Support Ads
 ·   ·  2155 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

உறவுகள் மேம்பட...

அது ஒரு சிறிய உணவு விடுதி.

கரூர்  ஜவகர் பஜாரிலுள்ள ஒரு முட்டு
சந்தில்..ஹோட்டல் கற்பகம் இருக்கிறது. அந்த ஹோட்டல் பத்து பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம்.
கற்பகம் ஹோட்டலின் ஓனர் கருப்பசாமி தானே கல்லாவை கவனிப்பார். உணவு பரிமாறுவதில்
இருந்து அனைத்து வேலைகளும் அவரே. சமையல் வேலைக்கு மட்டும் மாஸ்டர் வைத்து கொள்வார்.
கற்பகம் உணவு விடுதி..முட்டு சந்தில்
இருந்தாலும், நாள் முழுவதும் சற்று,
சுறு, சுறுப்புடன் இயங்கி கொண்டு இருக்கும்.
உணவின் சுவை கூடுதலாக மெச்சும்
படி இருப்பதால், மற்ற உணவு விடுதிகளை காட்டிலும், விலைகுறைவாகவும், தரமாகவும், 
சற்று தாராள அளவு உடையது ஆகவும், இங்கு உணவு பொருட்கள்
இருக்கும்.
கற்பக உணவு விடுதி ஓனரின் கல்லா
டேபிளில் ஒரு சிலேடு தொங்கி கொண்டு இருக்கும். அந்த சிலேட்டில்
காலை நேரம் என்றால்..நான்கு இட்லி
ஒரு டீ  ..என்றும் எழுதப்பட்டு இருக்கும்.
அதை பார்த்து யாரோ ஒருவர் உணவு
விடுதிக்கு சென்று இட்லி சாப்பிட்டு,
டீ குடித்து விட்டு.. சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல்" சிலேட்டை"
காட்டி சென்று விடுவார்.
பின், சிறிது நேரம் கழித்து, கருப்பசாமி மீண்டும்..அந்த சிலேட்டில் 
ஏதோ எழுதி தொங்க விடுவார்.
இப்பொழுது, யாரோ,ஒருவர் முன்னம் 
குறிப்பிட்டதுப் போல் சாப்பிட்டு விட்டு,
"சிலேட்டை" காட்டி காசு கொடுக்காமல் சென்று விடுவார்.
யாரும் அவரை ஏன்? என்று கேட்க
மாட்டார்கள்.
இப்படியாக ஒரு நாளைக்கு பதினைந்து, இருபது நபர் வரை சாப்பிட்டு சென்று விடுவார்கள். இது
வாடிக்கையாக கற்பக உணவு விடுதியில் நடக்கும் செயல்.
புதிதாக கற்பக உணவு விடுதியில்,
சாப்பிட வந்த ஒருவர், தான் சாப்பிட்டதற்கு கல்லாவில் பணம் கொடுக்க சற்று காத்திருந்தார்.
அப்பொழுது.. கருப்பசாமி, பரிமாறி விட்டு கல்லாவுக்கு வந்தார்.
காத்திருந்தவரிடம் பணத்தை பெறும்
முன், அவர் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவர்.. பணம் கொடுக்காமல்
போகிறார்" என்றார் சற்று பதட்டத்துடன்....
கருப்பசாமி தன் முறுக்கு மீசையை
வருடிக் கொண்டு.." அய்யா.. உங்களை போல் சாப்பிட வருகிறவர்கள் தான் சாப்பிட்டதற்கு
பணம் கொடுத்து விட்டு, இதுப் போன்று உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கும் சேர்த்து பணம்
கொடுப்பார்கள்.அப்படி, அவர்கள்
கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்ப, 
"சிலேட்டில் " உணவு வகைகளை எழுதி வைப்பேன். அதை பார்த்து விட்டு..சாப்பிட்டு விட்டு" சிலேட்டை"
கை நீட்டி போவார்கள். இது, இங்கு
வாடிக்கையான நடை முறைதான்"
என்றார்.
மேலும் தொடர்ந்தார்...
" அப்படி பணம் யாரும் கொடுக்கவில்லை என்றால், என் பங்குக்கு நானாக எழுதி போடுவேன்.
யாரேனும், சாப்பிட்டு விட்டு போவார்கள்.நான் சின்ன வயதில்,
ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன..
பாடு பட்டிருப்பேன்" என்று தன் ஈரக்
கண்களை அகல விரித்து அவரிடம்
சொன்னார்.
அப்படி, கருப்பசாமி சொன்னவுடன்...
புதிதாக வந்த வாடிக்கையாளர்...
அவசரமாக, தன் சட்டை பைக்குள்
கை விட்டு.. இரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து.. யாருக்குகேனும்
உணவு  பகிருங்கள்" என்று சொல்லி
நகர்ந்தார்.
அந்த முட்டு சந்துக்குள் சர்வ இயல்பாக, சில பைத்தியங்களின்
நடமாட்டம், அவ்வப்பொழுது இருந்து
கொண்டே இருக்கும்.
அவர்களுக்கு மட்டும், உணவு பொட்டலங்கள் கருப்பசாமியிடம் இருந்து கை மாறி விடும். அவர்களுக்கு பிச்சை எடுக்க தெரியாது.. கேட்டு வாங்க தெரியாது..
பசி என்ற உணர்வும் தெரியாது.. ஆனால், கையில் கிடைத்ததை சாப்பிட வேண்டும் என்று மட்டும் தெரியும்.
கருப்பசாமி இப்பொழுது  சிலேட்டில்...
" உறவுகள் மேம்பட சற்று.. உணவிடுங்கள் " என்று எழுதிவிட்டு...
மூவருக்கு மதியம் "சாப்பாடு தயார்"
என்று எழுதி..புன்னகையுடன் கல்லா
டேபிளில் தொங்க விட்டார்.
  • 499
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங