- · 5 friends
-
I
குறிப்பிட்ட ஆயுள் காப்புறுதி தொகை பணத்தினை உயிர் இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கியே தீரவேண்டும்
“குறிப்பிட்ட ஆயுள் காப்புறுதி தொகை பணத்தினை உயிர் இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கியே தீரவேண்டும்”
இப்படியொரு தீர்ப்பினை சில வருடங்களின் முன்பு கனடிய உயர் நீதிமன்றம் இரு சம்பவங்களில் கனடாவின் காப்புறுதி கம்பனி ஒன்றுக்கு வழங்கி அதனை உடனடியாக அமூல்படுத்துமாறு உத்தரவிட்ட சம்பவம் நீதித்துறை வரலாற்றிலும் பதியப்பட்டுள்ளது.
ஆயுள் காப்புறுதியில் உயிர் இழப்பு நடந்தால் எதுவிதமான காலதாமதமும் இல்லாமல் குறிப்பிட்ட தொகை பணம் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு போய் சேர்வது என்பது எமது ¼நூற்றாண்டுக்கு மேற்பட்ட கனடாவின் காப்புறுதி தொழில் துறையில் சந்தித்த அனுபவங்களாகும்.
ஆனால் இங்கு உயிர் இழப்பினை எதிர்கொண்ட இருவரும் இரு வெவ்வேறு வகையான கொடிய குற்ற செயல்களை செய்யும்போது மரணமானவர்கள் ஆவார்கள்.
இங்கு குற்ற செயல்களின்போது ஏற்பட்ட மரணம் என்பதால் காப்புறுதி கம்பனி உயிரிழப்பு நட்டஈடு வழங்குவதனை நிராகரித்தது.
அந்த நிராகரிப்பு இறுதியில் கனடாவின் உயர்நீதிமன்றம் வரை சென்றிருந்தது.
கனடாவில் வசித்த திரு. றோஜர் அராபிக் ஐஸிஸ் (Mr. Roger Arabic Isis) என்ற முஸ்லீம் தீவிரவாதி ஒருவர் கடந்த ஜனவரி/22/1994 இல் மொன்றியல் டோர்வில் விமான நிலையத்தில் (MONTREAL DORVAL AIRPORT) தனித்து நின்ற விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு பொருத்த போய் தவறுதலாக அது வெடித்து மரணமாகியிருந்தார்.
GOULET vs TRANSAMERICA INSURANCE COMPANY
என்னும் வழக்கின் முடிவில் அவரின் ஆயுள் காப்புறுதி தொகை $50,000 டொலர் அவரது மனைவிக்கு வழங்கவேண்டும் என கனடிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இரண்டாவது நபரின் மரணத்தின் காரணம் இன்னொரு மாறுபட்ட வகையில் பயங்கரமானதும் விசித்திரமானதுமாகும்.
திரு. போல் ஓல்ட்பீல்ட் (Mr. PAUL OLDFIELD) என்பவர் சுமார் முப்பது ஆணுறைகளில் போதை வஸ்து தூள்களை (cocaine) நிரப்பி அதனை தமது வயிற்றில் கட்டி மறைத்துக் கொண்டு விமான பிரயாணத்தினூடாக வரும் போது தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா (Bolivia) நாட்டு விமான நிலையத்தில் திடீர் இருதய நோய் காரணமாக ஏப்ரல் 27/1996 இல் மரணமாகியிருந்தார்.
OLD FILD vs TRANSAMERICA INSURANCE COMPANY
என்னும் இவ் வழக்கின் முடிவில் அவரின் ஆயுள் காப்புறுதி தொகை $250,000 டொலர் அவரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என கனடிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்ற செயலின் போது உயிரிழப்பு நடந்தால் ஆயுள் காப்புறுதி கொடுப்பனவு இல்லை என்பது காப்புறுதி சட்ட கோர்வைகளில் இல்லாதிருந்த போதும் காப்புறுதி கம்பனி கொடுப்பனவினை மறுத்திருந்தது.
ஆயுள் காப்புறுதி திட்டங்களில் சேர்க்கும் போது, ஏதாவது கிரிமினல் குற்ற செயல் பதிவுகள் உள்ளதா? என்பதும் புலனாய்வு செய்தே கம்பனிகள் சேர்த்து கொள்வார்கள்.
ஆனால் சேர்க்கப்பட்ட பின்பு அவர் செய்யும் கிரிமினல் குற்ற செயல்களும் அதனால் ஏற்படும் உயிர் இழப்பாலும் அப்பாவிதனமாக நிற்கும் அவரது குடும்பத்தவர்கள் என்றுமே பாதிக்கப்பட கூடாது என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டு, கனடாவின் ஆயுள் காப்புறுதி கம்பனிகளின் சட்ட கோர்வைகளிலும் உறுதி செய்யப்பட்டு பதியப்பட்ட ஆவணமாக உள்ளது.
பொதுவாக காப்புறுதி உடன்படிக்கைகளில் முக்கியமான ஒரு கோட்பாடு இரு பக்கமும் முறையாக பின்பற்றபடல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.
“அதி உச்ச நேர்மையாக, உண்மையாக விசுவாசமாக (Follow up the doctrine of utmost good faith) எதுவிதமான மறைப்புகளுமின்றி தகவல்களை வழங்கி உடன்படிக்கைகளில் சேர்ந்து கொள்ளுங்கள்.
அங்கு காப்புறுதி என்பது என்றும் கைவிடாது”.
அதனையும் மீறி ஏதாவது தப்பு நடந்தால் காப்புறுதி சட்டங்களும், நீதி துறைகளும் என்றும் பாதுகாப்பு அரணாகவிருக்கும் என்பது காப்புறுதியின் தத்துவ கோட்பாடுகளில் உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிலைப்பாடுகளில் எந்தவொரு அநியாயங்களும் நடைபெற சாத்தியமேயில்லை என்பதனையும் புரிந்துக் கொள்ள முடியும்.
கனடாவில் தங்களின் காப்புறுதி தேவைகளுக்கு அழையுங்கள்!
சிவ. பஞ்சலிங்கம்
Phone: 416-321-0999
Cell: 416-990-4908
Email: [email protected]
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·