Support Ads
 ·   ·  1981 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நட்பு (குட்டிக்கதை)

" நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்" என்று தன் நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார்

அதற்கு அந்த நண்பர் "மகிழ்ச்சி வாருங்கள் ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் ஊரில் இருக்கின்ற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான 'கேக்'கு வாங்கி வாருங்கள்" என்றார்.

" எதற்காக" என்று இந்த நண்பர் கேட்க" என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான்.... 'சர்பிரைசாக' அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்து விதமாக கொண்டாட விரும்புகிறேன்.என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்" என்றார்.

அவர் கூறியவாறு அந்த நண்பர் கொஞ்சம் அதிகமா செலவழித்து நல்ல 'கேக்' ஒன்றை வாங்கிச்சென்றார் .

அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் இவரும் ஊருக்கு கிளம்பத் தயாரானார்

'கேக்'கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் அதற்கு உண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார், ஆனால் ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து "கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள் மீதமுள்ள இனிப்பு பண்டங்களை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள்" என்று ஒரு பெட்டியை கொடுத்தார்.

எவ்வளவு தொகை என்று கேட்டு பணத்தைக் கொடுப்பான் என்று எதிர்பார்த்தால் மீதத்தை நம் தலையில் கட்டி விட்டானே என்று ஊருக்குத் திரும்பு வழியில் மனைவியிடம் தன் நண்பனை சபித்துக் கொண்டே வந்தார்

"விடுங்கள் அவர் ஒருவேளை மறந்திருக்கலாம் அல்லது நாளை மறுநாள் அனுப்பி விடலாம் என்று நினைத்திருக்கலாம்" என்றார் மனைவி

இருந்தாலும் அவரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

வீட்டிற்கு வந்து அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இனிப்புகளுடன் பணமும்

ஒரு கடிதமும் இருந்தன.

அந்தக் கடிதத்தில் "நண்பா என்னுடைய பேச்சை மதித்து நீ என் மகனுக்காக 'கேக்' வாங்கி வந்தாய்.

தொகை எவ்வளவு என்று கேட்டு அதைத் திரும்பக் கொடுத்து உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை நீ வாங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும் எனவே இந்த பெட்டியில் வைத்து அனுப்பி வைக்கிறேன் தயவு செய்து இதை எடுத்துக் கொள்" என்று இருந்தது.

அதைப் படித்தவுடன் அவரை நண்பன் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அவனைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்துவிட்டோம், ஆனால் அவன் நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக கருதுகிறான் என்று வேதனையடைந்தார்.

மனம் வேதனைப்பட்ட அவர்... உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு" என மன்னிப்பு கேட்கப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னார்.

அவ்வாறெல்லாம் பேசி இன்னொரு தவறு செய்யாதீர்கள் உங்களைப் பற்றி அவர் உயர்வாக நினைத்திருக்க, "அவரைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன்" என்று இப்பொழுது சொன்னால் அவர் வேதனைப்படுவார் உங்களின் மீதுள்ள மதிப்பு குறைந்துவிடும், என்றார் மனைவி.

ஆம் நண்பர்களே! பெறும்பாலும் நாம் அவசரப்பட்டு மற்றவர்களின் வெளிரங்கமான நடவடிக்கையை வைத்து அவரைப் பற்றித் தவறாக எண்ணுகிறோம்.

ஒருவரின் அந்தரங்கத்தை இறைவன் மட்டுமே அறிவான். தெளிவான ஆதாரங்கள் கிடைக்காத போது ஒருவரை குறை கூறுவது குற்றமாகும். அவர் தவறே செய்திருந்தாலும் ஏதோ ஒரு நிர்பந்தம் அல்லது காரணம் இருக்கலாம் என நாம் நினைப்பதால் நமக்கு இழப்பு ஏதும் இல்லை. ஆனால் தவறு செய்யாத ஒருவரை நாம் யூகத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கி மற்றவர்களிடம் பரப்பினால் நாம் குற்றவாளி ஆகிவிடுவோம் .

நல்லதை செய்வோம்.. நல்லதையே நினைப்போம்.

  • 481
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங