Support Ads
 ·   ·  2139 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மனநலம் காக்கும் மந்திர சொற்கள்

காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது ஒரு பெரியவரை தினமும் பார்த்து வணக்கம் சொல்வது வழக்கம். வணக்கம் சொல்லும் அனைவருக்கும் “மகிழ்ச்சி” என்ற வார்த்தைதான் அவரிடம் இருந்து பதிலாக வரும்.

முதல் தடவை கேட்கும்போது இவர் என்னடா பதில் வணக்கம் சொல்லாமல் மகிழ்ச்சி என்கிறாரே என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் தொடர்ந்த நாட்களில் மகிழ்ச்சி எனும் வார்த்தையைக் கேட்கும்போது நம்மை அறியாமல் மனதுக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்வதை உணர முடிந்தது.

இவரைப் பார்க்கும்போது மற்ற சிலரும் நினைவில் வந்தனர்.

சிறு வயதில் மளிகைக் கடைக்கு செல்ல நேரும். அங்கு கல்லாவில் உட்கார்ந்து இருக்கும் அண்ணன் நாம் எது கேட்டாலும் அவர் வாயிலிருந்து ’சிறப்பு’ என்ற வார்த்தை வரும். அதைக் கேட்கும்போது சிரிப்புதான் வரும் அப்போது. ஆனால் பிறகுதான் தெரிந்து கொண்டேன். அவர் வாழ்வு எவ்வளவு சிறப்பாக மாறியதென்று. ஆம். சிறப்பு என்ற மந்திர வார்த்தையை உச்சரித்த அவர் மிகச்சிறந்த செல்வந்தராக மட்டுமில்லாமல் சேவையாளராகவும் எங்கள் பகுதி மக்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசி வரை சிறப்பு என்ற சொல்லும் அவரை விட்டுப் போகவில்லை. அவரைத் தேடி வந்த சிறப்புகளும் குறையவில்லை.

இந்த இரண்டு மதிப்பிற்குரிய நபர்களிடமும் கற்றுக்கொண்டது நாம் உச்சரிக்கும் வார்த்தைகளின் மகிமையைத்தான். வார்த்தைகளுக்கு நம் மனநலன் காக்கும் சக்தி இருக்கிறது என்பதை உளவியலாளர்களும் ஒப்புக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நம்பிக்கை தரும் வார்த்தைகளை மட்டும் பேசுவோம். ‘ஆஹா’ ’சிறப்பு’ ’மகிழ்ச்சி’ ’நன்றி’ ’சூப்பர்’ போன்ற மனம் மகிழும் மந்திர வார்த்தைகளை உபயோகித்து நம் மனநலனுடன் நம்மை சுற்றி இருப்பவர்களின் மன நலமும் பேணுவோம்

  • 702
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங