Support Ads
 ·   ·  1374 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பேராசை (குட்டிக்கதை)

ஒரு நாட்டில் ஒரு மன்னர் இருந்தார்.

அவர் பக்கத்து நாட்டின் மீது படையெடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அதையும் தன்னுடைய நாட்டோடு இணைத்து விட வேண்டும் என்பது அவரது ஆசை.

எப்போது படை எடுக்கலாம் என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு பெரியவர் அவரை தேடி வந்தார்.

அவர் அடிக்கடி வருவார்.

மன்னரிடம் பேசிக் கொண்டிருப்பார்.

இப்போதும் அப்படித்தான் வந்தார்.

என்ன மன்னா யோசனை என்றார் இவர்.

தன்னுடைய யோசனையை சொன்னார் மன்னர்.

இந்த சமயத்தில் மன்னருக்கு தாகம் எடுத்தது.

தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது.

உடனே அங்கே இருந்த ஒரு அரண்மனை பணியாளரை கூப்பிட்டார்.

போய் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றார்.

அந்தப் பணியாளர் போனார்.

ஒரு குவளை தண்ணீர் கொண்டு வந்தார்.

ராஜாவிடம் நீட்டினார்.

ராஜா அதை வாங்கி குடிப்பதற்காக வாய்க்கு அருகில் கொண்டு போனார்.

அந்த நேரம் பார்த்து மன்னா கொஞ்சம் பொறுங்கள் என்றார் இந்த பெரியவர்.

ஆவலோடு குடிக்க போன மன்னர் அப்படியே நிறுத்திக் கொண்டு பெரியவரை பார்த்தார்.

மன்னா இப்போது உங்களைவிட வலிமையுள்ள ஒரு சக்தி உங்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து விட்டால் அல்லது உங்களை குடிக்க விடாமல் தடுத்தால் இந்த குவளை தண்ணீரை என்ன விலை கொடுத்து வாங்குவீர்கள்?

என்று கேட்டார்.

இப்போது எனக்கு இருக்கின்ற தாகத்துக்கு என்னுடைய அரசாங்கத்திலே பாதியாவது கொடுத்து இந்த தண்ணீரை வாங்கவும் தயங்க மாட்டேன் என்றார் மன்னர்.

சரி இப்போது தண்ணீரை குடியுங்கள் என்றார் பெரியவர்.

மன்னர் ஆவலுடன் அந்த தண்ணீரை குடித்து முடித்தார்.

அதன் பிறகு கொஞ்ச நேரம் தன்னுடைய படையெடுப்பை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து மறுபடியும் இந்த பெரியவர் கேட்டார்.

மன்னா நீங்கள் ஒரு குவளை தண்ணீரை குடித்து முடித்து விட்டீர்கள்.

இப்போது அந்த தண்ணீர் உங்கள் உடம்பை விட்டு வெளியே வரக்கூடிய பாதை அடைப்பட்டு போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

அதை வெளியேற்றுவதற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்வீர்கள்? என்று கேட்டார்.

மன்னர் யோசித்தார் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டால் என்னுடைய அரசாங்கம் முழுவதையும் அதற்கு ஈடாகத் தரவும் தயங்க மாட்டேன் என்றார்.

இப்போது அந்த பெரியவர் சொன்னார்.

எந்த அரசாங்கத்தின் மதிப்பு ஒரு குவளை தண்ணீர் அளவுக்கு கூட இல்லையோ அந்த அரசாங்கத்தை அடைய வேண்டும் என்கிற பேராசையில் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்கள் கூடவே சண்டையிடுகிறார்கள்.

இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றார்.

மன்னருக்கு இப்போது தான் அர்த்தம் புரிந்தது.

மனதில் தெளிவு உண்டானது.

தன் மனதில் உண்டான வெறியை விரட்டி அடித்தார்.

அதன் பிறகு நிம்மதியாக ஆட்சி புரிந்தார்.

ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.

அதாவது ஆசை பேராசையாக மாறுகிறது.

அப்புறம் அது வெறியாகிறது.

ஆசைகளை அடக்க கற்றுக் கொண்டாலே போதும் மனிதன் முழுமை அடைந்து விடுவான்.

  • 2053
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய