Support Ads
 ·   ·  1000 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

காலம் ஒரு சக்கரம் போன்றது

ஒரு எலி ஒரு பண்ணையார் வீட்டில் வெகுகாலமாக உல்லாசமாக வாழ்ந்தது, வழக்கம்போல் இரவில் உணவு தேட வெளியே புறப்பட்டது அப்போது பண்ணையாரும் அவருடைய மனைவியும் ஒரு அட்டைப்பெட்டியை பிரிப்பதை கண்டது தனக்குத்தான் ஏதோ உணவு கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் எலியும் அதை ஆர்வமாக உற்று பார்க்க அவர்கள் அதிலிருந்து ஒரு பெரிய எலி பொறியை வெளியே எடுத்தனர்.

அதை கண்ட எலி மிகவும் பயந்தது நொந்து போனது, இந்த எலி பொறியை வீட்டிலிருந்து தூக்கி எறிய வேண்டும், அல்லது இதை உடைத்தெறிய வேண்டும் என்று திட்டம் போட்டது அதற்கு உதவிட இன்னோரு ஆள் வேண்டும் என்று தோன்றியது அதன்படி... வேகமாக தோட்டத்திற்கு சென்று அங்கு ஒரு கோழியிடம்...

"என்னை கொல்ல பொறி வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை உடைக்க எனக்கு உதவி செய்யவேண்டும்!" என்றது கோழியோ சத்தமாக சிரித்து... "அந்த பொறியினால் எனக்கு எந்த ஆபத்துமில்லை அது உன்னுடைய பிரச்சினை அதை நீதான் சரிசெய்யவேண்டும் முதலில் இடத்தை காலி பன்னு இங்கிருந்து போ!" என சொல்லி விரட்டியது.

அடுத்து வேகமாக ஓடி ஒரு கிடா ஆட்டிடம் சென்று "கிடா அண்ணே... என்னை கொலை செய்ய ஒரு பொறி வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை... உடைக்க...!" என்றது... நக்கலுடன் சிரித்த அந்த கிடா ஆடு "எலி பொறிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், உனக்கு உதவினால் எனக்கென்ன லாபம் கிடைக்கும்? நீ இருந்தாலும் செத்தாலும் எனக்கென்ன வந்தது...!" என்றது...

மிகவும் மன வருத்தத்தில் இருந்த அந்த எலி வானத்தை பார்த்து கடவுளிடம் வேண்டியது... அப்போது திடீரென "படார்" என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது பண்ணையார் அம்மா வேகமாக ஓடி அந்த எலி பொறியில் ஒரு பாம்பு மாட்டிக்கொண்டது என தெரியாமல் அதை திறக்க... வலியில் துடித்த அந்த பாம்பு ஓங்கி ஒரே போடாக பண்ணையார் அம்மாவை கொத்திவிட்டது...

வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் பரபரப்புடன் பண்ணையார் அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர், விஷம் இறங்கிவிட்டது ஆனால் காய்ச்சல்தான் இன்னும் இறங்கவில்லை என்றார் டாக்டர்... அதற்கு கோழி அடித்து சூப் வைத்து குடித்தால் காய்ச்சல் இறங்கிவிடும் என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கூற... அதன்படி உடனே பண்ணையிலிருந்து ஒரு கோழியை பிடித்து சூப்பு வைத்து கொடுத்தனர்...

தன் மனைவிக்கு உடல் நலம் தேறி நல்லபடியாக வீட்டிற்கு வந்தால் குலச்சாமிக்கு ஒரு கிடா விருந்து வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்ட அந்த பண்ணையார்... அதன்படி அவர் மனைவியும் உடல் நலன் தேறி வீட்டிற்கு வர... உடனே பண்ணையிலிருந்து ஒரு கிடா ஆட்டை பிடித்து மனமும் ருசியுமாக எல்லோருக்கும் விருந்து வைத்தார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த அந்த எலி தன்னுடைய பிரச்சினை மட்டும் இன்னும் தீரவில்லையே என மறுபடியும் சோகமானது...

திடீரென ஏதோ சிந்தனையில் அந்த பண்ணையார் இந்த எலி பொறியினால்தான் தன் மனைவிக்கு இந்த நிலைமை தனக்கும் எவ்வளவு செலவு என அந்த எலி பொறியை தூக்கி குப்பையில் எறிந்துவிடுகிறார். அதை பார்த்த அந்த எலி ஒரு மெல்லிய புன்னையுடன் வானத்தை பார்த்து கடவுளுக்கு நன்றி சொன்னது.

இந்த கதையினால் அறிய வேண்டிய நீதி...

ஒருவர் பிரச்சினை என்று உங்களிடம் வந்தால் அவரை மேலும் புண்படுத்தாதீர். 

ஏனெனில் காலம் ஒரு சக்கரம் போன்றது எப்போது யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

  • 179
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்