Support Ads
 ·   ·  1504 posts
  • 3 members
  • 3 friends

சனிப்பெயர்ச்சியில் குழப்பம்?

தற்போது சனிப்பெயர்ச்சி தான் நாட்டில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி அடைகிறார். அவ்வாறு பெயர்ச்சி நடைபெறும்போது திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலிலும் மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பத்திரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்களை புத்தகமாக வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் பிரபலமான ஜோதிடர்களை அழைத்து சனிப்பெயர்ச்சி பலன்களை பேசவைக்கின்றன.

இந்தியாவில் கேரளா தவிர்த்த இதர தென் மாநிலங்களில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு விதமான கணித முறைகளை கொண்ட பஞ்சாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஆரியபட்டீயத்தை அடிப்படையாக கொண்டு வரருசி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கடபயாதி வாக்கியங்களை வைத்து கணிக்கப்பட்டதாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது நவீன வானியல் சூத்திரங்களை கொண்டு கணிக்கப்பட்டவை ஆகும். வடமாநிலங்களில் வாக்கிய கணிதத்திற்கு பூர்வ பத்ததி என்று பெயராகும். மேலும் அங்கு சூரிய சித்தாந்த கணிதத்தை கொண்டு சூரிய சித்தாந்த பஞ்சாங்கம் வெளிவருகிறது. கிரகலாகவம் என்னும் கிரந்தத்தின் கணிதங்களை பின்பற்றியும் ஒருசில பஞ்சாங்கங்கள் வெளிவருகிறது. ஆக அங்கு 1.திருக்கணிதம் 2.பூர்வபத்ததி(வாக்கியம்) 3.சூரியசித்தாந்தம் 4. கிரகலாகவம் என நான்கு வகை பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.

கடந்த 29-03-2025 அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களோ அடுத்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் தேதி தான் சனிப் பெயர்ச்சி, இப்போது கிடையாது என்கிறார்கள். திருநள்ளாறு தேவஸ்தானம் இன்னும் ஒரு படி மேலே சென்று தற்போது சனிப்பெயர்ச்சி இல்லை என அறிக்கையே வெளியிட்டு விட்டார்கள். இதனால் மக்களிடையே மிகுந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏன் இவ்விரு பஞ்சாங்கங்களிலும் மாறுபட்ட தேதிகளில் பெயர்ச்சி ஏற்படுகிறது என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கத்தை இங்கே பார்ப்போம்.

பொதுவாக சனியின் சஞ்சாரம் திருக்கணிதத்திற்கும் வாக்கிய கணிதத்திற்கும் சுமார் 4 மாதங்கள் வரை வித்தியாசம் ஏற்படும். இது இயல்பானது. திருக்கணிதப்படி மாசி மாதம் 17ஆம் தேதியன்று பூரட்டாதி 3ஆம் பாதத்திற்கு சனி பிரவேசித்து விட்டார். ஆனால் வாக்கியப்படி அடுத்த வைகாசி மாதம் 8ஆம் தேதி தான் பூரட்டாதி 3ஆம் பாதத்தில் பிரவேசிக்கிறார். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு 4 மாதங்கள் மட்டுமே. அதிலிருந்து சுமார் 40 நாட்களுக்குள் 4ஆம் பாதத்தில் பிரவேசிக்கும்போது ராசி மாற்றம் ஏற்பட்டுவிடும். அதன்படி திருக்கணிதத்தில் பங்குனி 14ஆம் தேதியில் ராசி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அப்போது சனிக்கு வக்கிரம் எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சனி நின்ற வீட்டிற்கு 5ல் சூரியன் வரும் போது தான் வக்கிரம் ஏற்படும்.இங்கு இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் வக்கிரம் ஏற்படவில்லை. அதனால் எந்த தடையும் இன்றி சனி ராசி மாறி விட்டார்.

ஆனால் வாக்கியத்தில் அப்படி இல்லை. வைகாசி 8 ஆம் தேதியில் பூரட்டாதி 3ல் இருந்து 40 நாட்களுக்குள் அதாவது ஆனி 18க்குள் 4ஆம் பாதத் திற்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் ஆனி 1ஆம் தேதியில் கும்பத்தில் இருக்கும் சனிக்கு 5ல் சூரியன் வந்துவிட்டார். அதுமுதல் சனியின் முன்னோக்கி செல்லும் வேகம் குறைந்து ஆனி 18ல் வக்கிரம் ஆகிவிட்டார். இதனால் அடுத்த ராசிக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் கார்த்திகை 1ல் வக்கிர நிவர்த்தி அடைந்து படிப்படியாக முன்னோக்கி சென்று மாசி 22ல் (6-3-2026) தான் மீனராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். திருக்கணிதப்படி ஆனி 29ல் வக்கிரம். அதற்குள் சனி மீன ராசியில் சுமார் 8 பாகை முன்னே சென்று விட்டார். அதனால் வக்கிரம் அடைந்தும் கூட மீனத்திலேயே பின்னோக்கி வந்து பின் வக்கிர நிவர்த்தி அடைந்து முன்னோக்கி செல்கிறார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் இரண்டிற்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டது என்று.

சிலர் இதற்கு முன்பெல்லாம் இரண்டு பெயர்ச்சிக்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்படவில்லை.வாக்கிய கணிதத்தில் பிழை ஏற்பட்டதால் தான் கடந்த 2,3 பெயர்ச்சிகளில் இதுபோல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். திருக்கணிதம் துல்லியமானது. வாக்கியம் இன்னும் துல்லியப் படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் பெயர்ச்சியில் வரும் இந்த வேறுபாடு இப்போது தான் ஏற்பட்டதல்ல. காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். கடந்த 60 ஆண்டுகளில் இவ்வாறு வேறுபாடு ஏற்பட்ட காலங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

கடந்த 8-4-1966ல் திருக்கணிதப்படி கும்பராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆன போதிலும், வாக்கியப்படி 11-3-1967ல் தான் பெயர்ச்சி ஆனது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சுமார் 1 வருடம். அதுபோல் 15-6-1968ல் திருக்கணிதப்படி மேஷத்திற்கு பெயர்ச்சி; வாக்கியப்படி 27-4-1969ல் தான் பெயர்ச்சி. இரண்டிற்கும் சுமார் 10 மாதம் வித்தியாசம். ஆனால் அடுத்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சியான தேதியை பார்த்தால் திருக்கணிதம் 27-4-1971; வாக்கியம் 3-6-1971. இரண்டிற்கும் வித்தியாசம் சுமார் 40 நாட்கள் மட்டுமே. அதுபோல் 1973ல் 30 நாள்; 1975ல் 26 நாள்;1977ல் 20 நாள்;1979ல் 28 நாள்;1982ல் 25 நாள் மட்டுமே இரண்டிற்கும் வித்தியாசம் ஏற்பட்டது. அதன் பின்னர் 1984 முதல் 1996 வரையிலான காலத்தில் ஏற்பட்ட பெயர்ச்சிகளில் மீண்டும் சுமார் 10 மாதம் முதல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்பட்டது. பிறகு 1998,2000 ஆகிய வருடங்களில் இந்த வித்தியாசம் 2 மாதமாக குறைந்தது. பின்னர் 2002,2004,2006 ஆகிய வருடங்களில் 10 மாதங்களுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட்டு,2009,2011,2014 ஆகிய வருடங்களில் 18 முதல் 46 நாட்களாக குறைந்தது.2017 முதல் 2028 வரை இந்த வித்தியாசம் மீண்டும் அதிகரித்து 2030ல் குறைய உள்ளது.எனவே சனிப் பெயர்ச்சியில் வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் ஏற்படும் வித்தியாசமானது எப்போதும் நடைமுறையில் இருக்கக்கூடிய வித்தியாசமே ஆகும் என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள்.

ஆகவே, அவரவர் எந்த கணித முறையை கடைப்பிடிக்கிறீர்களோ அதன்படி சனிப்பெயர்ச்சிக்கான தேதியையும் பலன்களையும் அறிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வதே சாலச்சிறந்ததாகும்.அதை விடுத்து திருக்கணிதக்காரர்கள் வாக்கியத்தை குறை சொல்வதும், வாக்கியக்காரர்கள் திருக்கணிதத்தை குறை சொல்வதும் நல்ல ஜோதிடருக்கு அழகல்ல.

  • 533
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங