Support Ads
 ·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

இட்லிக்கடை கிட்டு மாமா - சிறுகதை

கிட்டு மாமாவை யாருக்கெல்லாம் தெரியும், 

அவரை தெரியணும்னா திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் தாண்டி தெப்பக்குளம் பக்கம் காலேஜ், பின்புற ரோட்டில் பார்க்கலாம், 

அதுவும் ஆறு மணிக்கு மேல் தான் ஒரு தள்ளு வண்டி, மூனு மடக்கு டேபிள், ஸ்டூல் 

ஒரு தண்ணி கேன், கூட மாமி, சின்ன பையன் உதவிக்கு, 

இவருக்கும் 65வயசு இருக்கும், 

காவி வேஷ்டி, மேல துண்டு போட்டுனு பம்பரமா தோசை, கல்லில் தோசை போடுவார், பக்கத்துல இட்லி வேகும், 

சாப்பிடுவதும் போவதுமா இருப்பார்கள்,, வேலை முடிந்து போகும் ஹாஸ்டல் பெண்கள் டிபன் வாங்கி போவார்கள், வீட்ல சாப்பிட்ட திருப்தி வரும்,, 

மூனு சட்னி, மிளகாய் பொடி என்னை குழப்பி 

இருக்கும், 20ரூ இருந்தா நிம்மதியா சாப்பிடலாம்,, 

11மணிக்கு முடியும்,, ஏன்னா.. அந்த பக்கம் உள்ள, பஸ் டிரைவர், கண்டக்டர், லாரி, ஆட்டோ காரர், கை வண்டி காரர்கள் என

தினம் சாப்பிடுபவர்கள் உண்டு,, 

பேசவே மாட்டார்.. ஆனா பேசினா எல்லா பாஷையும் பேசுவார், எங்கோ வட நாட்டில் வேலை பார்த்தாராம், 

திருச்சி பொன்மலை தான் பூர்வீகம், 

லீவுல ஊருக்கு வந்தவர், அப்பா இறந்து, அம்மாவும் இறந்ததால,, அவர் அப்பா கேன்டீன்ல வேலை பார்த்த இடத்தில், 300ரூ கடன், 

அவர் கடனை அடைக்க, வேலை பார்த்தார்,, ஹோட்டல் நஷ்டம் வந்ததால், ஓனர், அவரின் பையன் சென்னைல இருந்ததால்,, அங்கேயே போய்ட்டாரு, 

போகும் போது,, கொஞ்சம் பாத்திரம், கரண்டி,அடுப்பு  எல்லாம் கொடுத்து,, இதை நீ வச்சுக்க,, 

உங்க அப்பா ரொம்ப நாள் உழைப்பு,, கடை ஓடினா, உன்னை விட மாட்டேன்,, கடனுக்கு உன்னை வச்சுருக்கேன்னு நினைச்சியா,, உங்க அப்பா,, என்கிட்ட சொல்வார், எனக்கு சொந்த பந்தம் இல்லை,, 

என் பையன் கஷ்டம்னா நீங்க உதவனும்,, அதுக்கு தான் உன்னை நிறுத்தி வச்சேன், 

அவர்  சொன்னார்னு சொல்லி கொஞ்சம் 

பணமும் தந்தார், 

அது முதல், இந்த ரோட்டில் கடை,, இந்த இடம், நாக நாதர் கோவிலுக்கு சொந்தம்,

கோவிலுக்கு கொஞ்சம் வாடகை தந்து, 

வியாபாரம், 

அந்த மாமியும் அவரும், பக்கதில், ஸ்டோர் 

வீட்டில், வாடகைக்கு உள்ளனர்,

எல்லோரும் ரொம்ப மரியாதையா நடந்தப்ப

கண் த்ருஷ்டி போல், அந்த சம்பவம், 

"  என்ன ஐயரே... டிபன் தருவியா.." என்றார், 

அந்த பகுதி கவுன்சிலர்.. பாண்டியன், 

நல்ல குடி, நெடி..மாமி,, கன்னத்தில் போட்டு கொண்டாள்..பிள்ளையாரப்பா என்ன சோதனை,, 

அவன் அந்த பகுதியில் அடாவடி வசூல் செய்பவன், கூட இரண்டு தடியன்கள்,, 

எப்போதும் ஆடிகொண்டே, கத்தியவாறு, செல்வான், 

இன்று என்ன,, இங்க... 

சாப்பிட்டு.. எழுந்து சென்றான்,, 

இங்க ஏன் வந்தான்,, என

ஒரு நிமிஷம் யோசித்தார் கிட்டு மாமா,, 

வியாபாரம்.. யாரானா என்ன... 

"பணம் தராம போறேளே.. என்றாள்..மாமி. 

"ஏ மாமி,, என்கிட்டயே பணம் கேட்பியா,, "

தோசையை நிறுத்தி,, கிட்டு மாமா ஓடி வந்தார்,, 

"என்ன அண்ணா பணம் தராம போலாமா " என..

போதை உச்சி அவரை பிடித்து தள்ளினான்,, 

மாவு குண்டாவை தள்ளி விட்டான்,, 

பாவி.. பாவி,, பிள்ளயார் தண்டிப்பார் 

என கத்தி மாமாவை, தூக்க போனா,, 

"ஏன்யா, ஐயிரு நீ,, என்னையே,, குரல் குடுக்கரயா.. என பூனலை பிடித்து இழுக்க." வந்தான், 

வந்ததே கோபம்,, கிட்டு மாமாவுக்கு..

கையில் கிடைத்த மூங்கிலை ஒரு சுத்து சுத்தினார், 

ஒரு தள்ளில் விழுந்தான்,, 

"விட்டுடுங்க சாமி.." என

உடன் வந்த இருவரும் கெஞ்சினர், 

"பிராம்மணன் தாண்டா,, வேலையை  வச்சு சாதாரணமா நினைக்கலாம், ஆனா, இந்த பூனல் வேதஸ்வரூபம் டா... தொலைச்சுடுவேன்,, "

"நீ பண்ற ரவுடித் தனம் என்னாலயும் பண்ண முடியும்,, "

"உழைச்சு சாப்பிட்றேன்,,, சிலம்பம், குஸ்த்தி கத்தவன் தான்... பார்க்கிறாயா என மூங்கிலை ரெண்டு சுத்து சுத்தினார் மீண்டும்.. "

ஜனம்  பூரா வேடிக்கை பார்த்தது,,

"நாளைக்கு நீ காலி அய்யரே... என் ஆட்களுடன் வந்து என்ன பண்றேன்,, ஓடி போயிடு,, கட்சிக் காரன்.. நான்,, "என கூறி  சென்றான் கவுன்சிளர்.. 

வேறு மாவு எடுத்து,, வேலைய துவங்கினார், 

கேள்விப்பட்ட வாடிக்கையாளர்கள்,, சாமி கம்பளைண்ட் பண்ணுங்க,, 

"நாளைக்கு நாங்க உங்க கூட இருக்கோம்,, 

கவலைப்படாத சாமி என்றனர்,," கூலிக் காரர்கள், 

அந்த வேதனையில் கூட கிட்டு மாமாவுக்கு சந்தோசம்,, "நாம நல்லா தான்டா வாழ்ந்திருக்கோம் "என பட்டது மனதுள்.. 

மறுநாள் மாலை,, வழக்கம் போல், உச்சி பிள்ளையாரை வணங்கி,, வியாபாரம் ஆரம்பிச்சார்,, 

நேரம் ஓடியது,, 

கடை முடிந்தும்,, கவுன்சிலரை காணோம்,, 

அடுத்த நாள், மாலையும் காணோம்,, 

மூடும் அரை மணி முன் இருவர் சாப்பிட்டு கொண்டே பேசினர், 

 "உனக்கு விஷயம் தெரியுமா.. சண்டை போட்டானே, சாமிகிட்ட,, "

"போகும் போதே லாரி மோதி,, தலைல அடி,, "

"GH ல icu ல இருக்கான்,, ஏதோ,, கிடைக்காத

ரத்தமாம்,,, அதனால், ஆபரேஷன் பண்ண ரத்தம் வர காத்திருக்காங்கலாம்,, TV ல கூட 

வந்துது.. "

சாமி போல் நல்லவங்க மனம் நொந்தா,, 

தண்டனை கிடைக்காது போகுமா.. 

நான் ரெண்டு நாள் சம்பளம் வரல, பணம் இல்லைனு, இரவு சாப்பிட வரல,, 11மணிக்கு வந்து,, தூங்கின என்னை எழுப்பி,, இட்லி பொட்டலம் தந்தார்,, சாப்பிடு,, பணம்,, எங்க போகுதுன்னார்,, "

"எனக்கு அழுகை வந்துடுத்து... "

"ஆனா, சாமிக்கு வந்துது பார் கோபம் .கவுன்சிலர் மேல்..  "

சினிமா போல் இருந்தது என முனுமுனுத்து பேசினர், 

கிட்டு மாமா, கடை மூடினார், 

மனைவியை வீட்டுக்கு போ சொல்லிட்டு,, 

ஹாஸ்பிடல் போனார்,, ICU ல கவுன்சிளர் 

பாண்டியனை பார்க்க.. 

"என்ன,..", என்ற டாக்டரிடம், 

அவர் தெலுங்கு என்றதும் தெலுங்கில், 

"sir என் blood எடுத்து பாருங்க,,, match ஆகும்.." என்றார், 

பெரியவரே,, உங்க வயசுல,, வேண்டாம், 

நிறைய பேர்க்கு பார்த்து ஒத்து வரல,, 

இல்லை sir கண்டிப்பா match ஆகும் என்றார், 

நர்ஸ், இவரை கூட்டிட்டு போங்க, லேப்க்கு, சிறிது நேரத்தில் check செய்து, ரத்தம் பொறுந்தி .. ஒரு மணியில்,,, 

ஆபரேஷன் முடிந்தது... 

அங்கேயே அமர்ந்திருந்தார்.. கவலை படாதம்மா.. நல்லாகிடுவார்..

குடும்பத்தினர் நன்றி என்றனர்,,

காலை, கண் விழித்ததும்,, டாக்டர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த கிட்டு மாமாவிடம் வந்து,, 

"Sorry பெரியவரே...உண்மையில் நல்ல மனசு.. "

"வாங்க.. "என கூட்டி சென்றார்,, 

ICU  விற்கு,, 

கட்டிலில், இருந்த கவுன்சிலர் பாண்டியன் கை கூப்பிட வணங்கினான், 

கண்ணீர் வழிந்தோடியது,, 

தட்டி கொடுத்தார். 

பூனல்ல கை வச்சதால டென்ஷன் ஆகிட்டேன், 

தர்மம்,,, அது 

இப்போ உனக்கு ரத்தம் குடுத்தது,, இதுவும் தர்மம் தான்,,

உனக்கும் ஒரு குடும்பம் இருக்கு, அதனால...  மனிதம் கூடியது, என்றார் கிட்டு மாமா, 

சீக்கிரம் சரியாகிடும்... எதையும் யோசிக்காம தூங்கு... 

வாழ்த்துக்கள்... என கூறி சென்ற கிட்டு மாமாவை எல்லோரும் பார்த்து கொண்டே இருந்தனர்,, நன்றியுடன்....

  • 344
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்