Support Ads
 ·   ·  2096 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ராஜா சொன்ன உத்தி (குட்டிக்கதை)

ஒரு ராஜாவுக்கு தன் பட்டத்து யானை கஜேந்திரன் மேல ரொம்ப பிரியம் !!

ஒவ்வொரு போரின் போதும் பட்டத்துயானை கஜேந்திரன் தான் முன்களத்தில் நிற்க்கும்.

எப்பவும் ராஜாவுக்கு வெற்றிதான் !!

கஜேந்திரன் துணையிருக்கும் போது,

ராஜாவுக்கு ராஜா தான்.

போர் முரசு ,கேட்ட அடுத்த நிமிடமே போருக்கு தயார் ஆகிடும் !!

எதிர் நாட்டு ராஜாவுக்கு இந்த யானையை பார்த்தாலே , கை கால் எல்லாம் நடுங்கிடும் !!

ஒரு படைத் தளபதிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கஜேந்திரனுக்கும் ராஜா கொடுத்தார் .

பட்டத்து யானைமீதேறி ராஜா நகர் வலம் வரும்போது தெய்வமே நேரில் காட்சி தந்தது போல் மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்று உள்ளம் மகிழ்வார்கள் !!

அரண்மனை போன்ற பெரிய வளாகம் கட்டி ,வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து பட்டத்து யானையை ராஜாவும் போற்றி பாதுகாத்து வந்தார் .

எல்லோருக்கும் முதுமை வருவது போல் இப்ப பட்டத்து யானைக்கும் வயதாகிவிட்டது .

எதிர் நாட்டு படை தொந்தரவு இல்லாததால் போர் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது .

கஜேந்திரன் யானைக்கு முன்னாடி மாதிரி சுறுசுறுப்பா இயங்க முடியல !

சோர்வா இருந்துச்சு !!

அவருடைய அழகும் கம்பீரமும் ,முன்புபோல இருக்கணும்னு ராஜா ஆசைப்பட்டார் !

ஆனா வயசு ஆயிடுச்சே !

புத்தி நல்லா இருந்தாலும் சக்தி குறையுதே !!

பட்டத்து யானைக்கு ,வேண்டிய சத்தான உணவுகள் மருத்துவஉதவிகள்,பயிற்சிகள் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ளனும்

ராஜா உத்தரவு போட்டார் .

தினசரி அதிகாலையில் குளத்தில் குளிக்க வேண்டியது ,

அங்குள்ள தாமரை மலரை பறித்து இறைவனை வணங்கிவிட்டு ,ராஜாவுக்கு தரிசனம் தந்து , சாப்பிட வேண்டியது பின் தூங்க வேண்டியது .

இதுதான் பட்டத்து யானையின் வேலை !!

அன்றைக்கு காலையில குளிக்கப்போன பட்டத்து யானைக்கு போதாத நேரம் !!

குளித்துவிட்டு , படித்துறைக்கு சற்று தள்ளி பூத்திருந்த தாமரையை பறிக்கப் போனது யானை .

குளத்துக்குள் இருந்த சேற்றில் கால் வைத்துவிட்டது .

சேற்றிலிருந்து காலை எடுக்க முடியவில்லை .

எவ்வளவு முயன்றும் முடியவில்லை .

ராஜாவுக்கு தகவல் போனது !

பட்டத்து யானையைசேற்றிலிருந்து மீட்க ஆணையிட்டார் !

நூற்றுக்கணக்கான படைவீரர்கள் ,பழக்கிய யானைகளின் துணையுடன் முயன்று பார்த்தார்கள் முடியவில்லை .

மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கை குறைந்து விட்டது .

ராஜாவிடம் எப்படி சொல்வது !

ராஜா கவலையடைவாரே !

பட்டத்து யானையை இழப்பது நாட்டுக்கே பெரிய அபசகுணம் அல்லவா !!

வேறு வழியில்லை !

அமைதியாகச் சொல்லிவிட வேண்டியதுதான் !

ராஜாவிடம் சொன்னார்கள் !

ராஜா பதட்டப்படாமல் கேட்டார் !!

பட்டத்து யானை கஜேந்திரன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .

அதனுடைய ஆற்றலும் அறிவும் விவரிக்க முடியாதது !!

நீங்கள் அதை புரிந்து செயல்படுத்துவீர்கள் என்று நினைத்து உங்களிடம் அதை மீட்கும் பொறுப்பை கொடுத்தேன் .

நீங்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை !!

அதன் பலம் உங்களுக்கு தெரியவில்லை !!

நெருப்பின் வெளிப்பாடு , உரசும் கல்லைப் பொறுத்தே அமைகிறது .

இன்னும் சற்று நேரத்திலேயே பட்டத்து யானை கஜேந்திரன் மீண்டு வரும்.

அதற்கான உத்தியை சொல்கிறேன்!

உடன் செய்க !!

போர்முரசு ஒலிக்கட்டும் !,

படைவீரர்களின் உற்சாக துந்துபிகள் முழங்கட்டும் !

வாள்களும் வேல்களும் கூர்செய்யும் சப்தங்கள் இடைவிடாது கேட்கட்டும் .

ஆணையிட்டார் ராஜா !!

போர் முரசு ஒலித்தது !

படைவீரர்கள் உற்சாக சப்தம் எழுப்பினர் !

மங்கல வாழ்த்துக்கள் ,மத்தள ஓசை, வாள் வேல் ,வீர மகளிர் வெற்றித் திலகமிடும் பாடல்கள் ,பறையோசை !!

எங்கும் கேட்டது .

எல்லோருக்கும் ஆச்சரியம் !வியப்பு !!,மகிழ்ச்சி ,உற்சாகம் !!! ஆனந்தம் !!!

பட்டத்து யானை கஜேந்திரன் சேற்றிலிருந்து காலை தானாக எடுத்து வெளியே வந்தது !!

நடையில் தளர்வு இல்லை !

முகத்தில் சோர்வில்லை !!

வயோதிக பாவமில்லை !!

படைத் தளபதியின் மிடுக்கோடு,

முறுக்கேறிய உற்சாகத்தோடு,

புது வெள்ளம் கரை திரண்டு அணை உடைக்க துடிப்பது போல்,

புது களம் காண போர்களம் செல்ல எழுத்து வந்தது,

சந்தோசத்தில் யானையின் கால்களை பிடித்துக்கொண்டார் ராஜா !!

அதன் பிடரியின் மீது ஏறிஊர்வலம் போனார் !!!

எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் !!

ராஜா எவ்வளவு பெரிய அறிவாளி !!

எது செய்தால் ,எது நடக்கும் எப்படி தெரியும் ?

நமக்கு ஏன் புரியவில்லை !!

அது புரிந்ததால் தான் ,

அவர் ராஜா !!

  • 957
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங