- · 5 friends
-
I
சகஸ்ரநாமம் ஒலிக்க செய்வோமே.....
ஒரு இருபது இருபத்தைந்து வருடம் முன்பு கூட நம் ஶ்ரீவைணவர்கள் மட்டுமல்ல பிராமணர்கள் பலர் இல்லத்தில் மாலை அந்தி சந்தி நேரம் சகஸ்ரநாமம் சேவிக்கும் வழக்கம் அல்லது ஆடியோவாக ஓட விட்டு கேட்கும் பழக்கம் இருந்தது
தற்போது கூட நம் வானமாமலை திருவல்லிகேணி திருமலா திருப்பதி போன்ற பல திவ்யதேசங்களில் மாலை நேரம் கோயில்களில் ஊருக்கே கேட்கும்படியாக சகஸ்ரநாம ஒலியை ஒலிக்க செய்கிறார்கள்
அதேபோல் முன்பு ஊர் பெரியோர்கள் ஒன்றுகூடி மாலையில் வீட்டில் சேவிப்பதை போலவே கோயிலில் கொடிமரத்தின் அருகே அல்லது கருடன் சன்னதி அருகே குழந்தைகளையும் கூட்டிவைத்து சகஸ்ரநாமம் சேவிப்பர்/ சொல்லியும் கொடுப்பர்
இன்னும் சொல்லபோனால் 1969-73 ல் இந்தியாவில் வந்த உணவு பஞ்சம் மற்றும் வறட்சியினால் மக்கள் இன்னலுற்ற போது
முன்னோர்கள் சொல்லிவைத்த படியாக இல்லத்திலும் கோயிலும் சகஸ்ரநாம பாராயணம் என ஆரம்பித்து விடாமல் சொல்லி வந்தனர்/ சொல்லி தந்தனர்
ஆனால் இன்று 80% பிராமண இல்லங்களில் இந்த சகஸ்ரநாம பாராயணம் மாலையில் கூட இல்லாமல் போய்விட்டது
காரணம் வேலை அவரவர்கள் அதிகநேரம் மற்றும் காலை மாலை என மாறிமாறி வேலை செய்ய வேண்டியிருந்ததால் ஒழுங்காக பாராயணம் செய்ய இயலவில்லை
இதனால் ஊர் மட்டும் தேசத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு இல்லங்களிலும் ஏதோ ஒருவகையில் கஷ்டம் கோபம் மனத்தாங்கல் பிரிவு என வந்து விட்டது
அன்பர்களே இந்த கொடிய வியாதியினால் ஊர் உலகம் துன்புறும் இக்காலத்திலாவது நாம் ஒவ்வொருவரும் அவரவர் இல்லத்தில் மாலை சந்தியாவந்தனம் முடித்து ஒரு பதினைந்து நிமிடம் இந்த சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வோம்
பாராயணம் செய்தால் என்ன நன்மை என கேட்பவர்களுக்காக அந்த சகஸ்ரநாமத்தில் பலஸ்ருதியில் சொல்லியுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டிகிறோம் கவனியுங்கள்
பவதி அரோகோ த்யுதிமான் பலரூப குணான்வித
அதாவது இந்த சகஸ்ரநாமாவை சேவிப்பதால் சேவிப்பவனும் அவன் குடும்பமும் ரோகமற்றவன் ஆகி வன்மை அழகு குணம் மிக்கவன் ஆவார்கள்
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தான் முச்யேத பந்தனாத்
இன்னும் சொல்லபோனால் பலவித வியாதிகளால் முன்னரே பாதிக்கப்பட்டு உள்ளவ்களே ஆனாலும் அந்த வியாதி ஒழியப்பெறுவர்
பலவிதமான சோகத்திற்கு ஆட்பட்டவர் அதில் இருந்து விடுதலை பெறுவார்
ந வாஸுதேவ பக்தானாம் அஸுபம் வித்யதே க்வசித் ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவோபஜாயதே
அதாவது வாஸுதேவனான அந்த க்ருஷ்ணனின் நாமாவை சொல்லும் பக்தனுக்கு எதிலும் அமங்களம் என்பதே இல்லை மேலும் அவனுக்கு பிறப்பிறப்பும் கிழவயது எமபயம் துன்பங்கள் நோய்கள் என எதுவும் உண்டாகாது
ஆர்த்தா விஷண்ணா ஶிதிலாஶ்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா
ஸங்கீர்த்ய நாராயண ஶப்த மாத்ரம் விமுக்த துக்கா ஸுகினோ பவந்து
அதாவது ஊழிமுதல்வனான ஶ்ரீமன் நாராயணரின் இந்த ஸஹஸ்ரநாமங்களை சொன்னாலே ஆபத்தில் உள்ளவன் உடலால் உள்ளத்தால் சோகவசமானவன் பித்துபிடித்தவன் அல்லது மனம் உடைந்தவன் ஒரு பெரும் ஆபத்தை எதிர்நோக்கி நடுங்குபவன் உலகை அச்சுறுத்தும் கொடூர வியாதிபரவலில் சிக்கியவன் என அவரவருக்கான எல்லா கஷ்டங்களும் பூரணமாக நீங்குவதோடு சௌக்யமாக சுகமாக வாழ்வார்கள்
இதையே தான் ஒரே வரியில் வைத்யோ நாராயணோ ஹரி என்றனர் முன்னோர்
அதாவது ஶ்ரீமன் நாராயண நாமமே எல்லா வித வியாதிக்கும் பரம ஔஷதம் என்றனர் முன்னோர்
அன்பர்களே இனியாவது தினமும் மாலையில் ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதோ அல்லது செய்வதை கேட்பது என செய்வோமா
எனக்கு வயதாகி விட்டது பகவானின் சகஸ்ரநாமாவை என்னால் முழுவதும் சொல்ல அல்லது ஆடியோவாக கேட்க இயலவில்லை என்பவர்கள்
அச்யுதா அனந்தா கோவிந்தா என்ற இந்த நாமத்தை மட்டுமாவது உச்சரிக்கலாம்
ஏனெனில்
அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி ஸகலா ரோகா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
அச்சுதா அனந்தா கோவிந்தா என்ற நாமத்தை சொல்லுவதால் எல்லா ரோகமும் ஓடிவிடும் இது ஸத்யம் ஸத்யம் என ஸத்தியம் செய்து சொல்லியுள்ளனர் பூர்வர்கள்
இன்னும் சிலர் அந்த மூன்று நாமாவை கூட சொல்ல இயலவில்லை நாங்கள் என்ன செய்வது
என்பவர்கள் அதே சகஸ்ரநாமாவில் ஈஸ்வரன் தன் பார்வதிக்காக சொன்ன
ஶ்ரீராம ராம ராமேதி என்று ராம நாமத்தை சொல்லியபடியாவது இருக்கலாம்
இந்த ராம நாமத்தை பற்றி
ஸ்ருதி ஸ்ம்ருதி புரணேஷு ராமநாம ஸமீரிதம்
தந்நாம கீர்த்தநம் பூய தாபத்ரய விநாஸனம்
என வேதங்களில் ஸ்ம்ருதிகளில் புராணங்களில் ராம நாமத்தின் பெருமையாக அதாவது பூய தாபத்ராய விநாஸனம் என நமக்கு நன்கு எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது
அதாவது அத்தகைய ராம நமாவையாவது ஸங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு
ஆதயாத்மிகம்
ஆதிபௌதிகம்
ஆதிதைவிகம்
என்ற மூவகைத் தாபங்களும் அகன்று விடுமாம் (அது என்ன மூன்றுவகை தாபம்)
அதாவது
நாம் ஒரு காரியத்தை செய்ய தொடங்கும்போது அதற்கு மூன்று வகையிலான இடைஞ்சல் வரலாமாம்
முதலில் நம்மாலேயே வரும் இடைஞ்சல் ஒருவகை இதற்க்கு ஆத்யாத்மிகம் என பெயர்
மற்றொன்று நம்மைத்தவிர நம்மை சார்ந்த சாராத்மற்றவர்களால் வரும் இடைஞ்சல் இதற்க்கு ஆதிபௌதிகம் என பெயர்
மூன்றாவது அந்த காரியத்தைக்கு என இயற்கையாகவே அல்லது இயற்க்கை சூழ்நிலையால் வரும் இடைஞ்சல் அதற்குப் பெயர் ஆதிதெய்வீகம் என்பர்
உதாரணமாக நமக்குப் பிடித்த அல்லது ஆசையாக தற்காலத்தில் லேப்டாப்பில் ஒரு விளையாட்டை அல்லது பகவத் விஷயத்தை (அடியேனை போல் கைபேசியில் பதியும் போதோ) விளையாடிகொண்டோ பார்த்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள
அந்த நேரம் பார்த்து நமக்கு திடிரென வயிறு வலி அதனால் விளையாட கேட்க இயலாமல் போகலாம் இது நமக்கு நம்மிடம் இருந்தே வரும் ஒருவித இடைஞ்சல்
அல்லது ஆர்வமாக ( பதியும் போது அதை கெடுக்கும் விதமாக) விளையாடி கொண்டோ கேட்டுகொண்டோ இருக்கும் போது அந்த சமயம் பார்த்து வீட்டில் அல்லது பக்கத்திலிருப்பவர்கள் நம்மை விளையாட அல்லது கேட்கவிடாமல் அதிகமாக சத்தம் பேசிகொண்டோ சப்தம் போட்டுகொண்டோ இருந்தார்கள் என்றால் இது அந்த நேரம் மற்றவர்களால் நமக்கு வரும் இடைஞ்சல்
ஒருவேளை அந்த சமயம் பார்த்து இடி மின்னல் (இப்போ இங்கே இதை பதியும் போது கூட லேசான இடியுடன் சிறுமழை பெய்கிறது) அல்லது மின்சாரம் ( இன்னும் போகலை) போய்விடுகிறது என்றால் இது அந்த விளையாட்டுக்கு பகவத்விஷயம் கேட்பதற்க்கு இயற்கையால் இயற்கையாகவே உண்டுபண்ணபடும் இடைஞ்சல்
இப்படியாக மூன்று வகையாக வரும் இடைஞ்சல்களும் (தாபங்களும்) ராம நாமாவை சொல்லுவதால் விலகிவிடுமாம்
எனவே அன்பர்களே இனியாவது தினமும் மாலையில் சகஸ்ரநாம பாராயணம் செய்வோம்
வயதால் உடலால் சகஸ்ரநாமம் சேவிக்க இயலாவிட்டால் த்ரிகடுகமான அச்சுதா அனந்தா கோவிந்தா (ஆசமனம் செய்யும் போது சொல்லும் நாமா) எனவாவது அந்த மாலை நேரம் சொல்லி கொண்டே இருப்போம்
அதுவும் முடியவில்லையா இருக்கவே இருக்கு ஶ்ரீராம நாமம் அதையாவது அந்த மாலையில் பாராயணம் செய்து கொண்டே இருப்போம்
நமக்கும் தேசத்துக்கும் வரும் இடர்களை நோய்களை நாம் முதலில் சேவித்து மற்றவர்களையும் சேவிக்க வைத்து ஊரையும் வீட்டையும் நாட்டையும் மூன்றுவித இடையூறுகளில் இருந்து பாதுகாப்போம்
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·