·   ·  2139 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

குருவுக்கு சீடர் எப்படி பணிவிடை செய்ய வேண்டும்?

கோதாவரி நதிக்கரையில் ஓர் ஆசிரமம். அதில் வேததர்மன் என்ற குரு இருந்தார். அவர் சிறந்த தபஸ்வி சீடர்கள் பலர் அவரிடம் கல்வி கற்று வந்தனர்.

ஒரு நாள் அவர் தம்முடைய எல்லாச் சீடர்களையும் அழைத்து,

''நான் போன ஜென்மங்களில் எத்தனையோ பாவங்கள் செய்துள்ளேன். என் தவத்தினால் இந்த பாவங்கள் எவ்வளவோ அழிந்துவிட்டன, இருந்தும் இன்னும் சிறிது மீதி இருக்கின்றன. இந்தப் பாவங்களின் பலனை நான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்காவிட்டால் இன்னொரு ஜென்மத்தில் அனுபவித்துத்தான் தீர வேண்டும். ஆகவே, காசிக்குச் சென்று இந்தப் பாவங்களை அனுபவிக்கப் போகிறேன். அப்பொழுது என்னை கவனித்துக் கொள்ள ஒரு சீடன் தேவை. யார் தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

சாந்தீபகன் என்ற சீடன் "குருவே நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்'' என்றான்.

''நான் இருபத்தொரு ஆண்டுகள் குருடனாகவும், நொண்டியாகவும், குஷ்டரோகியாகவும் இருப்பேன் உன்னால் எனக்குப் பணிவிடை செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.

சாந்தீபகன் "குருவே நீங்கள் கவலைப்படவே வேண்டாம். உங்களைக் கவனித்துக் கொள்கிறேன். எப்படியாவது உங்கள் பாவங்கள் உங்களை விட்டு விலகினால் போதும்'' என்றான்.

குருவும் சீடனும் காசிக்குச் சென்றார்கள். குரு மணிகர்ணிகை கட்டத்தில் (படித்துறையில்) குளித்துவிட்டு, விஸ்வேஸ்வரரை தரிசனம் செய்தார். உடனே அவர் குருடராகவும், நொண்டியாகவும், குஷ்டரோகியாகவும் மாறினார். சாந்தீபகன், அவர் உடலைத் துடைத்துவிடுவது, தினம் உணவு வாங்கி அதை குருவுக்குக் கொடுப்பது என்று இருந்தான். அவனுக்குக் கோயிலுக்குப் போகக்கூட ஓய்வு கிடைக்கவில்லை. இறைவனைப் பிரார்த்தனை செய்யவும் அவனுக்கு நேரம் போதவில்லை.

வியாதியின் கடுமை அதிகரிக்க அதிகரிக்க குருவின் கோபமும் அதிகரித்தது. அவன் தம்மை சரியாகக் கவனிப்பதில்லை என்று கோபித்துக் கொள்வார். அவன் கொண்டு வரும் உணவு ருசியாக இல்லை என்று தூக்கி எறிவார்! சில சமயங்களில் அவனை அடிக்கவும் செய்வார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் குரு சேவையிலேயே அந்தச் சீடன் ஈடுபட்டிருந்தான். இதைக் கண்டு காசி விஸ்வநாதர் மனம் குளிர்ந்தார்.

ஒரு நாள் சாந்தீபகன் முன்னால் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்" என்றார்.

ஆனால் சாந்தீபகன் "குருவின் உத்தரவில்லாமல் நான் ஒரு வரமும் கேட்கமாட்டேன், ஒரு நிமிஷம் இருங்கள் இதோ நான் குருவைக் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று குருவிடம் சென்றான்.

''காசி விஸ்வநாதர் எனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். நீங்கள் முன்போல் தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று வரம் கேட்கட்டுமா குருவே'' என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் குருவுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. "அடே மடையா என் உடல் குணமானால் என் பாவம் தொலையாது, அதை நான் அடுத்த ஜென்மத்தில் அனுபவித்துத் தீர வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா. ஏன், எனக்குப் பணிவிடை செய்வது உனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அதற்காக இப்படி வரம் கேட்கப் பார்க்கிறாயா" என்று வெகு கடுமையாகச் சொன்னார்.

உடனே சாந்தீபகன் திரும்பி வந்து "குரு ஒரு வரமும் கேட்கத் தேவையில்லை என்று சொல்கிறார்'' என்று காசி விஸ்வநாதரிடம் சொன்னான். இதைக் கண்டு அதிசயித்த சிவபெருமான் உடனே சாந்தீபகன் முன்னால் தோன்றி என்னிடம் ஏதாவது வரம் கேள் என்று சொன்னார்.

சாந்தீபகன் சிவனைப் பார்த்து, "கடும் தவம் செய்கிறவர்களுக்குக் கூட தங்கள் தரிசனம் எளிதில் கிடைக்காதே அப்படி இருக்க, உங்களையே நினைக்காத எனக்கு எப்படி தரிசனம் கொடுத்தீர்கள்" என்று கேட்டான்.

அதற்கு சிவன் ''நீ குருவுக்குச் செய்யும் தொண்டு எனக்குச் செய்யும் தொண்டாகும். மனைவி கணவனுக்குச் செய்யும் தொண்டு மக்கள் துறவிகளுக்கும் செய்யும் தொண்டு எல்லாம் எனக்குச் செய்த தொண்டுதான் ஆகவே என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

''எப்பொழுது குருவுக்குச் செய்யும் தொண்டு உங்களுக்குச் செய்யும் தொண்டு ஆகிறதோ நான் குரு சேவை ஒன்று செய்தாலே போதும், அதைக் கொண்டு நான் எல்லாம் பெற்றுவிடுவேன். ஆகவே என் குருபக்தி திடமாக இருக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள்" என்றான் சாந்தீபகன்.

''அப்படியே'' என்று சொல்லி சிவபெருமான் மறைந்தார். இதைக் கேட்ட குரு மிக்க மகிழ்ச்சி அடைந்தார், அவர் சாந்தீபகனை வாழ்த்தினார் உன்னைப் போன்ற சிஷ்யனைக் கண்டு பிடிக்க முடியாது. நீ கோடீஸ்வரனாக மாறுவாய் வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் பெற்று, முடிவில் முக்தியையும் பெறுவாய் என்று வாழ்த்தி தாமும் பழையபடி திடகாத்திரம் உள்ளவராக மாறினார். அவர் நோயாளியாக மாறியதும் சாந்தீபகனைச் சோதிப்பதற்காகத்தான் அதில் தேர்ச்சியடைந்த சாந்தீபகன் நற்பேறு பெற்றான்.

குருபக்தி எல்லா நன்மைகளையும் தரவல்லது. குருவருள் இல்லையேல் திருவருள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  • 520
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங