·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி கோயில் சிறப்பு

இறைவனுக்கு ஏழை – பணக்காரன், படித்தவன் – பாமரன் போன்ற பேதங்கள் ஏதும் இல்லை. அதனால் தான் இறைவனுக்கு படைக்ககூடாத நைவேத்தியம் ஆன காட்டுப்பன்றி இறைச்சியை வேடுவ குலத்தில் பிறந்த கண்ணப்பர் படைத்த போது அதை பக்தியுடன் ஏற்றார். மேலும் தனது கண்களையே கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கொடுத்த போது மீண்டும் கண்பார்வை வழங்கினார். அது போன்றே மன்னன் ஒருவனின் குறைபாட்டை தீர்த்த தேவதானம் “அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில்” சிறப்புக்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இந்த அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் மூலவர் மற்றும் உற்சவர் நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் தவமிருந்த நாயகி என்கிற பெயரில் வணங்கப்படுகிறார். தல விருட்சமாக நாகலிங்க மரம் இருக்கிறது.

வரலாறு படி சிறந்த சிவபக்தனானான வீரபாகு பாண்டியனை போரில் வெல்ல முடியாத விக்கரமசோழன் தந்திரத்தால் வீரபாகு பாண்டியனை கொல்ல வீரபாகுவுடன் சந்தனம் செய்து கொள்ள விரும்புவதாகவும். அதற்கு அடையாளமாக வீரபாகு சோழன் எரிந்து போகும் படியான ஒரு நச்சு ஆடையை பரிசாக நயவஞ்சகமாக தனது சேவகனிடம் கொடுத்து அனுப்பினான். தனது சிவபக்தியால் இந்த ஆபத்தை முன்னரே உணர்ந்த வீரபாகு, அந்த நச்சு ஆடையை தான் அணிந்து கொள்ளாமல், சோழனின் சேவகனுக்கே அணிவித்தான். சிறிது நேரத்தில் உடல் பற்றியெறிந்து அந்த சேவகன் மாண்டான்.

இந்நிகழ்விற்கு பிறகு பாண்டியனை காப்பாற்றிய சிவபெருமானுக்கு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்கிற பெயர் ஏற்பட்டது. அதே வேளையில் சிவனின் கோபத்தால் விக்கிரமசோழனுக்கு கண்பார்வை பறிபோனது. தன் தவறை உணர்ந்து வீரபாகு பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, இந்த தேவதான கோயிலில் வந்து வழிபட்ட போது ஒரு கண் பார்வை மட்டும் கிடைத்தது. மற்றொரு கண்பார்வையும் கிடைக்க இறைவனிடம் வேண்டிய போது இவ்வூருக்கருகில் மேலும் ஒரு கோயில் எழுப்பினால் மற்றொரு கண்பார்வையும் கிடைக்கும் என அசரீரி கூற, அருகிலிருக்கும் சேத்தூர் என்கிற ஊரில் விக்கரமசோழன் கோயில் எழுப்ப, அவனுக்கு மற்றொரு கண்பார்வையும் கிடைத்தது.

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் சிறப்புக்கள் பஞ்ச பூத சிவஸ்தலங்களான காஞ்சிபுரம், காளஹஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிக்க முடியாது. ஆனால் இந்த கோயில் இருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் சங்கரன்கோயில், தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய பஞ்சபூத சிவன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க முடியும் என்பது சிறப்பு.

குழந்தை பேறில்லாத பெண்கள் தலைக்கு ஊற்றி குளித்து விட்டு இக்கோயிலுக்கு தங்களின் கணவர்களோடு சென்று கோயில் வளாகத்தில் தல விருட்சமாக இருக்கும் நாகலிங்க மரத்தில் மூன்று நாகலிங்க பூக்களை பறித்து ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்த பூக்களை பிரசாதமாக பெற்று, மூன்று இரவு தம்பதிகள் பசும்பாலில் கலக்கி குடித்து வந்தால் விரைவிலேயே குழந்தை பிறக்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்துக உள்ளது. கண்களில் ஏற்படும் எத்தகைய நோய்கள் மற்றும் குறைபாடுகள் தீர இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு அது நீங்குகிறது. உடலில் காயங்கள் ஏற்பட்டு சிலருக்கு தழும்புகள் ஏற்பட்டு அவலட்சணமான தோற்றத்தை தருகிறது. இங்கு வந்து வழிபாடும் அத்தகைய தழும்புகள் நீங்குவதாக கூறப்படுகிறது. கோயில் அமைவிடம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் வட்டத்திலிருக்கும் தேவதானம் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

  • 358
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்