹோ’ என்று பாராட்டுகிறானே? அதுவும் நான் செய்ததில் பத்தில் ஒரு பங்கே அவன் செய்தமைக்கு?”
இவ்வாறாக காண்டீபனின் மனதில் ஐயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
அர்ஜூனன் மனதில் இத்தகு சந்தேகம் ஓடிக்கொண்டிருப்பது பரந்தாமனுக்கு தெரியாதா என்ன? அவனாக கேட்கட்டும் நாம் சொல்லலாம் என்று காத்திருந்தான்.
கண்ணன் நினைத்தது போல அர்ஜூனன் தன் மனதை குடைந்துகொண்டிருந்த சந்தேகத்தை கண்ணனிடம் கேட்டேவிட்டான்.
“மதுசூதனா…. கர்ணன் தனது அஸ்திரத்தால் எனது கிரீடத்தை பறக்கச் செய்தபோது கூட நீ சிலாகிக்கவில்லை. ஆனால், என்னை விட பத்தில் ஒரு பங்கு தேரை அஸ்திரத்தால் தள்ளியதற்கு, அவனை நீ மெச்சினாயே… ஏன்?”
பகவான் கிருஷ்ணர் சொன்ன தேரின் தூரக்கணக்கும் பாரக்கணக்கும்:-
கிருஷ்ண பரமாத்மா அவனை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்…
“அர்ஜூனா நீ கர்ணனின் தேரை நூறு கஜ தூரம் தள்ளினாய்… அவன் பதிலுக்கு அஸ்திரப் பிரயோகம் செய்து உன் தேரை பத்து கஜ தூரம் தான் தள்ளினான். இருப்பினும் அவன் செயல் தான் உன் செயலை விட பாராட்டத்தக்கது.
ஏனெனில்… இது தூரக் கணக்கு அல்ல. பாரக்கணக்கு. அவன் தேரைப்போலவே உன் தேரிலும் ஒரு தேரோட்டியும் ஒரு வீரனும் நின்று கொண்டிருப்பதாக நீ நினைத்துகொண்டிருக்கிறாய். உண்மை அதுவல்ல.
உன் தேர்க்கொடியை பார். அந்தக் கொடியில் அஞ்சலை மைந்தன் அனுமன் இருக்கிறான்.
ஏதோ அவன் உருவம் மட்டும் கொடியில் அடையாளத்துக்காக பொறிக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் உண்மையில் அந்த உருவத்தில் அனுமன் ஆவிர்பவித்திருக்கிறான் என்பதை மறந்துவிட்டாயா? அனுமன் இருக்குமிடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால், நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
உன்னைக் காக்க உன் தேரில் உன்னுடன் இருக்கிறார். அவ்வப்போது தனது சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டும் இல்லையேல் என்றோ மந்திர அஸ்திரங்கள் உன் தேரை சாம்பலாக்கியிருக்கும். கர்ணன் உன் தேரைப் பின்னுக்கு தள்ள அஸ்திரம் எய்தபோது,  அனுமன் ‘மகிமா’ என்னும் சித்தியை பயன்படுத்தி (அஷ்டமா சித்திகளுள் ஒன்று இது!) மலை போன்ற கணமுடையவராக மாறி உன்னை காத்தார். உன் தேரை அசையவிடாமல் செய்தார். ஆனால், ஆஞ்சநேயனின் சக்தியையும் மீறி கர்ணனின் அம்பு உன் தேரை பத்து கஜ தூரம் பின்னுக்கு தள்ளியது.
அப்படியென்றால் அவன் அஸ்திர பிரயோகதின் தீரத்தை நீயே பார்த்துக்கொள். எனவே தான் கர்ணனை மெச்சினேன்” என்றான் பார்த்தசாரதி.
இதைக் கேட்ட அர்ஜூனன் வெட்கி தலைகுனிந்தான். “உண்மை தான் கண்ணா… உன் சக்தியாலும் அனுமனின் சக்தியாலும் தான் நான் தாக்குப்பிடிக்கிறேன்".
கர்ணனை போன்ற மாவீரனிடம் துவந்த யுத்தம் செய்வதே எனக்கு பெருமை தான்….” என்றான் அர்ஜூனன்..!!! 
  • 245
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்