·   ·  73 posts
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

அப்பாவும் பொடி டப்பாவும் சில ஞாபகங்கள்

படித்ததில் பிடித்தது............ பகிர்கிறேன்.....

எல்லோருடைய அப்பாவை போல என்னுடைய அப்பாவும் கண்டிப்பானவர். 

அப்பாவின் அன்பு ்டிப்பு  

முடி வெட்டவதில் இருந்தே கண்டிப்பு.

ஒரே பார்பர். எப்போதும் சம்மர் கட் தான்.  

"என்ன உன் பையன் இன்னும் முடி வெட்டலையா" அப்பா, அம்மாவிடம்.

"நேத்து தான் வெட்டிண்டு வந்தான்.

இப்ப காலேஜ்க்கு போறான். அதான். ஏதோ இப்ப இதுதான் ஃபேஷனாம்". 

என்ன ஃபேஷனோ என்ன எழவோ.  ரவுடிப்பைய மாதிரி இருக்கு பாக்க.

சரி.  ஹிந்து பேப்பராவது ஒழுங்கா படிக்கறானா? "அதெல்லாம் படிக்கறான்".

"ஏண்டா எப்ப பார்த்தாலும் ஸ்போர்ட்ஸ் பக்கத்தை மட்டும் படிச்சா போதுமா? எப்படி Vocabulary  improve ஆகும்? ஊர் மேயறதை விட்டு, உருப்படற வழிய பாரு" - அப்பா 

"அப்பா தான் தினம் சொல்றாளே. அந்த இந்து பேப்பரை கொஞ்சம் படிடா கோந்தே. அப்பா வருத்தப்படறா பாரு" - அம்மா. 

"ஏண்டி, மணி எட்டாச்சு.  இன்னும் உன் பையனுக்கு விடியலயா?"  - அப்பா. 

"இல்ல.  ராத்திரி படிச்சுட்டு, லேட்டாதான் படுத்துண்டான்.அதான்." - அம்மா. 

"கிழிச்சான்..அஞ்சு மணிக்கு எந்திருச்சு படிச்சா மனசுல பதியும். இப்படி இருந்தா எப்படி உருப்படுவான்"?

என்னால் அம்மாவிற்கு அர்ச்சனை. 

நான் இப்போது அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன். அப்பா தான் இல்ல.

"ஏண்ணா! கண்ணனுக்கு புது சைக்கிள் வேணுமாம். இப்போ இருக்கிறது அடிக்கடி ரிப்பேர் ஆகிறதாம்" -அம்மா. 

"அப்ப தானே தொரை இன்னும் நல்லா ஊரு சுத்த முடியும்.  சைக்கிள் நல்லாத்தான் இருக்கு.  இல்லேனா நடந்து போகச்சொல்லு"- அப்பா. 

மாலை கல்லூரியிலிருந்து வரும்போது வீட்டில் பளபளவென்று புத்தம்பதிய அட்லஸ் சைக்கிள். "அம்மா,  யாரோடது இந்த புது சைக்கிள்?" உனக்குத்தான்டா. அப்பாதான் வாங்கிண்டு வந்தா. பூஜை போட்டு எடுத்துண்டு போ"- அம்மா

கோபம் உதட்டில்தான். ஆனால் மனசு? 

அது தான் அப்பா. இப்போது என்னிடம் கார் இருக்கிறது.  அப்பா தான் இல்லை.

ஏன், உன் புள்ளையாண்டான் அடிக்கடி லேட்டா வர்றான்?-அப்பா. "ஏதோ குரூப் ஸ்டடியாம்.  நாராயணன் வீட்டுக்கு போயிருக்கான்"- அம்மா. நான் போன செகண்ட் ஷோவுக்கு அம்மாவின் சப்பக்கட்டு. இது மாதிரி பல நாட்கள். 

சே. என்ன அப்பா இவர். எது செஞ்சாலும் நைநைனு ஏதாவது சொல்லிண்டே இருந்தா எவன் இந்த வீட்டில் இருப்பான்? - நான்.   

சின்ன வயசில் அப்பாவுக்கு TAS ரத்தினம் பட்டணம் பொடி நான்தான் வாங்கி வருவேன்.  இது பள்ளி வரை தொடர்ந்தது. கல்லூரி வந்ததும் நான் அம்மாவிடம்,  "நா இனிமே பொடி எல்லாம் வாங்கிண்டு வரமாட்டேன். அப்பாவை பொடி போடறதை நிறுத்த சொல்லு". இது எப்படி தெரிந்ததோ அதன் பின்பு என்னிடம் பொடி வாங்க சொல்வதில்லை. பொடி யாரு வாங்கறா? 

மனசு கேட்காமல் ஒருநாள் அப்பாவிடம்,  "அப்பா உனக்கு பொடி வாங்கிண்டு வரவா" வேண்டாம்பா.. நா பொடி போடறத விட்டாச்சு..நீ சிரமப்பட வேண்டாம்".  அம்மாவிடம் கேட்டதற்கு, "ஆமாடா.  அப்பா ஒரு வாரமாவே போடலை. நானும் கேட்டேன். விட்டாச்சுனானு சொன்னா" 

மனது ஏனோ லேசாக வலித்தது எனக்கு. 

இப்போது நினைத்தால் கண்கள் கலங்குகிறது. நான் இன்று ஆங்கிலத்தில் கொஞ்சம் எழுதுவதற்கு காரணம் அப்பா. இப்போதும் நான் படிப்பது இந்து பேப்பர்தான்.

அப்பா தான் இல்லை.  

சே... கேவலம். முடி வெட்ட எவ்வளவு சண்டை அப்பாவுடன். இன்றும் முடி வெட்டும்போது அப்பா ஞாபகம்.

அப்பா தான் இல்லை. 

அப்பாவின் ஞாபகார்த்தமாக நான் எடுத்து வைத்து கொண்டது அந்த

#பொடிடப்பா மட்டும் தான். இன்றும் என்னை பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது. என்னை என்ன பாடுபடுத்னாய் என்று.

அப்பா,  எங்கப்பா இருக்கே?  வாப்பா! நான் பொடி வாங்கித்தருகிறேன் என்று இப்போது கதறலாம் போல் இருக்கிறது.  

ஒன்று மட்டும் நிச்சயம். 

அப்பாவோட கண்டிப்பு இல்லேனா நம்ம வாழ்க்கை நிச்சயம் #தாறுமாறு தர்பார் தான்.  அதே மாதிரி அந்த நேரங்களில் அம்மாவோட அரவணைப்பு இல்லை என்றாலும் வாழ்க்கை தாறுமாறு தான்.

பெற்றோர்களை அவர்கள் வாழும்போதே #போற்றி வழிபடுங்கள் நண்பர்களே.  

அப்போதுதான் வாழ்க்கை வெல்லம் போல #சுவைக்கும். நினைவுகளை அசை போடும்போது ிக்கும்.

படித்து முடிப்பதற்குள் கண்ணில் ஜலம் நிறைந்து விட்டது.

  • 1392
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்