·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது

அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன் . 

ஊர் எல்லையில் உள்ள மலைமீது இருக்கிறார் கடவுள் என்று தகவல் கிடைத்தது . 

வெறுங்கையோடு போகாதே ! 

ஏதாவது கொண்டு போ என்றார்கள் .

இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன் . 

மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில் ! 

ரொம்ப உயரம் போலவே ! 

ஏற முடியுமா என்னால் ? ! ? ! 

மலையைச் சுற்றிலும் பல வழிகள் ! 

மேலே போவதற்கு . . . 

அமைதி வழி , 

ஆடம்பர வழி , 

பக்தி வழி , 

தியான வழி , 

சாஸ்திர வழி , 

சம்பிரதாய வழி , 

வழிபாடு வழி , 

மந்திர வழி , 

தந்திர வழி , 

கட்டண வழி , 

கடின வழி , 

சுலப வழி , 

குறுக்கு வழி , 

துரித வழி , 

சிபாரிசு வழி , 

பொது வழி , 

பழைய வழி , 

புதிய வழி , 

இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள் . . . 

அடேயப்பா !   

எத்தனை வழிகள் ! 

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி ! 

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள் ! 

என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை !  ஒதுக்கினர் சிலர் . 

நான் கூட்டிப் போகிறேன் வா ! 

கட்டணம் தேவையில்லை . 

என் வழியி்ல் ஏறினால் போதும் . 

எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு ! 

என கை பிடித்து இழுத்தனர் சிலர் ! 

மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் , 

உனக்கு பதில் நான் போகிறேன் , 

கட்டணம் மட்டும் செலுத்து ! 

என்றனர் சிலர் . 

பார்க்கணும் அவ்ளோதானே ! 

இங்கேயிருந்து காட்டுகிறேன் பார் ! 

அது போதும் . . . 

அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும் ! 

ஆணவத்துடன் சிலர் .

அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது . 

உன்னால் ஏறமுடியாது . 

தூரம் அதிகம் . திரும்பி போ . 

அவரை எதுக்கு பார்க்கணும் ? 

பார்த்து ஆகப்போறது என்ன ? 

அதைரியப்படுத்தினர் சிலர் . 

உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை , ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் ! 

அது ஒரு வழிப்பாதை ! 

ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது ! 

அப்படியே போக வேண்டியதுதான் ! 

பயமுறுத்தினர் சிலர் . 

சாமியாவது , பூதமாவது ! 

அது வெறும் கல் ! 

அங்கே ஒன்றும் இல்லை ! 

வெட்டி வேலை ! 

போய் பிழைப்பை பார் ! 

பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர் . 

என்ன செய்வது ? 

ஏறுவதா , 

திரும்பி போவதா ? 

குழம்பி நின்ற என் முன்னால் ,  

வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா !  சாப்பிட எதாவது குடு சாமீ ! "  என்றாள் . 

கடவுளுக்கென்று கொணர்ந்ததை

அந்த கைகளில் வைத்தேன் . 

மகராசனா இரு என்று வாழ்த்தினாள் . 

வாழ்த்திய முகத்தினை பார்த்தேன் . 

நன்றியுடன் என்னை நோக்கிய அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கடவுள் ! 

இங்கே என்ன செய்கிறீர்கள் ? 

நான் இங்கே தானே இருக்கிறேன்

அப்போ அங்கிருப்பது யார் ?

மலை உச்சியை காட்டினேன் . 

 உம்...அதுவும் நான்தான்  

அங்கேயும் இருக்கிறேன், 

இங்கேயும் இருக்கிறேன் , 

எங்கேயும் இருப்பவன் அல்லவா நான் 

இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள் . 

சிரமப்பட்டு ! 

" ஆனால் , . . .  திணறினேன் .

" இது உமது உருவமல்லவே " 

அதுவும் எனது உருவமல்லவே 

எனக்கென்று தனி உருவமில்லை 

நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன் 

அப்படியென்றால் , 

பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே 

உணவளித்தவனும் நானே 

வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே 

தருபவனும் நானே 

பெறுபவனும் நானே

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன் 

என் தரிசனம் பெற கண் தேவையில்லை 

மனம்தான் வேண்டும் 

அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ? 

குழப்பத்துடன் கேட்டேன் . 

தாராளமாக ஏறி வா 

அது உன் விருப்பம் 

அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே !

அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்

புரியாமல் முழித்தேன் , 

கடவுளே !  என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது . 

கடவுள் சொன்னார் , 

என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல 

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண ,  நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ  இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய் . 

என்று சொல்லி , 

புன்னகைத்தார் கடவுள்

  • 486
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்