Support Ads
Main Menu
 ·   · 841 posts
  •  · 5 friends
  • I

    9 followers

இறை நம்பிக்கை


அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடி சொன்னார் அர்ச்சகர் " லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரை தரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு! ''


ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார்.



'' இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் '' என்று தாயார் சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார்.



அது ஒரு புராதனமான கோவில்.
ராமசந்திரன் தன் முன்னோர்கள் அங்கு வழிபட்டதாக அறிந்திருந்தார்.



கூகிளீல் விலாசம் தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தாருடன் மகனின் காரை தானே ஓட்டி வந்திருந்தார்.



மெயின் ரோடிலிருந்து கரடு முரடான சாலையில் மூன்று கிலோமீட்டர் பயணத்தின் பின்னர்தான் கோவிலை அடைய முடிந்தது.



பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் கவுதம் புலம்பிக்கொண்டே வந்தான்.



' இப்படி ஒரு மட்டமான ரோடு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன்.'' என்று தாத்தாவை செல்லமாக கடிந்து கொண்டான்.



தாத்தாவுக்கு பேரன் மீது கொள்ளை பிரியம். அவனுக்கும் இவர் மீது அன்புதான். ஆனால் எப்போதும் அவருடைய கருத்துக்கெதிராக பேசி வம்புக்கு இழுப்பான். அவன் இந்தக் காலத்து பையன். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லை என்று விதண்டா வாதம் செய்வான்.



நாளாவட்டத்தில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை தானாகவே வரும் என்று ராமசந்திரன் நம்பினார்.



ஏற்கெனவே அர்ச்சகரிடம் தொலைபேசியில் பேசியிருந்ததால் அவர் நைவெத்தியத்துக்காக பொங்கல், வடை, சர்க்கரை பொங்கல் எல்லாம் செய்து வைத்திருந்தார்.



பெருமாள் சன்னதிக்கு போகும் வழியில் தாத்தாவிடம் கேட்டான் கவுதம் " தாத்தா மண்டலம்னா எத்தனை நாள்?''
'' நாப்பத்தெட்டு நாள்... ஏன் கேக்கறே...நீ வந்து சேவிக்கப்போறியா?''
'' அதில்லை தாத்தா..இவர் இத்தனை வருஷமா தர்சனம் ப்ண்ணிட்டு தானே ;இருக்காரு. ஆனா இவரு இன்னும் அழுக்கு வேஷ்டி துண்டு கட்டிட்டு ஏழையா இருக்காரே...''



' உஷ்...அவர் காதில் விழுந்தால் வருத்தபடுவாரு. கம்முனு வா'' என்றார் ராமசந்திரன் கடுமையாக.



பெருமாள் சன்னிதியிலும்
தீபாராதனை நைவேத்தியம் எல்லாம் முடிந்தது.



மந்திரம் ஓதி தேங்காய் பழங்கள் பிரசாதம் எல்லாவற்றையும் ஒப்படைத்தார் அர்ச்சகர்.
'' அப்ப நாங்க கிளம்பறோம்..ரொம்ப சந்தோஷம்'' என்ற ராமசந்திரன் 'எவ்வளவு செலவாச்சு' என்று கேட்டு அவர் சொன்ன தொகையுடன் ஐன்னூரு ரூபாய் சேர்த்து தந்தார்.



'' எனக்கு நூறு ரூபாய் போதும். பாக்கி நானூறு ரூபாய்க்கு உங்க பேரில் நாலு வெள்ளிக்கிழமை அர்ச்சனை பண்ணிடறேன்'' என்றார்.



காரில் எல்லோரும் ஏறியதும் ஸ்டார்ட் செய்தார் ராமசந்திரன். ஆனால் இஞ்சின் உறுமி உறுமி அடங்கியது. வண்டி கிளம்பவில்லை. எல்லோரும் தள்ளி ஸ்டார்ட் செய்தாலும் பயனில்லை. மக்கர் செய்தது...அவர் முகத்தில் கவலை படர்ந்தது . இந்த அத்துவானத்தில் எந்த மெகானிக்கை அழைப்பது ?



கோவிலைப் பூட்டிய அர்ச்சகர் அருகில் வந்தார்.
'' கார் பிரச்னையா...கவலை வேண்டாம். இந்த நெம்பருக்கு டயல் பண்ணிக் கொடுங்கோ..நான் பேசறேன். ''



அவர் போனில் பேசினார் '' இங்கே காரில் ஒரு சின்ன பிராப்ளம். வர்றியா?''



மோபெட்டில் ஒருவன் வந்தான். கார் பான்னெட்டை திறந்து பத்தே நிமிடத்தில் சரி செய்துவிட்டான். காரில் ஒரு ரவுண்டு அடித்து நிறுத்தினான். ராமசந்திரனுக்கு ஏக மகிழ்ச்சி.



இருனூறு ரூபாயை நீட்டினார். அர்ச்சகர் சொன்னார்
'' பணமெல்லாம் வேணாம். பர்சில் வையுங்க...இவன் என் பையன். பிரான்ஸ்லே நிச்சான் கார் கம்பெனியில் சீப் எஞ்சினியர்.லீவுலே வந்திருக்கான்..லீவு முடிந்ததும் ஒரகடம் பாக்டரியில் இன் சார்ஜாக பொறுப்பெடுக்கப் போறான்... ''



'' ஓ.. தட்ஸ் கிரேட் .'' என்றார் ராமசந்திரன் இன்ப அதிர்ச்சியுடன்



'' உங்களுக்கு ஒரே பையனா?''



'' ஒரு டாட்டர் இருக்கா. லண்டனில் டாக்டர்''



ராமசந்திரன் கவுதமை அர்த்தபுஷ்டியுட பார்த்தார் ' தாயாரை தினம் தரிசிக்கும் இவர் ஏழையா இருக்கார்னு சொன்னியே..இப்ப பார்த்தியா தேவியின் சக்தியை?'' என்று பார்வையால் வினவினார்.



அர்ச்சகர் கவுதம் அருகில் வந்தார் '' அம்பி, நீ ஸ்கூலில் எந்த டிரஸ் வேண்டுமானாலும் போட்டுகிட்டு போலாமா?''



'' இல்லை..யூனிபார்ம் இருக்கு..அதைத்தான் போட்டுக்கணும்''



'' அதே மாதிரிதான் இந்த கோவிலைப் பொறுத்தவரைக்கும் எனக்கும் இந்த வேஷ்டியும் துண்டும்.தான் யூனிபாரம். நான் பேண்ட் சர்ட் போட்டுகிட்டு பூஜை செஞ்சா நல்லா இருக்குமா...அதுதான். மத்தபடி கடவுளை நம்பினால் நிச்சயம் விரும்பினது கிடைக்கும். '' என்றபடி .



காரில் ஏறிய அனைவரும் அர்ச்சகருக்கும் அவர் மகனுக்கும் கையசைத்து விடை பெற்றார்கள்.



'' இதே மாதிரி வாராவாரம் ஒரு கோவிலுக்கு போலாமா தாத்தா'' என்று ஆவலுடன் கேட்ட கவுதமை ஆதரவுடன் தட்டிக்கொடுத்தார் ராமச்ச்ந்திரன். '' நிச்சயம் போவோம்''



காரை ரிப்பேர்;ஆக்கி கவுதமை ஆன்மீகத்துக்கு மாற்றிய இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தபடி வண்டியை ஓட்டலானார்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 107
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த இந்த தீபத்தை ஏற்றுங்கள்
    கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவிக்
    மருத்துவ குணமுடைய மூலிகையாக விளங்கும் புதினா
    புதினா ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், ப
    இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு எளிய தீர்வு
    முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முத
    சனி பெயர்ச்சி பலன் 2023 - ராஜயேகம் எந்த ராசிக்கார்களுக்கு?
    கும்பம் ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 28, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 28, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 11ஆம் திகதி மேஷம்Aries சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 28.9.2023. சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.46 வரை சதுர்த்
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 27, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 27, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 10ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். தந்தையி
    ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 - இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழைதான்.....
    மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர். இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இர
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 27.9.2023.  சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.06 வரை திரியோதச
    கற்பித்தலின் சிறந்த பண்புகள்
    மாணவரை கவரும் ஆசிரியரியரின் தனிச் சிறப்புப் பண்புகள் எவை என கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.அவை:1)நண்பராக பழகக்கூடிய -எளி
    "சதி எனும் உடன்கட்டை ஏறுதல்"
    நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..!இது 1798ல் எழுதப்பட்டது ..அவர் பெயர்: Donald Campbell ..பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சே
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 26, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 26, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 9ஆம் திகதி மேஷம்Aries உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 26.9.2023.  சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.53 வரை ஏகா
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 25, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 25, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 8ஆம் திகதி மேஷம்Aries கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். உறவுகளின் வழி
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை 25.9.2023. சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.02 வரை தசமி .
    Ads