- · 5 friends
-
I
தாம்பூலம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்
தாம்பூல_பை ! இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.
1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.
தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.
வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.
மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,
கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,
வளையல், மன அமைதி பெற
தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்ததேங்காய் கொடுப்பதே_நல்லது.)
பழம்,அன்னதானப் பலன் கிடைக்க,
பூ, மகிழ்ச்சி பெருக,
மருதாணி, நோய் வராதிருக்க,
கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,
தட்சணை_லக்ஷ்மி கடாக்ஷம் பெருக,
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய வழங்குகிறோம்.
மனிதர்களிடையே பிறர்க்குக்கொடுத்து மகிழும்வழக்கம்.
வரவேஇம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன.காலப் போக்கில்,ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக்காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது.
சோகமே.
தாம்பூலம்வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத்திருப்தி செய்வதே.
அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்துதாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மைவாழ்த்துவாள்.
தேவிஎந்தரூபத்தில்வேண்டுமானாலும் வரலாம்.
நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி_யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்படி இருக்க, தாம்பூலம்தருவதில் பேதம்பார்ப்பது,தேவியை_அவமதிப்பது போலாகும்.
வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து,அந்தஸ்துவேறுபாடு,பழையகோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப்பலனும்_இல்லை.
மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த_வேண்டியதில்லை.
நம் எல்லோர் இதயத்துள்ளும்இருக்கும் தேவி,எல்லாம் அறிவாள். பக்தியுடன் தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளை கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த முறையை நானும் தெரிந்து உங்களுக்கும் பகிர்ந்து கொண்டது அம்பாளின் அனுக்கிரகம் என்றே சொல்லலாம்.
நாமும் சந்தோஷமாக இருப்போம்.நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·