·   ·  2067 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சிவாஜிக்கு யோசனை சொன்ன மூதாட்டி

சிவாஜி மராட்டியத்தை ஒளரங்கசீப்பிடமிருந்து கைபற்ற முயற்சி செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியாகவே முடிந்தது.

அப்படி ஒருமுறை தோல்வியடைந்தபோது சிவாஜி காட்டின் வழியே தனிமையில் மிகவும் சோர்வாகச் சென்றார். அப்போது அவருக்கு மிகவும் பசித்தது. ஆனாலும் தனது பயணத்தை அக்காட்டுப் பகுதியில் தொடர்ந்தார்.

அங்கு அவருக்கு ஒரு குடிசைப்பகுதி தென்பட்டது. பசி மற்றும் போர் தோல்வியால் மிகவும் களைப்புற்று இருந்த சிவாஜி குடிசையின் வாயிலைத் தட்டினார்.

குடிசையினுள் இருந்து மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் சிவாஜி “அம்மா பயணக் களைப்பால் மிகவும் பசியாக உள்ளேன். தாங்கள் எனக்கு உண்பதற்கு ஏதாவது தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என்றார்.

அதற்கு மூதாட்டியும் “மகனே உண்ண சூடான களியைத் தருகிறேன். அதனை உண்டு உன் பசியை நீக்கு” என்றார்.

சிவாஜியும் “மிக்க நன்றி தாயே. அவ்வாறே செய்யுங்கள்” என்று கூறினார்.

மூதாட்டியும் ஒரு தட்டில் சூடான களியை எடுத்து வந்து சிவாஜியிடம் கொடுத்தார். களியை வாங்கிய சிவாஜி களியின் மையப்பகுதியை எடுத்து உண்ண முயற்சி செய்தார். மிகவும் சூடாக இருந்ததால் அவரால் களியை கைகளில் எடுக்க முடியவில்லை.

அதனைக் கண்ட மூதாட்டி “நீ சிவாஜியைப் போல் அவசரப்படுகிறாய்” என்றார்.

அதற்கு சிவாஜி மூதாட்டியிடம் “சிவாஜியைப் போல் அவசரப்படுகிறேனா?. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று விளக்கமாக் கூறுங்கள்” என்றார்.

அதற்கு மூதாட்டி “தட்டில் உள்ள சூடான களியின் ஓரங்களை முதலில் உண்டு விட்டு மையத்திற்கு சென்றால் களியின் சூடு குறைந்து உண்ண முடியும்” என்று கூறினார்.

“அதேபோல் சிவாஜி முதலில் எல்லையில் உள்ள கிராமங்களை கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு பின் கோட்டைகளை முற்றுகையிட வேண்டும்.” என்றார்.

இதனைக் கேட்ட சிவாஜி மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கி “வெற்றி பெற வீரம் மட்டும் இருந்தால் போதாது. விவேகத்துடன் கூடிய மதிநுட்பம் வேண்டும் என்று நல்ல வழியைக் காட்டினீர்கள். நான்தான் நீங்கள் கூறும் சிவாஜி. என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார்.

பின் மூதாட்டி கூறியபடி சூடான களியினை உண்டதுடன் முதலில் எல்லையில் இருந்த கிராமங்களைக் கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு கோட்டைகளைப் பிடித்து மராட்டிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

இக்கதையிலிருந்து நாம் எந்த ஒரு பிரச்சினையையும் அணுகும்போதும் முதலில் பிரச்சினையின் தன்மையை ஆராய்ந்து அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் திட்டமிட்டு பின் வெற்றி பெற செயல்பட‌ வேண்டும்.

  • 126
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங