Support Ads
 ·   ·  1863 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

Poena cullei சடங்கு

Poena Cullei என்பது பண்டைய ரோமானியர்களின் சட்டத்தின் படி வழங்கப்படும் ஒரு கொடூரமான தண்டனை முறையாகும். ஆனால் அக்கால மக்கள் இந்தத் தண்டனை முறையைக் குறிப்பாகத் 'தன் தந்தையைக் கொன்ற' மகனுக்கான சடங்காகப் பாவித்தார்கள்.

Poena cullei என்றால் சாக்குத் தண்டனை (அ) சாக்கு சடங்கு என்றும் அழைப்பார்கள். Poena Cullei தண்டனையின் போது, குற்றவாளியை ஒரு பெரிய அடர்த்தியான எளிதில் வெளியேற முடியாத பெரிய சைஸ் பையில் அடைப்பார்கள். அந்தக் குற்றவாளியுடன் சேர்த்து ஒரு வெறி நாய், விஷப் பாம்பு மற்றும் சண்டைக் கோழி போன்றவற்றைச் சேர்த்து அடைப்பார்கள்.

இவ்வாறு, குற்றவாளி மற்றும் அந்தக் கொடிய விலங்குகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, பையுடன் ஒரே இடத்தில் அடைக்கப்படுவர். பின்னர், பையை நதியில் அல்லது கடலில் வீசி எறிவார்கள், இதனால் குற்றவாளி நிச்சயம் சாவதைத் தாண்டி, கொடுமையான முறையில் துன்பத்தை அனுபவிப்பதை உறுதி செய்தனர். இந்தத் தண்டனை முறையின் நோக்கம், தந்தையைக் கொன்றது ஒரு மிகக் கொடூரமான பாவம் என்பதைக் குற்றவாளிக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்துவது.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கான்ஸ்டாண்டைன் மன்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை இந்தத் தண்டனை முறை அமலில் இருந்தது.. பின்னர்க் கான்ஸ்டாண்டைன் மன்னர் இந்த முறையில் சில மாற்றங்களைச் செய்து, தணடனை பையில் குற்றவாளியுடன் விஷப் பாம்புகளை மட்டும் சேர்க்கும்படி செய்தார்.

அதற்குப் பிறகு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜஸ்டினியன் மன்னர் Poena Cullei தண்டனையில் பழைய முறையான வெறி நாய், விஷப் பாம்பு, கோழி ஆகிய விலங்குகளுடன் ஒரு குரங்கையும் சேர்த்துப் பையில் அடைக்கச் செய்தார்.

பிற்காலத்தில் இந்தச் சடங்கு முறையானது தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ அல்லது தன்னுடைய எஜமானனையோ கொலை செய்த குற்றவாளிகளைச் சிங்கம் அல்லது ஓநாய் போன்ற கொடூர விலங்குகளுடன் ஒரே கூண்டில் அடைக்கும் முறையாக மாற்றம் அடைந்தது.

  • 655
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங