·   ·  11 posts
  • 2 members
  • 1 friends

"நவராத்திரி" ஆரம்பம். இக்காலத்தில் "நவராத்திரி விரதம்" மேற்கொள்ளும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வோமா.?

நாளை "நவராத்திரி" ஆரம்பம். இக்காலத்தில் "நவராத்திரி விரதம்" மேற்கொள்ளும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வோமா.?புராண காலத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பூலோகம் மட்டுமல்லாது தேவலோகத்தையும் கைப்பற்றி பல அராஜகங்களை செய்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுக்க முடியாத தேவர்கள் சக்தியாகிய அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். இதையடுத்து துர்க்கை அம்மன் வடிவெடுத்த பார்வதி தேவி மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்டு, அவனை துர்க்கை வதம் புரிந்ததை நவராத்திரி விழாவாக அனைவரும் கொண்டாடுகின்றனர். தீமைகளை எப்போதும் இறைசக்தி வெல்லும் என்பதை குறிக்கும் விழாவாக நவராத்திரி விழா இருக்கிறது.தெய்வீக தன்மை வாய்ந்த இந்த ஒன்பது தினங்களாகிய நவராத்திரி விழாவின் மகிமை குறித்தும், அப்போது அனுஷ்டிக்க வேண்டிய “நவராத்திரி விரதம்” குறித்து இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.நவராத்திரி எனப்படும் இந்த ஒன்பது தினங்களும் புனித vதினங்களாகும். இந்த 9 நாட்களும் பெண் தெய்வங்களுக்கு விரதமிருந்து வழிபடுவதை நவராத்திரி விரதம் என அழைக்கின்றனர். இராமாயணத்தில் “ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும்”, “மகாபாரதத்தில்” பஞ்ச பாண்டவர்களும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து தங்களின் எதிரிகளை வென்று, தாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றனர். இந்த விரதத்தை நாம் மேற்கொள்வதால் நமது கர்ம வினைகள் நீங்கும், பொருளாதார கஷ்டங்கள், கடன் பிரச்சனைகள், உடல்நல பாதிப்புகள், குழந்தை sபேறில்லாமை, திருமண தாமதம் போன்ற அனைத்தும் எல்லாமாக இருக்கும் அன்னையின் அருளால் நிச்சயம் நீங்கும்.நவராத்திரி ஆரம்பிக்கும் முதல் தினம் தொடங்கி 9 நாட்களும் காலை 9 மணிக்குள்ளாக குளித்து விட வேண்டும். பூஜையறையில் சென்று “சரஸ்வதி, லட்சுமி” போன்ற பெண் தெய்வங்களின் படத்திற்கு பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு பழம் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து அப்பெண் தெய்வங்களுக்குரிய மந்திரங்களை கூறிவனங்க வேண்டும் உடலில் எந்த விதமான நோய், நொடி பாதிப்பும் இல்லாதவர்கள் இந்த 9 நாட்களும் திட உணவுகளை தவிர்த்து, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றோடு பழ சாறுகளை மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். இந்த விரத முறை கடுமையாக இருப்பதாக கருதுபவர்கள் mஒரு வேளை திட உணவையாவது தவிர்த்து பருப்புகள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.இந்த 9 நாள் விரத காலத்திலும் முடி, நகங்கள் வெட்டுவது போன்றவை கூடாது. பிறர் வீடுகளில் தங்க கூடாது. வீட்டை முடிந்த வரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மது, புகைபிடித்தல், புலால் உணவுகளை அறவே நீக்க வேண்டும். மனதை எல்லாவித கவலைகள், வருத்தங்கள் போன்றவற்றிலிருந்து விலக்கி சக்தி தேவியை மட்டுமே தியானிக்க வேண்டும். இந்த 9 நாள் காலத்திலும் ஏழை பெண்களுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்வது இந்த விரதத்தின் பலனை மேலும் அதிகரிக்கும். இறுதி நாளான 9 ஆம் தினம் 3 கன்னிகைகளுக்கு அன்னதானம் அளித்து, ரவிக்கை துண்டு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு போன்ற சீர்வரிசை அளிக்க வேண்டும். இந்த தானம் உங்கள் குடும்பத்திற்கு அல்லது பரம்பரைக்கு பெண் சாபம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதை போக்கும். மிகுந்த பலனளிக்கும் இந்த நவராத்திரி விரதத்தை குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் தவிர்த்து ஆண் – பெண் பேதமின்றி அனைவரும் மேற்கொள்ளலாம்.

  • 274
  • More
Info
Category:
Created:
Updated:
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்